WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, December 27

குப்தாவின் தீர்க்க தரிசனம்

MTNL தோழர்களுக்கு ஓய்வூதியம் 

ஏறத்தாழ 43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாளாக  BSNLக்கு இணையான ஓய்வூதியம் தேவை என்று கோரி வருவது அனைவரும் அறிந்தததே. அதனை  தற்போது மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.. 

BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY ஊழியர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.

இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.. 

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.. 

இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குப்தா முன்மொழிந்த யோசனை. ஏதாவது ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்றை பெற முடியும் என அவர் நம்பினார்.

BSNL உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர். 

MTNL ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றால் மிகையாகாது.
          செய்தி காஞ்சி வலைத்தளம் ..........

Thursday, December 26




CPIக்கும் , தோழர் RNKஅவர்களுக்கும் 89வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!

The Tamil Nadu unit of the Communist Party of India (CPI) is gearing up to celebrate two anniversaries. Thursday is the 88th anniversary of the founding of the party, and is also the 88th birthday of its veteran leader R Nallakannu. The party is set to celebrate these events at a function to be held at its state headquarters in Chennai, with Nallakannu hoisting the party flag and delivering a speech.

Tuesday, December 24

                                        

 தந்தை பெரியார் நினைவு நாள்!!!!


இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள்!!!!

Saturday, December 21

 காரைக்குடி
தோழர். இரா. பூபதி 
SDE அவர்களின்  
பணி நிறைவு விழா 
மற்றும் மணி விழா
22/12/2013 - ஞாயிறு
காலை 10 மணி
அமராவதி மகால் - காரைக்குடி
தலைவர்கள் மற்றும்
தோழர்கள் பங்கேற்பு
தோழர்களே .. வாரீர்..
NFTE-BSNL கொடுத்த முக்கியமான சில பிரச்னைகளை ஊழியர் தரப்பு  செயலர் தோழர் அபிமன்யூ, இந்த கூட்டத்தின் விவாதத்திற்கு அனுப்பவில்லை !

அதில் முக்கியமானவை : மகளிர்க்கு மாதம் ஒரு நாள் சிறப்பு சிறு விடுப்பு, NE-11லிருந்து NE-12 பதவி உயர்வுக்கான காலத்தை 8 ஆண்டுகளாக உள்ளதை குறைக்கவேண்டும் உள்ளிட்டவை.

  இது முறைதானா ? ஊழியர் தரப்பு செயலருக்கு வீட்டோ பவர் உண்டா ? இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன
செய்வது என்று BSNL நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கேட்டு
NFTE-BSNL தலைமை கடிதம் எழுதி உள்ளது......... 
..............?
அடுத்து நடைபெறவுள்ள தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு கொடுத்துள்ள சில பிரச்னைகளை நிர்வாகம் தன்னிச்சையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் drop  செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று BSNL நிர்வாகத்திற்கு ஊழியர் தரப்பு  செயலர் அபிமன்யூ கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 ஆனால், இவரோ, தன்னை  ஒரு அதிகாரி போல பாவித்துக்  கொண்டு, NFTE-BSNL கொடுத்த பிரச்னைகளை drop செய்தது சரியா என்று சிந்தித்து பார்ப்பாரா ???????????????!

Monday, December 16

டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி-கவர்னர் பரிந்துரைத்தார் !!

கடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஆட்சி அமைக்க முன் வரவில்லை.
எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து ஆளுநர் இன்று உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு பரிந்துரைத்தார்.

Sunday, December 15

மண்டேலா உடல் இன்று அடக்கம்!!!


மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் இன்று (15-12-2013)ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

புதிய மக்களவை ஜூன் 1ல் அமைக்கப்படும் : மார்ச் மத்தியில் தேர்தல் அறிவிப்பு



புதிய மக்களவை அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதிக்குள் அமைக்கப்பட்டு விடும். பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.  மார்ச் மாதம் மத்தியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கமிஷன் சூசகமாக கூறியுள்ளது.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து  முடிந்ததை தொடர்ந்து மக்களவை தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகி விட்டது. மே மாத மத்தியில், இறுதியில் நடக்கலாம் என்று தெரிகிறது. தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இப்போதே தயாராகி விட்டது. இப்போதுள்ள 15வது நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் மே மாதம் 31 ம் தேதி முடிகிறது. அப்படிப்பார்த்தால் ஜூன் 1 ம் தேதிக்குள் 16 வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு விட வேண்டும்.

இப்போதுள்ள கணக்குப்படி 78 கோடி பேர் வாக்காளராக உள்ளனர். மக்களவை தேர்தல் நடத்த நாடு முழுவதும் 8 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட 11 லட்சத்து 80 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.  வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பணி  தொடர்ந்து நடப்பதால் பல மாநிலங்களிலும் புதிய வாக்காளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் வெளியிடவும் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

Friday, December 13

  NFTE ன் பாரம்பரியம் போராட்டப்பாதை என்பதை வலியுறுத்தும் நோக்கில் சுமார் 1000க்கும் மேற்பட்ட NFTE தோழர்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.

  100க்கும் மேற்பட்ட சென்னை
NFTE தோழர்களுடன் தோழர் C.K.M.  மற்றும்
    தோழர் பட்டாபி                     


Monday, December 9

4 மாநில தேர்தல்: நோட்டாவுக்கு வாக்களித்த 16 லட்சம் வாக்காளர்கள்!!




இடைத்தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஓட்டுப் போட வருபவர்கள், ஓட்டுப் பதிவு எந்திரத்தில் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் இடம் பெற்றுள்ள பொத்தானை அமுக்கி ஓட்டுப் போடுகிறார்கள். ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்கு 2009 பாராளுமன்ற தேர்தலில் 49 ஓ என்ற பாரத்தை நிரப்பிக் கொடுக்கும் முறை அறிமுகமானது.

தற்போது நடந்த 5 மாநில மற்றும் ஏற்காடு இடைத் தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப் பதிவு எந்திரங்களிலேயே வேட்பாளர்களின் சின்னங்களையடுத்து, ‘நோட்டா’ பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள் இந்த பொத்தானை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

இதையடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், டெல்லி சட்டசபை தேர்தல்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘நோட்டா’ வுக்கு வாக்களித்துள்ளனர்,. இதன் மூலம் எந்த வேட்பாளர்களையும் விரும்பவில்லை என்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் ‘நோட்டா’ பொத்தானை பயன்படுத்தி உள்ளனர். 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 5 லட்சத்தில் 88 ஆயிரத்து 411 பேர் ‘நோட்டா’வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

சத்தீஷ்கரில் 90 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘நோட்டா’ ஓட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில தேர்தலில் 47 ஆயிரத்து 972 பேர் ‘நோட்டா’வுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

ஏற்காடு இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான மின்னனு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டா’ பொத்தான் 12–வதாக இடம் பெற்றிருந்தது. இதில் 4 ஆயிரத்து 431 பேர் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை அடுத்து யாரையும் விரும்பாததை தெரிவிக்கும் நோட்டாவுக்கு தான் 3–வதாக அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. 9 சுயேட்சை வேட்பாளர்களில் யாருக்கும் இந்த அளவு ஓட்டுக்கள் கிடைக்கவில்லை

Friday, December 6

அஞ்சலி!!

 தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார் ........ 


நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி, 94வது பிறந்த நாளை கொண்டாடிய மண்டேலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.

 சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக,  கடலூர் லைன் ஸ்டாப் மாநில மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களை விடுதலை செய் என்று எழுப்பிய போர் முழக்கம் இன்றும் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.

நெல்சன்  மண்டேலா மறைவிற்கு
நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி..........

Tuesday, December 3

டெல்லிச் செய்திகள் ..........

   
    SSAக்களை சீரமைக்கபோவதாக நிர்வாகம் 30-11-12 அன்று நடந்த அனைத்துச் சங்க கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

   வருவாய் அடிப்படையில் SSAக்களை இணைப்பதால் ஊழியர்களின் மாற்றல் எல்லை அதிகரிக்கப்படலாம் என்கிற காரணத்தால், சங்கத்துடன் கலந்து பேசிய பிறகே இந்த பிரச்னை பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று NFTE-BSNL வலியுறுத்தி உள்ளது

02-12-2013 : Restructuring of SSAs - Suggestions regarding. Letter No.-TF-21/6, Dated:-02-12-2013


புதிய போனஸ் / PLI திட்டம் பற்றி விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் 9-12/13 அன்று நடைபெறவுள்ளது.

    02-12-2013 : Meeting on 9th December on New Scheme of Bonus/PLI based on Performance Management system. Letter No.-1-5/2012-Restg, dt-29-11-2013.

Sunday, December 1

தண்டிப்பதா? கண்டிப்பதா??



சேலம்மாவட்டச் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் 16/11/2013-ல் நடைபெற்றதாகவும் அதில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தோழர்.சி.கே.மதிவாணன் அவர்களை வன்மையாக கண்டித்ததாகவும் புதிதாக துவக்கப்பட்ட சேலம் மாவட்ட சங்க இணையதளத்தின் மூலம் அறிந்தோம்.

உண்மையான விபரங்களை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இதை நாங்கள் எழுதுகிறோம். தற்போது தமிழ் மாநிலச் சங்கத்தின் தலைவராக இருக்கும் தோழர்.ஹெச்.நூருல்லா 16/11/2013 வரை சேலம் மாவட்டச் செயலாளராக சர்வ அதிகாரத்துடன் செயல்பட்டவர் என்பதை தமிழ் நாட்டுத் தோழர்கள் நன்கு அறிவார்கள்.அவர் மாவட்டச் சங்கத்திற்காக ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்த ஒரு நிலத்தை விற்று எருமைப்பாளையம் என்ற கிராமத்தில் 4043 சதுர அடிக்கு நிலத்தை டிசம்பர்-2009ல் வாங்கியதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர் இந்த நிலம் சம்பந்தமாக முடிவு எடுப்பதற்கும், நிலத்தில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு முடிவு எடுக்கவும்  ஐவர்குழு ஒன்று அமைக்கப்பட்டது. தோழர்.நூருல்லா யாருக்கும் தெரியாமல்;ஐவர் குழுவுக்கும் கூடச் சொல்லாமல் கள்ளத்தனமாக மேற்படி நிலத்தில் 2015 சதுர அடியை பிரித்து தனது பெயரில் 19/2/2010-ல் பத்திரபதிவு செய்து கொண்டார். இது ஒரு நம்பிக்கை துரோகமான செயல் என்பதுமட்டுமல்ல அப்பட்டமான மோசடி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

தொழிற்சங்கத்திடமிருந்து தோழர்.நூருல்லா தன் பெயருக்கு இவ்வாறு கபளீகரம் செய்த 2015 சதுர அடி நிலத்தின் மதிப்பு சுமார் 20 லட்சங்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.இது குறித்து சேலம்மாவட்டச் செயற்குழுவில் பல முன்னணித் தோழர்கள்  கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்க வற்புறுத்தியும் தோழர்.நூருல்லா  தந்திரங்கள் பல செய்து இந்த நிலமோசடி குறித்து விவாதம் நடத்த முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி 2/08/2013 ல் சேலம்மாவட்டத்தின் முக்கிய தோழரும் தமிழ் மாநிலத் துணைத் தலைவருமான பி.ராசா பகிரங்கமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு ஊழியர்களிடம் அதை விநியோகிக்கவும் செய்தார்.

இதன் பின்னரும் தோழர்.நூருல்லாவின் மவுனம் தொடர்ந்துதான் மர்மம்.இதை தொடர்ந்து நமது சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நான்குபேர் ”மவுனம் ஏன்” என்ற தலைப்பில் இதே விஷயத்தை ஊழியர்களிடம் அறிக்கையாக கொண்டு சென்றனர்.  ஆனாலும் “திருடனுக்கு தேள் கொட்டினால் சத்தமிட்டு கதற முடியாது” என்பது  போல தோழர்.நூருல்லாவும் அவரது நண்பர்களும் கள்ள மவுனம் சாதித்தனர்.

நேர்மைக்குப் புகழ்பெற்ற தோழர்.பட்டாபிராமன் தமிழ் மாநிலச் செயலாளராக இருக்கும்போதே இப்படிபட்ட மோசடிகள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் மூடிமறைக்க முயற்சிகள் நடந்ததுதான் இந்த திடுக்கிடும் கதையில் எதிர்பாராத திருப்பம்.இதுதவிர பல முன்னாள் மாநிலச் செயலாளர்கள், மாநிலப் பொருளாலர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் சேலத்தில் முகாமிட்டு இந்த மோசடியை மூடி மறைக்கவும் தோழர்.நூருல்லாவை காப்பாற்றவும் படாதபாடு பட்டனர். அவர்களின் மேலான ஆலோசனைப்படிதான் தோழர்.நூருல்லா 04/11/2013-ல் விருப்ப ஓய்வில் வெளியேறிவிட்டார். இத்தகைய சோதனை காலத்தில் சேலத்தில் உள்ள பல முக்கிய தோழர்கள் சம்மேளத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணனிடம் இந்த மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை  எடுக்க கோரினர். அவரும் தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் காவல் துறையில் இதுகுறித்து 15/10/2013-ல் புகார் மனு அளித்தார். NFTE-BSNL சங்கத்திற்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் ஒரு நபரால் களவாடப்பட்டது குறித்து அக்கறையுடன் காவல் துறையில் புகார் அளித்த காரணத்திற்காக தோழர்.சி.கே.மதிவாணனை சேலம்மாவட்டச் செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டித்திருக்கிறது.

நிலம் மோசடி மட்டுமல்லாமல் இதுகாறும் வசூலான பல லட்ச ரூபாய்க்குப் கணக்கு எதையுமே காட்டாத பழக்கத்தில் இருந்தவர்தான் தோழர்.நூருல்லா.அவர் திடுதிப்பென ஒரு போலிக் கணக்கை; பொய்யான கணக்கை 16/11/2013-ல் சமர்பித்ததும் அதனை அந்த மாவட்டச் செயற்குழு ஒப்புக் கொண்டதாக அறிவித்திருப்பதும் மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை.

தமிழ் நாட்டின் மாநிலச் சங்கத்திற்கு எத்தனையோ உத்தமர்கள் தலைமை தாங்கி வழி நடத்தி இருக்கிறார்கள். இன்று காலம் செய்த கோலம் நிலமோசடிக்காரர்; சங்கப் பணத்தை சுருட்டியவர்; பொய் கணக்கை சமர்ப்பித்தவர் மாநிலச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் வீற்றிருக்கிறார். தவறுகளை சுட்டிக்காட்டிய பிறகும் தவறுக்கு துணைபோகும் தவறினை சேலம்மாவட்டச் சங்கம் தொடர்ந்தால் அது  NFTE-BSNL புகழ்மிக்க பாரம்பரியத்திற்கு பெரும் அவமானத்தையே தேடித் தரும்.எனவே மிகுந்த அடக்குத்துடன் நாங்கள் அந்த மாவட்டச் சங்க தலைமைக்கு விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தோழர்.சி.கே.மதிவாணனை கண்டிப்பதை விட்டுவிட்டு தவறிழத்த தோழர்.நூருல்லாவை தண்டிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

வெளியீடு: காஞ்சி மாவட்டச் சங்கம், சென்னை தொலைபேசி மாநிலம்,.
NFTE வட சென்னை மாவட்டம்

Saturday, November 30

உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியீடு!!!

உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா. இவர் பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இந்நிலையில், 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை Ôகுலைல்Õ என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டு ள்ளது. அந்த பெண்ணின் பெயர் மாதுரி என்று கூறியுள்ள குலைல், அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்.

இளம்பெண்  மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மலைத் தோட்ட திட்டம் தொடர்பாக,  நான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன்.

அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Friday, November 29


"தருமம் மறுபடியும் வெல்லும்"

தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும் என்று பாஞ்சாலி சபதத்தில்  எடுத்துரைத்தான்  புரட்சிக் கவி பாரதி.

  அதுதான் உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

    பணி ஓய்வு பெற்ற CGM வேலுசாமி, அலுவலகத்திற்கு கள்ளத்தனமாக
வந்து ரகசியமாக சன் டீவிக்கு  323 ISDN இணைப்பு வழங்கிய தயாநிதி மாறனுக்கு எதிரான ஆவணங்களை அழிப்பதாக செய்தி வந்ததையடுத்து, அதை  தடுத்து நிறுத்த போராடிய தோழர் மதிவாணன் அவர்களுக்கு கடும்
மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாடகம அரங்கேறியது.

  அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களின் விடாமுயற்சி காரணமாகவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து தரப்பு நல்ல உள்ளங்களின்  நல்லாதரவு காரணமாகவும்
அவர் மீது மேற்கொண்ட விசாரணை அறிக்கை மீது எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளத் தேவையில்லை என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இனி தோழர் மதிவாணன் ஓய்வூதிய பலன்களைப் பெற தடையேதுமில்லை.

விசாரணையின் போது defence Assistant என்ற அடிப்படையில்  தனது
நீண்ட அனுபவ முத்திரையை பதித்த தோழர் மாலி அவர்களின்
செயல் பாராட்டத்தக்கது.

தண்டனையைக் கண்டு அஞ்சாமல் செயலாற்றிய தோழர் மதிவாணன் அவர்களின் செயல் நாமெல்லாம் பின்பற்றத்தக்கது. சிறிய பிரச்னை என்றாலும் பெரும்பாலானோர் கலங்கிப் போய் அங்கும் இங்கும் பிரச்னையை கொண்டு செல்வார்கள்.

ஆனால், தோழர் மதி அவர்களோ, M.P அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் பிரச்னையை நான் பேசட்டுமா என்று கேட்டபோது,
" வேண்டாம், எனது சங்கத் தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று கௌரவமாக கூறியது மெச்சத் தகுந்தது.

 ஊழல், ஏமாற்றுவேலை, அநீதி போன்றவை எங்கு நடந்தாலும், யார் செய்தாலும் எதிர்வினையைப்பற்றி அஞ்சாமல் வானமே எல்லையாகக் கருதி செயலாற்றும் தோழர் மதிவாணன் அவர்களின் மகுடத்தில் வைத்த வைரமாக அமைந்து விட்டது அவரது இந்த செயல்பாடு.

  கோவை இணையதளத்திலிருந்து . . .......

Wednesday, November 27

End of an harassment!
  At last the harassment finally is over. The CGM, Chennai telephones finally closed the disciplinary proceedings against comrade C.K. Mathivanan and the letter communicating the displeasure of CMD was received by him on 25/11/2013.   We Hope the necessary vigilance clearance will be issued without any further delay so that Com. C.K.Mathivanan could get his retirement benefit atleast by the end of this year. However, We extend our sincere thanks to our National president Com. Isalm Ahamad who consistently took up the case of victimization with the coporate office and helped to solve this case without any punishment or monetary loss. We also thank Com. S. Mahalingam, former CS, Tamil Nadu who acted as Defence Assistant in the disciplinary case and helped Com. C.K. Mathivanan by his intelligent questions during the enquiry. In the last we congratulate all those comrades who stood like rock behind Com. C.K.Mathivanan during this difficult period and expressed sympathies, affection to him. We proved once again that any number of false cases cannot shake the leaders of NFTE.  We will continue to fight  against corruption, high handedness and discrimination without fear. We will also serve the working people with renewed energy and commitment.

Circle union, NFTE_BSNL Chennai telephones.


Dated:26/11/2013

Saturday, November 23

AITUC இயக்கத்தின் தலைவர் தோழர் SST.......




தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள்(23-11-13) இன்று மாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களின்  மறைவிற்க்கு  செங்கொடி... தாழ்த்தி..
அஞ்சலி... செலுத்துகின்றோம்...


சாதித்து காட்டியது NFTE-BSNL
நமது நிர்வாகம் ஒருவழியாக போனஸ் பற்றி முடிவெடுக்க கமிட்டி ஒன்றை நியமித்து உள்ளது. அதில் நமது அகில இந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது ஊழியர் தரப்பு தலைவர் என்ற முறையில் இடம்பெற்றுள்ளார். நம்முடைய விடா முயற்சியால் மட்டுமே நிர்வாகம் நான்கு வருடங்களாக போனஸ் கொடுக்கமுடியாது என்ற பார்முலாவை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து அதனை பற்றி முடிவெடுக்க கமிட்டி அமைத்துள்ளது. ஊழியருக்கு போனஸ் கிடைக்காத்தற்கு காரணமான தவறான பார்முலாவை ஒத்துக்கொண்ட்து  BSNLEU. BSNLEUதான் அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை இதனை ஏற்றுகொண்ட்து என்பது அனைவரும் அறிந்ததே. நிர்வாகத்தை இந்த பார்முலாவை மாற்ற வேண்டும் என்று நிர்பந்திக்க தவறியது என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிவர். இப்போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்ற சங்கமாக உள்ளதால் அது நிர்வாகத்தை இது குறித்து நிர்பந்திக்க முடியும். போனஸ் லாபம் வந்தாலும் வராவிட்டாலும் தரப்படவேண்டும் என நிர்பந்திக்க முடியும்.  கமிட்டி அமைக்கப்பட்ட்து நமது சாதனை என்று மார்தட்டி சொல்ல முடியும்.
ஆனால், சில BSNLEU தலைவர்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தாங்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறத் துவங்கிவிட்டனர். இது முழுவதுமாக தவறான மற்றும் கேவலமான செயல். இது இவர்களால் முடிந்தது என்று சொன்னால், இத்தனை நாளாக அங்கீகாரம் பெற்ற சங்கமாக இருந்தபோதே இதை செய்திருக்க வேண்டியதுதானே என்று சாதாரண தொழிலாளி கேட்கிறான். நான்கு வருடமாக எதுவும் செய்ய இயலவில்லையே? அனைவரும் நன்கு அறிவர் 78.2 கிராக்கி இணைப்பைNFTE-BSNL சேர்ந்து போராடியால்தானே பெறமுடிந்த்து! அதே போல இப்போது NFTE-BSNL இந்த தவறான போனஸ் ஒப்பந்தத்தை மாற்றியே தீரும் என உறுதி கூறுகிறோம்.

சி.கே.மதிவாணன், அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர்,

Friday, November 22






NFTE(BSNL)
    தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு 20-11-13 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

பல்வேறு ஊழியர் பிரச்னைகள், அமைப்பு பிரச்னைகள் முழுமையாக விவாதிக்கப்பட்டு மனநிறைவுடன்  முடிந்துள்ளது.

GPF..........?????????


நமது மத்திய சங்க தொடர் முயற்சியால் ...மாநிலங்களுக்கான  GPF நிதி ஒதுக்கீடு  , விஜய கார்த்திகை 9 ,மொஹரம் 21 நல்ல நேரம் காலை 6.15 -7.15 மாலை 3.00- 4.00,ராகு 7.30 -9 ,குளி 1.30-3,எம 10.30 - 3 சூலம் -கிழக்கு   , சிறிய நகசு  கூடிய ... வரும் நவம்பர் 25 -11.2013 திங்கள் அன்று ஒதுக்கப்படும் என நிதி துறை இயக்குனர் (DIRECTOR  FINANCE ) தெரிவித்துள்ளார்                                                                    செய்தி ;குடந்தை வலைத்தளம்.......

Thursday, November 21

60th Federation Day !!!        
  NFPTE was formed as per the scheme evolved by than Communication minister Hon'ble Jagjeevan Ram on 24/11/1954 to unify the postal worker and trade unions. On 24th November-2013, We celebrate the Federation day to remember the sacrifices and achievements of NFPTE.

Tuesday, November 19

    TMTCLU -கடலூர் மாவட்ட சங்கம்
             கருப்பு சின்னம் அணியும் போராட்டம்

                         20 -தேதி ஆகியும் இதுவரை சம்பள
பட்டுவடாவில் பிரச்சனை மாவட்டம் முழுதும்
நீலவி வருகிறது . மாதமாதம் இதனை
கடைபிடிக்கும் ஒப்பந்ததாரர்-ஐ  எதிர்த்தும்
கண்டுகொள்ளாத நிர்வாகத்தைஎதிர்த்தும்
இன்று முதல் கருப்பு சின்னம் அணியும்
போராட்டம் ..,

ஐம்பதாயிரம் பார்வையாளர்களை தாண்டி வெற்றி நடை போடும் நமது  NFTE(BSNL)PUDUCHERRY  இணைய தளம் , துவங்க முதலில் ஆர்வம் கொடுத்த தோழர், மதி அவர்களுக்கும் ,ஆதரவு நல்கிய அனைத்து தலைவர்கள் , தோழர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் .எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,
            நன்றி! நன்றி!! நன்றி !!!

Saturday, November 16

Now, it’s reaching a stage of decline......

 A tragedyWhile there are close to a hundred drama troupes and artistes in Puducherry, few of them are active around the year. Drama artistes and members of Indian People’s Theatre Association at an interaction in Puducherry —Photo: G. Krishnaswamy

The resting place of the dramatist considered as the father of Tamil theatre - Sankaradas Swamigal - lies in Puducherry. Every year, drama artistes and literary scholars from the Union Territory and Tamil Nadu congregate at his memorial in Karuvadikuppam here. But Tamil dramas in Puducherry barely get to the stage today.

While there are close to a hundred drama troupes and artistes in Puducherry, few of them are active around the year. “Most of the troupes have ageing artistes and few young players,” says Ellai Sivakumar, president, the Puducherry Maanila Kalai Ilakiya Perumandram that organised the Sankaradas Swamigal Festival this year.

However, some of the troupes participate in annual drama competitions organised by the government. “Many of the artistes have known only this occupation. Now that they are old, they have no assistance,” says Kaliaperumal, a yesteryear artiste of the Sankardas Swamigal Nalintha Kalaignar Nalvazhvu Sangam, which has more than 300 artistes registered. Government grants to these artistes are not paid regularly, he alleges.

While theatre in Puducherry has been impacted by television, internet and other popular media like theatre elsewhere, the situation here is compounded further by two other reasons, say artistes: expenses involved and lack of good stages. The Kamban Kalai Arangam, the only decent government hall, ideal for a drama charges more than Rs. 25,000 a day, say drama artistes. “When the rent was Rs. 2,000 or so a few years back, plays used to be staged occasionally,” recalls Perumal, a yesteryear artiste.

“Staging a play is an expensive affair when you factor in rehearsal expenses, and payments for artists,” he adds.

Even a makeshift stage costs around Rs. 10,000, says M. Radhakrishan of Indian People’s Theatre Association (IPTA). Even popular theatre artistes from Chennai like Crazy Mohan and S. Ve. Shekar have not performed in Puducherry recently.

As there few sabhas or affordable private halls suitable for plays in Puducherry, artistes depend on the the only other government or public stages in Puducherry. These are all open air stages like the one at Kurinji Nagar, Lawspet where a play in honour of Sankaradas Swamigal was staged this week. “These plays are not conducive for plays that belong in a sabha,” says Murugavel, drama artiste. “Mythological plays with dance and music are staged here.”

But the theatre scenario was not always like this. Puducherry and the surrounding districts in Tamil Nadu like Cuddalore and Villipuram have a rich tradition of therukoothu which revolved around temple festivals, and which take place in northern Tamil Nadu. M.K. Raman, a patron of the Perumandram, says the TKS brothers and Kalaignar Karunanidhi have staged plays here. Old timers recall theatres in the heritage town that have now shut down.

“It was Sankaradas Swamigal who gave Tamil drama a proper form, from the therukoothu it was,” says Adhiraman, president, IPTA, Puducherry. But, today, there are barely any troupes in Puducherry who can stage his play. It is usually troupes involved from outside who do it.” IPTA hopes to rejuvenate disappearing arts and put new ideas and ideologies on stage.

But social plays questioning injustice and norms in society and those throwing the spotlight on contemporary issues have been staged occasionally, say members of IPTA.

“We stage such plays that talk about contemporary issues like price hike, mosquito menace and violence against women,” says M.K. Raman. These are possible as they do not need an elaborate stage, make-up or even costumes, says Ellai Sivakumar.

Today's Paper News - The Hindu


கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்...!!!


வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் திருவிழா...!!

தனது 200வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடும் சச்சின், சதம் விளாசுவாரா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் அரை சதத்தை பூர்த்தி செய்தபோது, வான்கடே ஸ்டேடியம் அதிர்ந்து அடங்கியது. மறு முனையில் புஜாராவும் அரை சதம் கடந்தார்.

சச்சினின் ஒவ்வொரு ஸ்ட்ரோக்குக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நிச்சயம் சதம் அடிப்பார் வென்ற நம்பிக்கையை ஏற்படுத்திய சச்சின், துரதிர்ஷ்டவசமாக 74 ரன் எடுத்த நிலையில் (118 பந்து, 12 பவுண்டரி) தியோநரைன் பந்தில் முதல் ஸ்லிப்பின் நின்றிருந்த சம்மி வசம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். இதை கொஞ்சமும் எதிர்பாராத ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
சச்சினும் ஏமாற்றம் அடைந்தாலும், வழக்கம்போல சில விநாடிகள் வான் நோக்கிய பின்னர் மட்டையை உயர்த்தி ஆட்டியபடி ரசிகர்களிடம் இருந்து விடை பெற்று பெவிலியன் திரும்பினார்.

Tuesday, November 12

                 மொகரம் விடுமுறை
          14/11/2013ல் இருந்து 15/11/2013 ஆக                          மாற்றப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் மற்றொரு ஊழல்: பிரதமருக்கு யஸ்வந்த் சின்கா எச்சரிக்கை!!


தொலைத்தொடர்பு துறையில் ஸ்பெக்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மற்றொரு ஊழல் மற்றொரு ஊழல் நடைபெற்றுள்ளதாக  பாஜக தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்கா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

 அந்த கடிதத்தில் தற்போது திடீரென குறைக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விலை குறைப்பு சில நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. டிராய் பரிந்துரைகளின் படி 1800mhz  பேண்டின் விலை ரூ.2376 கோடியிலிருந்து ரூ.1496 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது 37 சதவீத விலைகுறைப்பாகும்.

இதனிடையே மும்பை தில்லி உட்பட பெருநகரங்களில் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலைக்குறைப்பால் ரூ.27,000 கோடி வரை கருவூலத்திற்கு இழப்பு ஏற்படும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் ஹீனா சித்து!!


உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார்.

இதன் மூலம் பெண்களுக்கான 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

Friday, November 8

 கத்துக்குட்டி அபிமன்யூ !

     18-10-13 அன்று போனஸ் பிரச்னையில் நிர்வாகத்திடம் அபிமன்யூ சரண்டரானது பற்றி நாம் கேட்டகேள்விகளுக்கு பதில் தர இயலாத அபிமன்யூ,போனஸ் சட்டப்படி நமக்கெல்லாம் போனஸ் கிடைக்காது என்பது  NFTE-BSNL தலைவர்களுக்கு தெரியுமா ? என்று சிறு பிள்ளைத் தனமாக ஒரு கத்துக் குட்டியைப் போல கேள்வி கேட்டு உள்ளார்.  

  போனஸ் சட்டம் மட்டுமல்ல... தொழிலாளர் சம்பந்தப்பட்ட அனைத்து சட்டங்களை நன்றாக அறிந்தவர்கள்தான் NFTE-BSNL தலைவர்கள் ! அதுமட்டுமல்ல அந்த சட்டங்களால் உருவான தடை கற்களை எப்படி உடைத்து எறிந்து ஊழியர்களுக்கு நன்மை செய்வது என்ற அறிவார்ந்த தலைவர்களைக் கொண்டது NFTE-BSNL.

  2000த்தில், தொலைத் தொடர்புத் துறை, கார்ப்பரேஷன் ஆகியபோது, பொதுத்துறை ஊழியர்க்கு அரசு பென்சன் தர சட்டம் இல்லை, ஆகவே, பொதுத்துறையானால் அரசு பென்சன் கிடைக்காது என்று அழுது புலம்பியது AITEU (Namboodri) சங்கம்.

 ஆனால் NFTE சங்கமோ, கடுமையாக போராடி பென்சன் விதிகளிலேயே மாற்றம் கொண்டு வந்து  இதுவரை இல்லாத ஒன்றை சாதித்துக் காட்டியது. இதைத்தான் உண்மையான  " இமாலய சாதனை " என்று கூறவேண்டும். 

2003ல் NFTE-BSNL அங்கீகாரத்தில் இருந்தபோது DPE வழிகாட்டுதல்படி பகிர்ந்தளிக்கக்கூடிய  லாபத்தில் 5 சதவீதத்தைத்தான் போனசாக
வழங்க முடியும் என்று நிர்வாகம் எடுத்த நிலைபாட்டை  NFTE - BSNL  ஏற்கவில்லை. அப்போது அங்கீகாரமில்லாத BSNLEU உள்ளிட்ட சங்கங்களையும் சேர்த்துக்  கொண்டு வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியது. அந்த வேலைநிறுத்த அறிவிப்பில்  BSNLEU சங்கத்தின் துணைப் பொதுச் செயலரான அபிமன்யூ கையெழுத்திட்டார்.
அப்போதும் இதே போனஸ் சட்டம்தான் அமலில் இருந்தது.

  அந்த போராட்ட அறிவிப்பின் அடிப்படையில்,  சீஃப் லேபர் கமிஷனர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடனடியாக 75 சத சம்பளத்தை போனசாக வழங்குவது, மீதி 25 சத சம்பளத்தை பிறகு வழங்குவது என்று உடன்பாடு ஏற்பட்டது.

78.2 % IDA இணைப்பு பற்றிய உடன்பாடு ஜூன் 2012ல் ஏற்பட்டபோது, என்னைப்பற்றி " எதையும்  சந்தேகிக்கும் தாமஸ் "என்ற தலைப்பில் அபிமன்யூ எழுதிய ஒரு கட்டுரையில் அந்த உடன்பாட்டை அப்ரூவ் செய்யும் அதிகாரம் DOTக்குதான் என்ற சாதாரண உண்மைகூட
தெரியாமல்,   BSNL இயக்குனர்கள் குழுதான் அதிகாரம் படைத்தது
என்று எழுதினார் அபிமன்யூ. இதுபோன்ற சிற்றறிவு கூட இல்லாதவர் தான் BSNLEU சங்கத்தின் ஆகப் பெரும் பொதுச் செயலர் என்பதுதான் இனறைய நிலை.       

  இது போன்ற பயனற்ற சம்பந்தமில்லா விஷயங்களை பற்றி பிதற்றாமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அபிமன்யூ நேரடியாக
பதில் அளிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் :

18-10-13 அன்று போனஸ் வழங்க முடியாது என்று BSNLEU
தலைவர்களிடம் நிர்வாகம் கூறியவுடன், அதை தண்டனிட்டு
ஏற்காமல்,NFTE-BSNL உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும்
ஒன்றிணைத்து போராட்டம் நடத்த அபிமன்யு தவறியதேன் ?

விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான்........நமது ஊழியர்கள்
இவ்வாண்டு போனஸ் பெறக்கூடாது என்ற BSNLEUவின் நோக்கம் காரணமாகத்தான்....

ஏனென்றால், NFTE-BSNL அங்கீகாரம்  பெற்றவுடன், மூன்றாண்டுகளாக கிடைக்காத போனசை பெற்றுக் கொடுத்துவிட்டது என்ற  பெருமையை  NFTE-BSNL பெற்றுவிடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தினால்தான்........

பின் குறிப்பு:
 BSNLEUவை தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக,  BSNLEU சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தோழர்
ராமன் குட்டி,  எப்படி டெல்லியிலிருந்து வெளியேற்றப்பட்டார்
என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம். அவரை ஒன்றுபட்ட  ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலராகக் கூட நிம்மதியாக
 பணியாற்ற விடவில்லை அபிமன்யூவும் அவரது சகாக்களூம்.
ஒரு போட்டி ஓய்வுதியர் சங்கத்தை துவக்கி தங்களது பிளவு
வேலை செய்தார் அபிமன்யூ. பொது செயலர் பதவிக்கு
அபிமன்யூவை எதிர்த்து போட்டியிட துணிந்தார் என்ற ஒரே
 காரணத்திற்காக சென்னை தோழர் குணசேகரன் எப்படியெல்லாம்
அபிமன்யூவின் நேரடி பேற்பார்வையில் ஓரங்கட்டப்பட்டார்
என்பதையும் நாம் நன்றாக அறிவோம். அபிமன்யூ,நமது தலைவர்
தோழர் இஸ்லாம் அவர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்காமல்,
தனது அமைப்பை ஒழுங்கு படுத்தட்டும்.  

                                                                                                       
    C.K.மதிவாணன்
துணைப் பொதுச் செயலர்
NFTE-BSNL

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு !!!

தெலுங்கானா விவகாரம் குறித்து ஆந்திர அரசியல் கட்சிகள் - மத்திய அமைச்சர்களை அமைச்சர்கள் குழு சந்திக்கிறது.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த முயற்சியில் இறங்கிய மத்திய அரசு, தெலுங்கானாவை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மூன்றாவது முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது இரு மாநிலங்களுக்குமான நதிநீர் பங்கீடு, மின்சாரம், சொத்துக்கள் விநியோகம் மற்றும் எல்லைகளை பிரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானா பிரிப்பது தொடர்பாக வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் 18 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

அதற்கு முன்பாக 11 ஆம் தேதி பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களை, அமைச்சர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தும்.

Thursday, November 7

நவம்பர் புரட்சிதின  வாழ்த்துக்கள் !!!
பொலோனியம் விஷம் கொடுத்து யாசர் அராபத் படுகொலை மனைவி பரபரப்பு பேட்டி !!!
:பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கதிர்வீச்சு தன்மை கொண்ட பொலோனியம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது மனைவி பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத், கடந்த 2004ல் அக்டோபரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன்பின் நவம்பரில் இறந்தார். இந்நிலையில் மனைவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது சடலம் அப்போது பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2006ல் ரஷ்ய உளவு துறையை சேர்ந்த அலெக்சாண்டர் லிட்வென்கோ, லண்டன் ஓட்டலில் தங்கியிருந்த போது காபியில் விஷம் வைத்து கொல்லப்பட்டார். அதேபோல் அராபத்துக்கும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அராபத் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அவரது உடலின் பல்வேறு உறுப்புகளை எடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிவியல் அடிப்படையில் அராபத் இயற்கையாக நோய்வாய்பட்டு இறக்கவில்லை. அவரது உடலின் பல்வேறு உறுப்புகளில் பொலோனியம் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்றுக் கொண்ட பின், அராபத் மனைவி சுஹா பாரிசில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், Ôஎனது கணவருக்கு அரசியல் எதிரிகள் அதிகம். விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. இதற்காக நான் எந்த நாட்டையும், தனி நபர் யாரையும் குற்றவாளி என்று கூறவில்லை என்றார். இதனால் பாலஸ்தீனத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

Wednesday, November 6

பொறுப்பின்மையின் உச்சகட்டம் !!!


30-10-13 அன்று சென்னையில் NFTE-BSNL நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது, " இவ்வாண்டும் போனஸ் கிடைக்காததற்கு BSNLEU சங்கம்தான் காரணம், ஏனென்றால், அச்சங்கம்தான், லாபமில்லை என்றால் போனஸ் கிடையாது என்ற நிர்வாகத்தின் தவறான நிலபாட்டை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டது" என்று கூறினேன்.

இதனைக் கேட்டு மன உறுத்தலாலும், வெதும்பலாலும் BSNLEU
பொதுச் செயலர் தோழர் அபிமன்யு, BSNLEU CHQ செப் சைட்டில்

" போனஸ் பிரச்னை: NFTE-BSNL தப்பிக்கும் வழி "

என்று தலைப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதை படித்தவுடன், போனஸ் பிரச்னையில் தோழர் அபிமன்யூவின் உச்ச கட்ட பொறுப்பின்மையையும் உணர்ச்சியில்லா தன்மையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

BSNL நிர்வாகம் படுசாமார்த்தியமாக கம்பெனியின் லாபத்துடன் போனஸை இணைத்ததையும் அதை அன்றைய ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்த BSNLEU தட்டிக் கேட்காமல் எந்த எதிர்ப்புமின்றி தண்டனிட்டு ஒப்புக்கொண்டதும் யாவரும் அறிந்ததே ! அதன்
காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஊழியர்கள் போனஸ்
பெறாமல் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

' லாபமில்லை என்றால் போனஸ் இல்லை" என்ற தவறான திட்டம், உழைக்கும் வர்க்கம் போற்றி மனம் லயித்துப் " போனஸ் என்பது கொடுபடா ஊதியமே ! " என்ற கொள்கை நிலைபாட்டிற்கு
நேர்மாறானது ஆகும்

சென்ற ஆறாவது அங்கீகாரத் தேர்தலின் போது NFTE-BSNL
அங்கீகாரம் பெற்றவுடன், 78.2 % IDA Mergerஐ பெறுவோம்,
போனஸ் உரிமையை மீட்போம் என்று நாம் வாக்குறுதி அளித்தது உண்மையே.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம் இரண்டாம் சங்க அங்கீகாரத்தைத் தான் பெற முடிந்தது. அதன் காரணமாக, எல்லா மட்டங்களிலும் ஊழியர் தரப்பு செயலராக BSNLEUவைச் சார்த்தவர்தான் இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், நாம் அங்கீகாரம் பெற்ற 90 நாட்களுக்குள் முழுமனதோடு ஒற்றுமையான போராட்டத்தை உருவாக்கி 78.2 சத IDA Mergerஐப் பெற முடிந்தது.

அதேபோல போனஸ் பிரச்னையிலும் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் குறைந்த பட்ச போனசையாவது பெற வேண்டும் என்று நம்மால்
இயன்ற அளவு பெருமுயற்சி மேற்கொண்டோம்.

ஆனால் அபிமன்யூவும் அவரது சகாக்களும் வேறு மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் இருந்தார்கள்.

NFTE-BSNL அங்கிகாரம் பெற்றவுடன்தான் 78.2 சத IDA இணைப்பு கிடைத்தது என்ற ஒரு நல்ல அபிப்ராயம் ஊழியரிடையே வந்துவிட்டது. போனசையும் NFTE-BSNL சங்கத்தோடு சேர்ந்து போராடி பெற்று விட்டால் அந்த நல்ல அபிப்ராயம் மேலும் வலுப்பெற்றுவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள் அபிமன்யு போன்றோர்.

ஆகவே, நிர்வாகத்தோடு சேர்ந்து சதியில் ஈடுபடத் துவங்கி , போனஸ் பற்றிய எந்தவிதமான உருப்படியான உடன்பாடும் இன்றி 24-10-13 அன்று தங்களது ஒரு நாள் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டனர்.

நமது அச்சம் சரியானதுதான் என்று ஒரு சில தினங்களிலேயே நிரூபணமானது.

29-10-13 அன்று சென்னையில் BSNLEU நடத்திய ஒரு ஹால் கூட்டத்தில் பேசிய தோழர் அபிமன்யூ, கீழ்க்கண்டவாறு பேசியதாக மிகவும் நம்பத் தகுந்த செய்தி நமக்கு கிடைத்து உள்ளது :
'"நமது கம்பெனி கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தில் இயங்குகிற காரணத்தால், இனிமேல் நமது ஊழியர்களுக்கு போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை ; வருங்காலத்தில் மாதாமாதம் சம்பளம் கொடுப்பதற்கே கம்பெனி கஷ்டப்படுகிறது "
.
மேற்கண்டவாறு பேசிவிட்டு அடுத்த நாளே மனசாட்சி இல்லாமல்

"அங்கீகாரம் பெற்றவுடன் போனஸ் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை NFTE-BSNL நிறவேற்றவில்லை"

என்று நமமை குறை கூறி எழுத அபிமன்யூவிற்கு என்ன நியாயம் இருக்கிறது ?

நாம் அபிமன்யூவிற்கு கீழ்க்கண்ட கேள் விகளை தொடுக்க விரும்புகிறாம், அவர் பதிலளிக்க மறுத்தாலும் கூட.....

1. கம்பெனியின் நிதி நிலை மிகவும் மோசமானது என்று நன்றாக தெரிந்த பின்னும் போனஸ் கோரிக்கையை வேலநிறுத்த அறிவிப்பில் ஒரு கோரிக்கையாக சேர்த்தது ஏன் ?

2. அவர் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக/பகிரங்கமாக இனி போனஸ் கிடைக்காது என்று பேசத் தயாரா ?

BSNLEU சங்கத்தின் ஒவ்வொரு செயலையும் ஊழியர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள், போனஸ் பிரச்னையில் அதன் இரட்டை
வேடம் உட்பட.

வேலை நிறுத்த பேச்சுவார்த்தையின் போது BSNLEU போனஸ் பிரச்னையில் பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என்பதையும் உணர்ந்தே உள்ளனர்.
கிரிகெட்டில் மேட்ச் பிக்சிங் ( வெற்றி தோல்வியை முதலே நிர்ணயித்து விடுவது) பற்றி கேள்வி பட்டுள்ளோம் !

ஆனால் இப்போது BSNLEU வின் Strike fixing ஐ உணர்ந்துள்ளோம் !!

சி.கே.மதிவாணன்,துணைப் பொதுச் செயலர்
NFTE-BSNL

Friday, October 25

போனஸ் போராட்டம்!!!

BSNL  ஊழியர்களுக்கு
போனஸ் வழங்கக்கோரி

30/10/2013 திங்கள் கிழமை 

அகில இந்திய , மாநில
மாவட்டத்தலைநகர்களில்
உண்ணாவிரதம், போராட்டம் !!!

Bonus: Hunger strike on 30th October. A delegation consisting of President, GS and Secretaries (Comrades Rajmouli and Rajpal) held meeting with CMD, BSNL on 22nd Oct. and urged for Bonus payment. The CMD who has returned from Tamilnadu, Madurai etc, was very much impressed with the performance and presentation of the employees. The CMD showed helplessness due to financial condition of BSNL. He sought cooperation from the employees. The delegation pressed but he has not agreed to the demand. With profound anguish we call upon the workers to organize hunger strike on 30-10-213 and demonstrate same day during lunch hour. President and Secretaries only will sit on hunger strike at CHQ, Circle and District levels. Make the programme successful.                                                                                                                                   chq...........  
       One Day Fast for Bonus by Leaders at SSA, Circle and CHQ Level on Oct 30th- A  Kind of Repentance Day for the environment of No Bonus- President and Secretaries are requested to sit Fast..                                                                                            TNcircle........
மறப்பது மனித இயல்பு !
            நினைவு படுத்துவது நமது மரபு !!
2003ல் போனஸ் ,மறுக்கப்பட்ட போது NFTE-BSNL ஒரே அங்கீகாரச் சங்கம் ! ஆனாலும் BSNLEU உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடி உடனடியாக 75 % போனஸ், வருவாய் உயர்ந்தவுடன் மீதி போனஸ்  என்று உடன்பாடு போட்டது.

2013,  BSNLEU, NFTE-BSNL ஆகிய இரண்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் ! ஆனால் NFTE-BSNLஐ தீண்டமாட்டேன் என்று ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு உடன்பாடு போட்டு அதற்கு மகத்தான உடன்பாடு என்று  நாமகரணம் சூட்டுகிறது  BSNLEU

Tuesday, October 22

சொன்னது நீதானா?? சொல்,,,,,,சொல்…


தோழர்களே, நாம் சில நிகழ்வுகளை பின்னோக்கி பார்க்கிறோம்..
அங்கீகாரத் தேர்தல் முடிந்த கையோடு எம்ப்ளாயீஸ் யூனியன் தனது வலைதளத்தில் 19-04-2013 இவ்வாறு எழுதியது” இந்த அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற NFTE-BSNL சங்கத்தை மனதாரப் பாராட்டுகிறோம். இனி வரும் காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் NFTE-BSNL சங்கத்தோடு தோளோடு தோள் நின்று தொழிலாளிக்காக போராடுவோம்”..ஆனால் நடந்தது என்ன? கல்கத்தாவில் நடந்த அவர்களது மத்திய சங்க செயற்குழுவில் 4-9-2013 NFTE-BSNL கலந்து ஆலோசனை செய்யாமலே போராட்ட அறிவிப்பினை தன்னிச்சையாக வெளியிட்டது.

நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணன் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுவில் BSNLEU சங்கத்தின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். BSNLEU சங்கம் சேர்ந்து போராடி தொழிலாளி பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டால் அந்த வெற்றி NFTE-BSNL சேர்ந்ததால்தான் கிடைத்தது என்று ஆகிவிடும் என்று BSNLEU நினைக்கிறது அதனாலேயே நம்மோடு குறிப்பாக NEPP BONUS போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒன்றுபட்ட போராட்டத்தை தவிர்க்கிறது.  இதனை பட்டவர்த்தனமாக தோழர் மதிவாணன் கூட்டத்தில் வெளியிட்டபோது அதனை அனைவரும் ஆமோதித்தனர். அதேபோல அச்சங்கம் நம்மோடு சேர்ந்து ஒரு வெளிப்படையான உடன்பாட்டை போடவும் பயப்படுகிறது.

டெல்லியில் புதிய அகில இந்திய கவுன்சில் அமைக்கப்பட்ட உடனேயே நம் சங்கத்தின் சார்பாக போனஸ், பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள், நான்காம்பிரிவு ஊழியர் பிரச்சனைகள் இவைகளை பட்டியலிட்டு நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது..  ஆனால் அவைகளை அப்படியே துளீயும் மாறாமல் தங்களது போராட்ட கோரிக்கைகளாக BSNLEU அறிவித்தது. நாம் நிர்வாகத்தை உடனடி கவுன்சில கூட்ட வற்புறுத்திய போது நிர்வாகம் ஊழியர் தரப்பு செயலர் (BSNLEU) இதுவரை எந்த பிரச்சனைகளையும் கவுன்சிலுக்கு சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தது.

18-10-2013 BSNLEU சங்கம் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை முடிவுகளை பார்க்கும்போது அது எல்லா கோரிக்கைகளையும் சரண்டர் செய்து விட்டதுஎன்பதை அனைவரும் அறிவர்.

போனஸ் இல்லை, நான்காம் பிரிவு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்புகள் களையப்படவில்லை, NEPP-ல் உள்ள CR AverageEntry களையப்படவில்லை, SC/ST ரிசர்வேசன் பதவி உயர்வில் மறுப்பு, LTC, MEDICAL ALLOWANCE  கோவிந்தா…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டது போல தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து ஊழியர்களின் காதில் பூ வைக்க முயல்கிறது BSNLEU சங்கம்…
ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே தொழிலாளி பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்று எப்போது BSNLEU சங்கம் நினைக்கிறதோ அன்றுதான் பிரச்சனைகள் தீரும். தனது பெரியண்ணன் போக்கை BSNLEU சங்கம் என்றுதான் கைவிடப்போகிறதோ..அது அவர்களுக்கே வெளிச்சம்..

ஒன்றுபட்ட போராட்டம்
ஒன்றே நமது துயரோட்டும

Sunday, October 20

பண மெத்தையில் படுத்துப் புரண்ட மார்க்சிஸ்ட் தலைவர் நீக்கம்!


திரிபுரா மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்க்ளில் ஒருவரான சமர் ஆச்சார்ஜி பண மெத்தையில் படுத்து புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவரது செயல் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சமர் ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரும் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை முகம் வெளிவந்துள்ளது எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனால், கட்சியின் உயர்மட்டக் குழு உடனடியாகக் கூடி இது குறித்து விவாதித்தது. இது தொடர்பாக சமர் ஆச்சார்ஜியை விசாரணை செய்த போது, பண மெத்தையில் படுத்திருப்பதை இவரே கைபேசியில் பதிவு செய்து உள்ளூர் தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பருக்கு அனுப்பிக் கொடுத்தது தெரிந்தது. 

எனவே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், சமர் ஆச்சார்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Saturday, October 19

BSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய்,
சீனியர் அதிகாரிகளுடன் CHQ தலைவர்கள் சந்திப்பு !

18.10.2013 அன்று முற்பகலில் டெல்லியில் நமது அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர்,இஸ்லாம் அகமது, அகில இந்திய சங்க துனை பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன் ஆகியோர்
திரு.A.N. ராய், டைரக்டர் (HR),மற்றும் திரு அகர்வால்.சீனியர் GM (Per), திரு.R.K.கோயல் Sr.GM (Estt), திரு சதீஷ் வாதா, DGM (SR)ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கீழ்க்கண்ட ஊழியர்களின் பிரச்னைகளை விவாதித்தனர்.

1. தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்ச போனஸ் வழங்கவேண்டும்
என்று வலியுறுத்தினர்.

2. தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் :

புதியதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.

3. கருணைப் பணி : இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட சில விளக்கங்கள்
இறந்த ஊழியர் குடும்பத்திற்கு பாதகமாக உள்ளது. ஆகவே அவை
மாற்றப்பட வேண்டும்.

4. சென்னை TSM, கேசுவல் ஊழியர்களின் பிரச்னை சென்னை CAT
மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கப்பட
வேண்டும்

5. கவுன்சில்கள் புதிய BSNL அங்கீகார விதிகளின்படி அமைக்கப்பட
வேண்டும் .

6. ஊழியர் நல குழுக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வெல்பேர் போர்டுகள் :
இரண்டு அங்கீகாரச் சங்ககளுக்கும் நியமன உறுப்பினர்கள் 1:1 விகிதாசாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

கூட்டம் முடியும் போது மீண்டும் தீபாவளித் திருநாளுக்கு முன்பாக போனஸ் வாங்கிட வலியுறுத்தப்பட்டது.

Meeting With Director (HRD) and other Senior Officers:

Today Our CHQ leaders Com.Islam Ahmed, President and Com.C.K.Mathivanan, Dy.GS met Sri..A.N.Rai, Director(HR), BSNL, Sri.Aggarwal, Sr.GM (Per),Sri. R.K.Goyal, Sr.GM
( Estt) Sri.Sathish Wadhwa DGM (SR) separately and discussed the following staff issues.

1.Payment Of Minimum Bonus before Diwali :

Our leaders urged the Management to ensure payment of minimum bonus before Deepawali.

2. Immediate Convening of National Council :

The newly constituted National Council may be convened at the earliest to discuss the pending staff matters.

3. Compassionate appointments: Some clarifications issued by the Management are against the interests of the family of the deceased employees. Hence modifications may be issued.

4. Reinstatement of 27 Casual Mazdoors in Chennai Circle as per the Judgement of the Chennai CAT and Madras High Court.

5. Nominations to Welfare Boards/Sports Councils : The number of nominees from both the Recognised Unions may be increased in the 1:1 ratio.

6.Strict implementation of the BSNL Recognition Rules .
Nominations to the Councils may be accepted strictly as per the new BSNL Recognition Rules

In conclusion our leaders once again pressed for the payment of Bonus before Diwali.

பணக்கட்டிலில் படுத்துப் புரண்ட சிபிஎம் தலைவர் : வீடியோவால் பரபரப்பு !!





 திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சமர் ஆச்சார்ஜி என்பவர் வழங்கிய இச்செவ்வியில், தான்  ரூ.20 இலட்சத்தை வங்கியிலிருந்து எடுத்து வந்து அதனைக் கட்டிலில் கொட்டி அதன் மேல் படுத்து உருண்டேன். இதன் மூலம் பண மெத்தை மேல் படுத்து உறங்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக்கொண்டேன். மற்றவர்களை போல் வெளியில் ஏழ்மையானவர்களாக போலியாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அகர்தலாவில் மாநகராட்சியின் 3 வார்டுகளிலும் கழிவறை அமைக்கும் ஒப்பந்தம் எடுத்ததில், எனக்கு ரூபாய் இரண்டரை கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது என அவரே தனது திருவாய் மலர்ந்து கூறுகிறார்.  இவ்வீடியோவைப் பார்த்த பலரும், சிபிஎம் கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Wednesday, October 16

IDA 6.6 %  உயர்வு. மொத்தம் 85.5 %. 
BSNL   உத்திரவு வெளியிட்டது. 

Sunday, October 13

அமெரிக்காவி்ற்கு நெருக்கடி:உலக வங்கி எச்சரிக்கை!!

செலவின மசோதா அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறாததால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு, ஷட்டவுன் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரத்தை நிதி நெருக்கடி எட்டியுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யங் கிம் கூறுகையில், அமெரிக்க நிதி நிலை ஆபத்தான கட்டத்தை எட்ட இன்னும் ஐந்து தினங்களே உள்ளன, என்றார்.

Thursday, October 10

அப்போ, நம்பூதிரி BSNLEU தலைவர் இல்லையா !


              தயாநிதி மாறனின் மீது CBI வழக்கு !!

ஒரு தனி நபரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை !

    ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !!!

          சென்னை கோவிந்த ராஜனின் உளறல்....... 

    தயாநிதி மாறனின் 323 ISDN முறைகேடு பற்றி CBI வழக்கு பதிவு செய்தவுடன் சென்னை BSNLEU மாநிலச் செயலர்  கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து தனக்கு மட்டுமல்ல, அனைத்து சங்கங்களுக்கும்   அந்த ஊழல் வெளியானதில் பங்கு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது கண்டு குபீர் என்று சிரிப்புதான் வந்தது.

        முறையற்ற வகையில் கூட்டணி அமைத்து அங்கீகாரம் பெற,
2004ல் நமக்கு வரவேண்டிய, நிர்வாகம் தர ஒப்புக்கொண்ட அலவன்ஸ்களை தடுத்து நிறுத்திட,  தயாநிதி மாறன் காலில் விழத்  துவங்கியதிலிருந்து இன்று வரை BSNLEU சங்கத்தார்,  ஒரு வார்த்தை யாவது மாறனை எதிர்த்து எழுதியோ பேசியோ நாம் கண்டதில்லை கேட்டதில்லை.

   சென்னையில் நடந்த முறைகேட்டை எதிர்த்து போராடினார்களாம் ! 

இது பற்றி எந்த தகவலும் எந்த பத்திரிக்கையிலோ ஏன் அவர்கள் வெப்சைட்டிலோ கூட  வரவில்லையே !!

 ரகசியமாக இருட்டறையில் போராடினார்களோ என்னவோ !!

  போகிற போக்கில் 2G ஊழலை வேறு எதிர்த்து இவர்கள் கடுமையாக போராடினார்களாம் !

"தோழர் மதிவாணன் தவறாக பிரச்சாரம் செய்கிறார்..... 2G பிரச்னையில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல....... 3G ஸ்பெக்ட்ரத்தை மிக உயர்ந்த அநியாய விலையில் BSNL தலையில் கட்டிய அமைச்சர் ராசாவின் செயல் பாராட்டுதலுக்குரியது " என்று கடிதம் கொடுத்து அதை முன்னாள்  முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டதை அவ்வளவு
எளிதில் மறக்க முடியாமா ! 

நம்பூதிரி BSNLEU தலைவர் அல்ல என்று கோவிந்த ராஜன் கழுவுகிறாரா !
       
 வேலைக்கு ஒருவர்,  மாலைக்கு ஒருவர் என்பது போல

சொஸைட்டி ஊழலை எதிர்த்ததிலும், நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதிலும் தங்களுக்கு பங்கு இருப்பதாக சென்ற வாரம் புருடா விட்டார் சென்னை கோவிந்த ராஜன்.....

இந்த வாரம் தயாநிதி மாறன் ஊழலை வெளிக்கொணர்ந்ததில் தனக்கும் பங்கு உள்ளதாக அறிக்கை வெளியிடுகிறார்.....

 இனி கொஞ்ச நாட்கள் கழித்து அடுக்குமாடி கட்டி கொடுக்க
கேட்டதே நாங்கள்தான் என்று அறிக்கை வெளியிட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை......

BSNL டைரக்டர் (மனித வளம்) அவர்களுடன் சந்திப்பு !!!!!


 ஏற்கனவே  திட்டமிட்டபடி BSNL Director ( HR) அவர்களுடன் 8-10-13 அன்று
ஊழியர்கள்  பிரச்னைகள் பற்றி விவாதம் நடைபெற்றது.
SR GM (SR), SR GM (Estt), DGM (SR) ஆகியோரும் பங்கேற்றனர்.
நமது சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் இஸ்லாம், பொதுச் செயலர்
தோழர்  சந்தேஷ்வர் சிங், செயலர் தோழர் ராஜ்மௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க் கண்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன :
போனஸ் :
டைரக்டர் நமது நிறுவனத்தின் நிதி நிலையை விளக்கினார். சங்கத் தலைவர்கள், போனஸ் தொழிலாளர்களின்  அடிப்படை உரிமை என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்து போனஸை லாபத்தோடு இணைப்பது தவறு என்று வாதிட்டனர்.
போனஸ் தொகை பற்றி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம்
என்றும் வருங்காலத்திற்கான  போனஸ் திட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டி அமைக்கலாம் என்றும் கருத்து  தெரிவித்தனர்.
நமது சங்கத்தின் உணர்வுகளை  BSNL CMD அவர்களிடம் தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டது.      
Average Entries :
NEPP திட்டத்தில் சராசரி என்ற CR entry காரணமாக பல ஊழியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ளனர். ஆகவே அந்த கண்டிஷனை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதற்கான முன்மொழிவு  மேனேஜ்மென்ட் கமிட்டியின் பரிசீலனைக்கும்
முடிவுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
RM / Group D ஊழியரின் stagnation பிரச்னை :Sr.GM (SR), SR GM (SR),SR GM (EF) ஆகிய மூத்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட ஒரு  குழு இப்பிரச்னையை விவாதித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ளது.
( BSNLEU போட்ட)  NEPP, ஊதிய உடன்பாடுகள் காரணமாக சில தடங்கல்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிமட்ட ஊழியர்கள் 78.2 சத ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டும், ஒரு பைசா கூட பயன்பெற முடியாமல் அவதிப்படுகின்றனர், ஆகவே ஒரு நியாயமான தீர்வு காணப் படவேண்டும் என்று தெரிவிக்கபட்டது.
1-1-2007 க்கு பிறகு பணிக்கு வந்த ஊழியர்களின் ஊதிய இழப்புப் பிரச்னை :
இளம் JAO / JTO ஊழியர்க்கு இது போன்ற பிரச்னை தீர்க்கப்பட்டது எடுத்துக் காட்டப்பட்டது. ஒரு வாரத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கானப்படும் என்று உறுதி அளிக்கபட்டது.
BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வுக்கால பலன்கள் பிரச்னை :
  SR GM (Estt) விரைந்து பிரச்னையை தீர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
 TTA Recruitment Rules மாற்றம் :
தேவையான மாற்றங்கள் விரைவில் செய்யப்படும். சங்கங்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்
Regularaisation of Offg JTOs.: அதற்கான பணி நடந்து கொண்டுள்ளது.
JTO தேர்வு முடிவுகள் :
விரைந்து வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
   மற்ற பிரச்னைகள் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.   

   

Friday, October 4

நம் நக்கீரன்
குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே! இப்படி சொல்வது எளிது. ஆனால் தனது துறையில் அமைச்சராக இருந்தவர் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தி அதன் விளைவாக தனது ஓய்வூதிய பலன்களை இழந்து நிற்கும் தோழர் மதி இந்திய மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துக்கள்.

From Today's Times of India
    (timesofindia.indiatimes.com)

BSNL man loses pension for exposing Dayanidhi Maran's illegal telephone exchange
Jayaraj Sivan, TNN | Oct 3, 2013, 01.15 AM IST


CHENNAI: The whistleblower, who exposed the secret telephone exchange set up by former Union telecom minister Dayanidhi Maran at his Boat Club residence in Chennai, was a BSNL subdivisional engineer, whose pension has now been stopped on disciplinary grounds.

CK Mathivanan carried out a campaign within BSNL against Maran for three years for alleged misuse of infrastructure to facilitate free transmission of data and visuals for a television channel owned by Dayanidhi's elder brotherKalanithi Maran.

After retiring in June 2013, Mathivanan found that he was among the staffers who were penalized for an agitation against superiors, including those under whose names Maran was allotted 323 ISDN lines. Mathivanan is yet to receive his pension, but the fact that his actions helped expose a Rs 440-crore revenue loss to the PSU is a matter of his satisfaction.

'Feud in DMK exposed scam'

Today, the National Federation for Telecom Employees deputy general secretary says he was relieved when he heard the news that the CBI had filed an FIR in the case. His modesty does not permit him to take credit for it, though. "In fact, it was not I who exposed the scam. It got exposed because of the feud in the DMK," he told TOI.

According to him, Maran's exchange was secretly set up by the BSNL Chennai circle office in 2007. "I happened to see a file in which then general manager (operations) G Selvam had written that other than himself, chief general manager (CGM) and deputy general manager (operations), no one else should come to know about the 323 lines being provided at Maran's house. It was a state-of-the-art exchange, which was connected by just one pair of optical fibre cables. It could carry huge amount of data and visuals at very high speed," said Mathivanan.
After a preliminary probe, a CBI team had filed a report recommending action against Maran and senior BSNL officials. But the departmental nod remained elusive. The issue came back into focus after a PIL was filed in Supreme Court in 2012 seeking action against the former Union minister.

Trouble had started for the trade unionist in September 2011, when he, along with 100 colleagues, protested against former BSNL CGM MP Velusamy (in whose name the 323 lines were allotted) visiting BSNL Chennai circle headquarters after his retirement.

"We had information that he had visited CGM's office several times to destroy files pertaining to the secret exchange. The new CGM, A Subramaniam, acted with a vengeance against us. Seventy-eight people faced a break in their service. I was given the maximum penalty, which would have led to my dismissal or compulsory retirement. The next CGM allowed me to retire, but recommended a cut in my pension. BSNL CMD, however, did not accept the recommendation. The CMD referred the case back to the CGM for review and it is pending there," said Mathivanan.

His prayer to the CBI is that it should expand the scope of its investigation to find out whether such secret exchanges were set up in other parts of the country as well. "What BSNL has lost is huge money. It (Rs 440 crore) is adequate to pay minimum bonus to 2.89 lakh employees of BSNL for four years in a row. It should be recovered from Maran," Mathivanan said.

Wednesday, October 2

அவசர சட்டம் வாபஸ்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!


    எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வகை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவும் வாபஸ் பெறப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ. க்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

     இந்த உத்தரவின்படி தனது பதவியை இழந்த முதல் காங்கிரஸ் எம்.பி.  ரஷீத் மசூத் ஆவார். திரிபுரா மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் தகுதி இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பதவியிழந்த முதல் எம்.பி. இவர்தான்.

    அடுத்து பதவி இழக்கப் போகிறவர் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இவர் குற்றவாளி என2 தினங்களுக்கு முன் ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் தீர்ப்பளித்தது. இவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே இவரும் தனது எம்.பி. பதவியை இழக்கிறார்.

     சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதாவது குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் வகையில் மத்திய அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்து அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஜனாதிபதி அதில் கையெழுத்திடாமல் 3 மத்திய அமைச்சர்களை அழைத்து அது பற்றி விளக்கம் கேட்டார். மேலும் சட்ட நிபுணர்களையும் அவர் கலந்து ஆலோசித்தார்.

 இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி மன்மோகன்சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றி ஒரு பரபரப்பான கருத்தை சொன்னார். அதாவது இந்த அவசர சட்டம் ஒரு முட்டாள்தனமான சட்டம். இதை மத்திய அரசு கொண்டு வந்தது தவறு. இந்த சட்டத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ராகுல் காந்தி ஒரு கருத்தை சொல்ல அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 அது மட்டுமல்ல, மன்மோகன்சிங் அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.  நேற்று காலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் பிரதமர் சந்தித்து பேசினார்.

 இதனிடையே நேற்று மாலை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது சர்ச்சைக்குரிய அவசர சட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வகை செய்யும் இந்த அவசர சட்டத்தை வாபஸ் பெறுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 மேலும் இது தொடர்பான மசோதாவையும் திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டதால் இனிமேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழப்பது உறுதி.  முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடிய அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.