WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, December 19

ஜெயா டிவியில் சனி கிழமை 19/12/15 இரவு 10 மணிக்கு  அவர்களுடன் காம்ரேட் மதிவாணன் அவர்களுடன் மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன்

 telecast today night (19/12/15) 10 pm on Saturday.
 


Thursday, December 17

உழைத்த கரங்கள் 
வாழ்க.. வாழ்க...


1982 டிசம்பர் 17
ஓய்வூதியம் கருணை அல்ல..
உழைப்பின் உரிமை.. என 
உச்சநீதிமன்றம் உரக்கச் சொன்ன நாள்...
அதுவே இந்திய ஓய்வூதியர்களின்
ஒளி வீசும் தீபாவளித் திருநாள்...

தம் மக்கள் நலம் மறந்து.. 
நாட்டு மக்கள் நலத்திற்காக 
இருபது முதல் அறுபது வரை உழைத்து...
ஓய்வு பெற்ற உள்ளங்களுக்கு 
நமது அன்பான வாழ்த்துக்கள்...  செய்தி ;காரைக்குடி வலைத்தளம் 

Saturday, November 21

ஒடுக்கப்பட்டது ‘சமூகங்கள்’ மட்டுமல்ல... ஏரிகளும்தான்!


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
சேலத்தில் அரசை எதிர்பார்க்காமல் மக்களே நீர் நிலைகளை சீரமைத்த வரலாற்றைப் பார்த்தோம். உண்மையில் தொடக்கக் காலத்தில் ஏரிகள், குளங்கள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இவை ஊர் பொது சொத்தாகக் கருதப்பட்டன. ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்ட மடைக் குடும்பத்தினர் மட்டுமின்றி குளத்துப் பள்ளர்கள், குளக் காப்பாளர்கள், நீராணிக்கர்கள், நீர்க்கட்டியார், கரையார் ஆகியோரும் நீர் நிலைகளைப் பராமரித்தனர்.

வெள்ளக் காலங்களில் இந்த நீர் நிலைகளின் உடைப்புகளை அடைக்கச் சென்று உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நஷ்ட ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. அதன் பெயர் உதிரப்பட்டி. கி.பி. 1302-ல் ராமநாதபுரம் மாவட்டம், கருங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டபோது அதை அடைக்கச் சென்ற பெருந்தேவப் பள்ளன் வெள்ளத்தில் இறந்தான். அவனது தியாகத்தைப் போற்றும் வகையில் அவனுக்கு நினைவுக் கல்லை நட்டு உதிரப்பட்டி நிலமும் அளிக்கப்பட்டது. இந்த விவரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் பெருவேந்தர் காலம்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த நீர் நிலைகள் மக்கள் கையில் இருந்தவரை மட்டுமே நன்றாக இருந்தன. என்றைக்கு அவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதோ அன்றே அவற்றின் அழிவுக் காலம் தொடங்கியது. ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு தொடங்கியதும் அப்போதுதான்.

தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு என தனி சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலை பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள்.

பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல் படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசு சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாசஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்துக் குறைந்துப்போனது.

ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோல துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாக பாவித்த சமூகம் பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலை சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான்.

வருவாய் துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரிய தொழில்நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில்நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள்.

நிலைமையை சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும் அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலை களுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட் களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணை களைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார் கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக் கப்பட்டன. எரிபொருள் தேவைக்காக கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்து குடிநீர் எடுத்தார்கள். ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை, நீர் நிலைகளும்தான்!

Tuesday, November 17

BSNLEU சங்கத்தின் பொய் பிரச்சாரம்..........

சென்னை தொலைபேசி மாநிலத்தின் BSNLEU சங்கம் NFTE சங்கத்தின் மீது பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதால் நாம் பதில் கொடுக்க வேண்டி உள்ளது. இது வருகின்ற 7வது சங்க தேர்தலை குறி வைத்து சொல்லப்பட்டது என கருதுகிறோம். நாம் ஒற்றுமை என்ற பதாகையின் கீழ் நின்றாலும் BSNLEU சங்கத்தின் பொய் பிரச்சாரத்தினை ஊழியருக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
1.    NFTE,FNTO and BTEF செப்டம்பர் 2௦௦௦ நடத்திய வரலாற்று சிறப்பு வாய்ந்த பென்ஷன் போராட்டம் காரணமாகவே நாம் பொதுத்துறை ஆனபிறகும் பென்ஷன் பெற்று வருகிறோம். அந்த போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் அபிமன்யு மற்றும் அவரது தொண்டர்கள். 08-09-2000 நடந்த அந்த போராட்டத்தில் அதனை போலிஸ் துணை கொண்டு உடைக்க ஐந்தாம்படை வேலையை செய்தனர். நூற்றுக்கணக்கான நம் தோழர்கள் அன்று கைது செய்யபட்டனர். அதன் காரனமாகவே நாம் இன்று அரசின் பென்ஷன் பெற்று வருகிறோம். எந்த பொதுத்துறையிலும் இது போல் நிகழ்வு நடந்ததில்லை. ஆனால்2004-ல் நாம் அங்கிகாரத்தை இழந்தபிறகு அந்த பென்ஷன் பிரச்சனையை நீர்த்து போகச் செய்தனர் BSNLEU சங்கத்தினர். 2006- ஆம் வருடம் நாம் 2000 போட்ட ஒப்பந்தமான பென்ஷன் அரசே தனது வைப்புநிதியிலிருந்து தரவேண்டும் என்பதை குலைக்கும் வண்ணம் போடப்பட்ட உத்தரவை எந்த எதிர்ப்பும் காட்டாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். அந்த உத்தரவின்படி அறுபது சதவிதம் அரசும் மீதி நாற்பது சதவீதம்  BSNL லும் பென்ஷன் தரவேண்டும் என உத்தரவு ஆனது. இது ஒரு தவறான உத்தரவு என்பதை அன்று அங்கீகார போதையில் இருந்த அபிமன்யுவிற்கு ஏனோ புரியவில்லை. ஒன்பது ஆண்டு காலம் மௌனமாய் இருந்துவிட்டு இப்பொது திடிரென்று ஞானோதயம் தோன்றியது ஏனோ ?
2.    தலைவர் குப்தாவும்  ஞானய்யாவும் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் ஒப்பந்தத்தில் கையிழுத்து இட்டபோது அதனைதொழிலாளிக்கு எதிரானது என்று கூக்குரல் இட்டவர்கள் மோசமான இலாபத்துடன் இணைந்த போனஸ் ஒப்பந்தத்தில் கையிழுத்திட்டனர். அதன் பிறகே நாம் கடந்த ஆறு வருடமாக போனஸ் கிடைக்காத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். அதனை எதிர்த்து நம் பல்வேறு போராட்டங்களை செய்தபோது  இலாகாவின் நிதி நிலை சரியில்லை அதனால் போனஸ் கிடைக்காது என்று பிலாக்கினம் பாடினார்அபிமன்யுஅது நாம் நிறைய சம்பளம் வாங்குகிறோம் அதனால் போனஸ்கேட்பது சரியில்லை என்றார். இனி போனஸ் என்பது காலாவதியான ஒன்று என்று கூறினர். ஆனால் நாம் சென்ற முறை அங்கிகாரம் பெற்ற பிறகு அந்த பார்முலாவை மாற்ற ஒப்புக்கொண்டனர். இது  NFTE. – க்குகிடைத்த முதல் வெற்றியாகும்.
3.    சென்னை தொலைபேசியின் BSNLEU சங்கம் நாமும் FNTO சங்கமும்2000,-ஆம் ஆண்டில் பொதுத்துறையை ஆதிரித்த பாவத்தை கழுவவே இப்போது அதிகாரிகள் ஊழியர் கூட்டமைப்பில் சேர்ந்திருப்பாதாக வாய் கூசாமல் சொல்கின்றனர். இதனை நாம் சட்டை செய்ய தயாரில்லை.BSNLEU சங்கம் அகில இந்திய பொது செயலரும் அவருடைய மாநில செயலரின் கருத்தை புறக்கணிப்பார் என நம்புகிறோம். இது போன்று நம்மை எரிச்சல் அடைய செய்யும் கருத்துகளை சொல்லும் சென்னை தொலைபேசி BSNLEU மாநில செயலரால் நாம் இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேற மாட்டோம். ஒற்றுமை குலைப்பு எங்கள் வேலைஇல்லை. வேறு வழில்லாமைல் பொய் பிரசாரத்தை முறியடிக்கவே இந்த கட்டுரை.


------ NFTE-BSNL  சென்னை தொலைபேசி மாநிலம்

தேவை சுயபரிசோதனை.........!

போனஸ் பற்றி இரண்டு செய்திகளை வெளிடிட்டிருந்தோம். அவை சிலருக்கு கோபத்தை  உருவாக்கியதாக அறிந்தோம்.
யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை. ஊழியர் மனங்களில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்துவது மட்டுமே நமது நோக்கமேயன்றி வேறேதுமில்லை.
போனஸ் பெற நமது NFTE இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளை நாம் அறிவோம்.
FORUM  சார்பாக ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற இயக்கங்களை நடத்தினோம்.
அதற்குப் பிறகு நமது இயக்கத்தின் சார்பாக போனஸ் தர வலியுறுத்தி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் தரப்பட்டது.
மத்திய செயற்குழுவில் போனஸ் பிரச்னை  தலைவர்களால் விவாதிக்கப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.
அந்த முடிவையும் நமது சங்கம் நிர்வாகத்துக்குத் தெரிவித்தது

பூஜை முடிந்தது.
தீபாவளியும் முடிந்தது.
போனஸ் இன்னும் வரவில்லை.

“கொடுபடா ஊதியம்”
“உச்ச நீதிமன்ற ஆணை”
“DPE உத்தரவு”
போன்ற புறச்சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருந்தன.
“800 கோடி கூடுதல் வருவாய்” என்ற அகச் சூழ்நிலயும் சாதகமாக இருந்தது.

இச்சூழ்நிலையில்,
“ஏன் போனஸ் பெற முடியவில்லை?”
என்பது குறித்து ஒரு சுயபரிசோதனை தேவை என்பதே நம் விழைவு.
இதை யார் செய்வது?
மத்திய சங்கத்துக்கு வழிகாட்டும் நமது தமிழ் மாநிலச் சங்கம் இந்த சுயபரிசோதனையைச் செய்து  மத்திய சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என தோழமையுடன் வேண்டுகிறோம்.                                      செய்தி :ஈரோடு வலைத்தளம் 

Saturday, October 31

10,000 – ஜீரோ


“லாபமோ-நட்டமோ குறைந்த பட்சம் 10000 ரூபாய் போனஸ் உறுதி. இது ஒரு இமாலய சாதனை.இது ஒரு வரலாறு.” இப்படியெல்லாம் படித்தோம். பேச கேட்டோம்.
BSNLEU மட்டுமே அங்கீகாரத்தில்  இருந்த் போது நடந்த்து இது.
“அதிகமான  சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டோம் போன்ஸ் எதற்கு?” இப்படியும் குரல்கள் ஒலித்தன.

தோழர் குபதா உருவாக்கிய பல ஒப்பந்தக்களையும், உத்தரவுகளையும் விமர்சித்து, கேலி செய்து, கிண்டல் செய்து ஏன் அவற்றை எரித்து சாம்பலாக்கிய நிகழ்வுகளும் நடந்தனவே.

NFTE  அங்கீகாரம் பெற்ற பின்பு போனஸ் பெற்றுத் தர எடுத்த முயற்சிகளைக் கெடுத்தொழித்த நிகழ்வுகளும் நெஞ்சில்  நிழலாடுகிறதே.

ஒற்றுமையை விரும்பாதோர் யார்? ஆனால் ஒற்றுமையின் 

பெயரால் உண்மைகள் ஒளிந்து போகக்கூடாது அல்லவா? 

இது போன்ற “ஒலிகள்” “கதிராக” வீசவில்லையே என்பதுதான் நமது ஆதங்கம். 

  நன்றி :ஈரோடு வலைத்தளம் ......

Tuesday, October 27


அங்கீகரிக்க பட்ட பண்ருட்டி கிளை செயலர்,     P முருகன் நடத்திய கிளைமாநாடு ........சங்க உணர்வுடன் தோழர்கள் கலந்து கொண்டதை பார்த்து மாநில செயலர் அங்கீகாரம் வழங்க வேண்டும் ..... 








கடலூர் ஸ்ரீதர் அணி நடத்திய பண்ருட்டி போட்டி கிளை மாநாடு .......விரல் விட்டு எண்ணிவிடலாம் தோழர்களை ........







Wednesday, October 21

அறிந்ததும்

அறிய விரும்புவதும்

கடந்த வாரம் சென்னைத்தொலைபேசிக்கு உட்பட்ட முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் (SSA) STR பகுதியில் சில தோழர்களுக்குTTA மற்றும் TM பதவிகளில் பணி நியமனத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவை வெளியிட்டவர் சென்னை தொலைபேசி மாநில தலைமைப் பொதுமேலாளர்.
எனவே இந்த தோழர்கள் நமது இயக்கத்தில் எங்கு உறுப்பினர்களாக இருக்க தகுதிபடைத்தவர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்.

அமைப்பு விதி ஆய்வாள்ர்களிடமிருந்து அறிய விரும்புகிறோம். 
        ............செய்தி :ஈரோடு வலை தளம் ......

Saturday, October 17

புதுச்சேரியில் நடைபெற்ற இந்தியத்திரைப்படவிழா 2015-ல் இந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் தமிழ் திரைப்படம் புதுச்சேரி அரசால் தெரிவு செய்யப்பட்டு 1 லட்ச ரூபாய் பணமும் விருதும் புதுவை ருக்குமணி திரையரங்கில் 16-10-2015 அன்று அளிக்கப்பட்டது,விருதினை புதுவை முதல்வர் மாண்புமிகு ந,அரங்கசாமி அவர்கள் வழங்க இயக்குநர் பிரம்மா அவர்கள் பெற்றுக்கொண்டார்
விழா தொடங்குவதற்கு முன்பாக புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மற்றும் புதுவைத் தமிழ்ச் சங்க செயலர் ஆகியோர் இயக்குநர் பிரம்மா மற்றும் தயாரிப்பளர் சதீசுகுமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தபோது

Thursday, October 15

தனலட்சுமி கலை பள்ளி பாராட்டு விழா விழா நிகழ்ச்சி யில் மன்ன்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் பள்ளி நிறுவனர் தோழர் தணிகைவேல் அரசு அவர்களுடன்

Saturday, October 10

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவஞ்சலி நிகழ்ச்சியை வரும் 13.11.2015 அன்று சிறப்பாக நடத்துவதற்கான புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஆலோசனை கூட்டம் இன்று 10.10.2015 நடைபெற்றது. அப்போது சிறந்த ஆய்வாளராக யுஜிசி யினால் தேர்வு செய்யப் பட்ட தோழர் ப.ச.வேல்முருகன் பாராட்டப்பட்டார். தோழர்கள் வீர.முருகையன், எல்லை.சிவக்குமார், வ.சுப்பையா, மு.சி.இராதாகிருஷ்ணன், நீலம்.அருள்செல்வி, இலட்சுமிதத்தை, அ.கலியபெருமாள், இரா.தங்கமணி, மு.ஆதிராமன், இர.இரவிச்சந்திரன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


BONUS........?

  • Postal PLB for Non Executive Employees and ED/ Casual labour.. Employees and ED may get at the rate of 3500 per month for 60 days and CL is to get 1200 rate for 60 days
  • BSNL.....??????????
என் தந்தை காலத்து போராளி, விடுதலை போராட்ட வீரர் தோழர் N குருசாமி அவர்களின் 94 வது அகவைக்கு வாழ்த்துக்கள் ........(10/10/2015)







Tuesday, October 6

வருத்தத்திற்குரிய புறக்கணிப்பு !


             சிறிய பண்ருட்டி கிளைப் பிரச்சனையை காரணம் காட்டி 
நமது நண்பர்கள்  புறக்கணித்தனர்.  மாவட்ட செயலர்  இரா.ஸ்ரீதர்  
மாற்று தீர்வை  அளித்தும்  அதனை  ஏற்றுக்கொள்ளாமல் மாநில 
செயற்குழுவை  புறக்கணித்து கலந்து கொள்ளாதது வருத்தத்துக்கு
உரியது.
                                  கடலூர் வெப் சைட்டிலிருந்து

நமது  மாநில சங்கத்தின் சில அமைப்பு பிரச்னைகள் காரணமாக
பல   மாவட்டச்   செயலர்களும்  மாநில  சங்க  நிர்வாகிகளும் 
மயிலாடுதுறையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த செய்தியை நாம் அமைப்பு நலன் கருதிபகிரங்கமாக்க விரும்பவில்லை.

 கடலூர் மாவட்டச் செயலர் அச்செய்தியை வெளியிட்டுள்ளதால்
 அதற்கான காரணத்தை விளக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. 


மயிலாடுதுறையில் நடந்த  செயற்குழுவை ஒற்றுமையாக நடத்த 
வேண்டும் என்று நாம் உளமாற விரும்பியதால்தான் அதற்காக 
முன் முயற்சி எடுத்தோம். இது குறித்து மாநில சங்கத்தின் முக்கிய 
நிர்வாகிகள், அமைப்பு பிரச்னைகளை செயற்குழு கூடும் முதல் 
நாளன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விவாதித்து 
ஒத்த கருத்தை உருவாக்க  முயற்சித்தோம்.

     கோவை மாநில மாநாட்டு முடிவுக்கு எதிராக,  அங்கீகாரத் 
தேர்தலில் சென்னை தொலைபேசி மாவட்டத்தில் வாக்களிக்கும்
உரிமையுள்ள தோழரை தமிழ் மாநிலத்தில்  உள்ள  STR மாவட்ட
செயலராக தேர்ந்தெடுத்தது முறையற்ற செயல் என்று சென்னையில்
நடந்த  செயற்குழு கூட்டத்திலேயே உறுதியாக எடுத்துரைத்தோம்.
அகில இந்திய சங்கமும் இப்பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று 
கூறியுள்ள நிலையில் இந்த செயற்குழு கூட்டத்தில்  அந்த தோழர் 
மாவட்டச் செயலராக பங்கேற்காமல் இருந்தால் சுமுக சூழல் 
உருவாகும் என எடுத்துரைத்தோம். 

எந்த கிளையையும் கலைத்து மாநாடு நடத்தி அங்கீகரிக்கும் உரிமை 
சங்க அமைப்பு விதிகளின்படி மாவட்ட சங்கத்திற்கு கிடையாது. 
பண்ருட்டி கிளையை கலைத்துவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களைக்
கொண்டு  புதிய கிளையை உருவாக்கியது தவறான செயல், இந்த
நடைமுறை ஒருமுறை ஏற்கப்பட்டால் இனிமேல் மாவட்டச் 
செயலர்கள் தங்கள் இஷ்டம்போல த்ன்னிச்சையாக செயலாற்றி
 ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவர். ஆகவே 
பண்ருட்டி கிளைச் செயலரே மாநாட்டை நடத்த அனுமதிக்க்வேண்டும் 
என்ற இரண்டே இரண்டு தீர்வுகளை ஏற்க கோரினோம். ஏற்க மறுத்த
காரணத்தாலேயே, சென்னையில் நடந்தைப்போல மீண்டும் பிரச்னை
ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், செயற்குழுவில் பங்கேற்க
ஆவலுடன் சென்ற நாம் மிகுந்த ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும்
புறக்கணிப்பு முடிவை எடுத்து உடனே ஊர்  திரும்பினோம்.

நாமெல்லாம் ஜெகன் அவர்களின் பாதையை பின்பற்ற வேண்டும் 
என்று அவரது பிறந்த நாளிலும் நினைவு  நாளிலும் உறுதி
ஏற்கிறோம்.

கே.ஜீ.போஸ் அணியினர் நம்முடன் இருந்தபோதும்கூட அமைப்பு 
பிரச்னைகள் வந்தால், தோழர் ஜெகன்  காட்டிய  பாதை :
LCM-Lowest Common Multiple) (மீச்சிறு பொது மடங்கு) என்ற 
அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு நடுநிலையான தீர்வு என்பதாகும்..
  
நமக்குள் தீர்க்க முடியாத பிரச்னை என்பது எதுவும் கிடையாது 
என்பதே நமது ஆழமான கருத்து. 

( It is possible If we bury the egos and try for a consensus as was  
practised by Com.Jagan) 

நமது ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு நமது சங்கத்தின் 
வளர்ச்சி, வெற்றி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து 
அனைவரும் முயற்சி செய்தால் அசைக்க முடியாத ஒற்றுமை 
சாத்தியமே.

சாதிக்க முடியாததை சாதித்து காட்டுவோம் (Make Impossible possible)
என்று மைசூர் அகில இந்திய மாநாட்டில் தோழர் குப்தா விடுத்த
அறைகூவல்தான் நமது நினைவுக்கு வருகிறது. 

அதற்கான திசைவழியில் அனைவரும் செயலாற்ற வேண்டும் 
என்பதே நமது விளைவு.  
...............................................................செய்தி; கோவை வலைதளம் .............................

Thursday, October 1

அக்டோபர்  2015
IDA  உயர்வு 

01/10/2015 முதல் 
5.3 சத IDA  
உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்  
107.9 ஆகும்.

FORUM CALLS FOR MASSIVE DEMONSTRATION FOR BONUS ON 06/10/2015:

The meeting of the FORUM held in New Delhi has decided to conduct a Nationwide demonstration on 06/10/2015 for payment of PLI(BONUS).Accordingly in Chennai telephones the FORUM will organize demonstration during lunch hour on 06/10/2015 at CGM’s office and other centers. A meeting of the Circle secretaries has been called to discuss about this demonstration on 01/10/2015 at 03.00PM in BSNLEU office at Flower Bazaar complex. The meeting will be chaired by FORUM chairman C.K.Mathivanan and conducted by Deputy conveners S.Lingamurthy and Shanmugasundarajan. All Branch secretaries and office bearers are requested to plan for a massive demonstration in Chennai telephones to win back our right for Bonus.

Sunday, September 20

Government has issued orders to compulsory retire unuseful staff

 | September 18, 2015
Government has issued orders to compulsory retire unfit staff
No.25013/01/2013-Estt.A-IV
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel and Training
Establishment A-IV Desk
North Block, New Delhi
Dated 11th September, 2015
OFFICE MEMORANDUM
Subject: Strengthening of administration-Periodical review under FR 56(j) and Rule 48 of CCS (Pension) Rules, 1972
The undersigned is directed to refer to this Department’s OM No. 25013/1/2013-Estt(A) dated 21/03/2014 on the periodical review under Fundamental Rule 56 or Rule 48 of CCS (Pension) Rules.
2. Various instructions issued on the subject deal with compulsory retirement under the above mentioned provisions. The Supreme Court has observed in State of Gujarat Vs. Umedbhai M. Patel. 2001 (3) SCC 314 as follows:
(i) Whenever the services of a public servant are no longer useful to the general administration, the officer can be compulsorily retired for the sake of public interest.
(ii) Ordinarily, the order of compulsory retirement is not to be treated as a punishment coming under Article 311 of the Constitution.
(iii) “For better administration, it is necessary to chop off dead wood, but the order of compulsory retirement can be passed after having due regard to the entire service record of the officer.”
(iv) Any adverse entries made in the confidential record shall be taken note of and be given due weightage in passing such order.
(v) Even un-communicated entries in the confidential record can also be taken into consideration.
(vi) The order of compulsory retirement shall not be passed as a short cut to avoid Departmental enquiry when such course is more desirable.
(vii) if the officer was given a promotion despite adverse entries made in the confidential record, that is a fact in favour of the officer.
(viii) Compulsory retirement shall not be imposed as a punitive measure.
3. , In every review, the entire service records should be considered. The expression ‘service record’ will take in all relevant records and hence the review should not be confined to the consideration of the ACR / APAR dossier. The personal file of the officer may contain valuable material. Similarly, the work and performance of the officer could also be assessed by looking into files dealt with by him or in any papers or reports prepared and submitted by him. it would be useful if the Ministry/Department puts together all the data available about the officers and prepares a comprehensive brief for consideration by the Review Committee. Even uncommunicated remarks in the ACRs/APARS may be taken into consideration.
4. in the case of those officers who have been promoted during the last five years, the previous entries in the ACRs may be taken into account if the officer was promoted on the basis of seniority cum fitness, and not on the basis of merit.
5, As far as integrity is considered, the following observations of the Hon’ble Supreme Court may, while upholding compulsory retirement in a case, may be kept in view:
The officer would live by reputation built around him. in an appropriate case, there may not be sufficient evidence to take punitive disciplinary action of removal from service. But his conduct and reputation is such that his continuance in service would be a menace to public service and’injurious to public interest.
S. Ramachandra Raju vs. State of Orissa
[(l 994) 3 SCC 424]
Thus while considering integrity of an employee, actions or decisions taken by the employee which do not appear to be above board, complaints received against him, or suspicious property transactions, for which there may not be sufficient evidence to initiate departmental proceedings, may be taken into account. Judgement of the Apex Court in the case of Shri K. Kandaswamy, I.P.S. (TN:1966) in K. Kandaswamy vs Union Of India & Anr, l996 AIR 277, I995 SCC (6) l62 is relevant here. There were persistent reports of Shri Kandaswamy acquiring large assets and of his getting money from his subordinates. He also indulged in property transactions which gave rise to suspicion about his bonafides. The Hon’ble Supreme Court upheld his compulsory retirement under provisions of the relevant Rules.
6. Similarly, reports of conduct unbecoming of a Government servant may also form basis for compulsory retirement. As per the Hon’ble Supreme Court in State of UP. And Others vs Vijay Kumar ‘Jain, Appeal (civil) 2083 of 2002:
If conduct of a government employee becomes unbecoming to the public interest or obstructs the efficiency in public services, the government has an absolute right to compulsorily retire such an employee in public interest.
7. Many changes in the nomenclature and in the areas of responsibility of various departments/Ministries have taken place. In order to simplify and speed up the procedure of review, a need is felt to reconstitute the Review Committees. in partial modification of the OM 25013/15/86-Estt (A) dated 27/06/1986, it has been decided that the Secretaries of the Cadre Controlling Authorities will constitute Review Committees consisting of two Members at appropriate level. The Review Committees in the case of various levels of employees will be as under:
(A) in case of officers holding Group A posts:
(a) In r/o ACC appointees:
Review Committee may be headed by the Secretary of the concerned Ministry/Department as Cadre Controlling Authority.
(b) In r/o Non-ACC appointees:
(i) Where there are Boards viz CBDT, CBBC, Railway Board, Postal Board, Telecom Commission, etc. the Review Committee may be headed by the Chairman of such Board.
(ii) Where no such Boards/Commissions exist, the Review Committee may be headed ’by Secretary of the. Ministry/Department.
(B) in case of Group B (Gazetted) officers:
Additional Secretary/Joint Secretary level officer will head the Review Committee.
(C) In the case of Non-Gazetted employees:
(i) An officer of the level of Joint Secretary will head the Committee. However in case the Appointing Authority is lower in rank than a Joint Secretary, then an officer of the level of Director/Deputy Secretary will be the head.
(ii) in the case of Non-Gazetted employees in other than centralised cadres, Head of Department/Head of the Organisation shall decide the composition of the Review Committee.
8. CVO in the case of gazetted officers, or his representative in the case of non-gazetted officers, will be associated in case of record reflecting adversely on the integrity of any employee.
9. in addition to the above, the Secretary of the Ministry/Department is also empowered to constitute internal committees to assist the Review Committees in reviewing the cases. These Committees will ensure that the service record of the employees being reviewed, alongwith a summary bringing out all relevant information, is submitted to the Cadre Authorities at least three months before the due date of review.
10. The procedure as prescribed from time to time has been consolidated and enclosed as Appendix to the OM issued by this Department on 21/03/2014. As per these instructions the cases of Government servant covered by FR 56(j), FR 56(l), or Rule 48(1) (b) of CCS (Pension) Rules, 1972 should be reviewed six months before he/she attains the age of 50/55 years, in cases covered by FR 56(j) and on completion of 30 years of qualifying service under FR 56(l)/Rule 48 of CCS (Pension) Rules, 1972 as per the following calendar:
Sl NoQuarter in which review is to be madeCases of employees who will be attaining the age of 50/55 years or will be completing 30 years of service or 30 years of service qualifying for pension, as the case may be, in the quarter.
1.January to  MarchJuly to September of the same year
2.April to JuneOctober to December of the same year
3.July to SeptemberJanuary to March of the next year
4.October to DecemberApril to June of the next year
11. All Ministries/Departments are requested to follow the above instructions and periodically review the cases of Government servants as required under FR 56(j)/FR56(l)/Rule 48(1)(b) of CCS (Pension) Rules, 1972.
12. instructions on composition of the Representation Committees will be communicated separately.
sd/-
(Mukesh Chaturvedi)
Director (Establishment)