WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, February 28

பொது வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி !!!

Monday, February 27

மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்!!!


மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை பொது வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் . குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசுத் துறைகளில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது . பஸ் போக்குவரத்தும்ஓடாது  . மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர் நலன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் கொள்கைகள் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளன என்று கூறி  FEBRUARY 28 ல் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் .
காங்கிரஸ் கட்சி சார்புள்ள ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Sunday, February 26


NFTE BSNL’s Proposal for change of Designation of mainstream cadres.
Present Designation            Proposed Designation
TTA                                   Junior Engineer Telecom
Sr TOA                              Manager Telecom
Telecom Mechanic              Telecom Technician
Regular Majdoor                Technical Assistant                           
Circle and District Secretaries are requested to send their suggestion and views on the above proposal.

 இஸ்ரோவின், ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவர் நாயர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 




தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு சனிக்கிழமை தெரிவித்தது.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இறுதிப்போரில் ஈடுபட்டது இலங்கை ராணுவம்.
நாட்டின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் அறிவிக்கை தெரிவித்துள்ளது




தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tuesday, February 21

2016ல் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்: விஜயகாந்த் சபதம்!!
வரும் 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே!” என்றார் விஜயகாந்த்.

2011ல் 
 ஆட்சி நமதே!” என்று கூரியவர் இப்போது இல்லை ?

Friday, February 17

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தேர்வு நடத்தினால் ரூ.50000 அபராதம் - தமிழக அரசு அதிரடி

 மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Wednesday, February 15


Convention on 16th-Feb-2012:
    As per the decision of the Delhi meeting a convention of Non-Executive unions in BSNL who have served strike notice for 28th_ Feb_2012 one day strike will be held on 16/02/2012(03.00PM) at Raja Annamalai Mandram, Chennai-01. In this convention comrades Chandeswar Singh, CK.Mathivanan, G.Jayaraman and R. Pattabiraman will speak on behalf of NFTE-BSNL. All are requested to attend the convention in time.


CK.Mathivanan,Dy.GS


NFTE-BSNL

Tuesday, February 14

பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தம்!!

பிப்ரவரி 28  பொது வேலை நிறுத்தம் குறித்த BSNL  தொழிற்சங்கங்கங்ககளின் விளக்க பொது கூட்டம் 16-02-2012 சென்னையில் நடைபெறும். 
புதுவை , ஊழியர்களுக்கு?  
புயல் நிவாரணம் 52 லட்சம் நிதி வந்தும் ருபாய் 5000 தருவது ,
யானைபசிக்கு, சோளபொறி !!   

Monday, February 13


தென்னாப்பிரிக்காவின் புதிய நாணயதாளில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது.

நாடு முழுவதும் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு !!

டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Saturday, February 11

JAYA T.V. யில் தோழர்.C.K. மதிவாணன் Dy.G.S.

ஜெயா டி.வி யில் திருமிகு. ரபி பென்னார்டு M.P , மற்றும் நமது 
துணைப் பொதுச்செயலர்.தோழர். C.K.மதிவாணன் ஆகியோர். 
கலந்துரையாடும் நிகழ்ச்சி கீழ்கண்ட தேதிகளில் ஒளிபரப்பு
ஆகிறது
ஜெயா T.V.யில் 12-2-12 ஞாயிறு அன்று இரவு-10 மணிக்கு 
ஜெயா plus T.V. யில்  14-2-12 செவ்வாய் அன்று இரவு 10.30 மணிக்கு. 

தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிசீலனை !!


தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து குழு பரிசீலனை செய்து வருகிறது. இன்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்னர் இது வைக்கப்பட்டு வரும் நிதிமசோதாவில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Friday, February 10

28th Feb, 2012 strike convention 16.02.2012 at Chennai !!

Tamilnadu and Chennai met and discussed in respect of 28th Feb, 2012 strike. They decided to hold a big convention on 16.02.2012 at Chennai to mobilize the workers for strike. Com. Chandeshwar Singh General Secretary, NFTE BSNL will attend and address the convention.

Wednesday, February 8


மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் நசீட்
பதவி விலகும் நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நரேந்திர மோடிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம் !!


2002 இல் நடந்த கோத்ரா கலவரத்தின்போது குஜராத் அரசு செயல்படாமலும், அலட்சியமாகவும் இருந்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


500 மத கட்டமைப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவின்போது, பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் ஜெ பி பர்டிவாலா அடங்கிய டிவிஷன் பென்ச் இவ்வாறு கூறியுள்ளது.


மாநில அரசு செயல்படாமலும், அலட்சியமாகவும் இருந்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள மத கட்டமைப்புகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்வதும், இழப்பீடு வழங்குவதும் மாநில அரசின் பொறுப்பு என்று மேலும் கூறியுள்ளது.


சேதமடைந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இழப்பீடு வழங்கிய அதே நேரத்தில், மத கட்டமைப்புகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மாறன் சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு!!


 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறி அமலாக்ப் பிரிவினர் முன்னாள் யூனியன் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து ரூ.550 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது.

Tuesday, February 7

28th February Strike !!!!



Non- Executive unions available at Delhi met and decided to organise Strike on 28th February as per call of central Trade unions. The unions representatives not available at Delhi will be contacted to build up the broad based unity for the strike. In the strike notice the following demands will be included. 1. Financial support to BSNL by Govt. And no Disinvestment / Privitisation. 2. No retrenchment of staff.            
                                                    CHQ.....

Historic judgment !!

         On 02/02/2012 the supreme court  of India ordered cancellation of 122 licenses held by 8 privatetelecom companies and also imposed heavy fine on few telecom companies for fraud and cheating. The judgment came on a day shri. A. Raja former telecom minister completed one full year in Delhi’s Thigar jail for his dubious role in the allocation of spectrum at a very low price and without any auction to benefit few telecom companies on the basis of “ First come first served” formula which has resulted in the revenue loss of 1.76 lakhs crore of rupees as per the estimate of the Comptroller and Auditor General of India(CAG). NFTE-BSNL feels happy and welcome this historic judgment of Supreme court. As everybody knows Com. C.K. Mathivanan was in the forefront in opposing this spectrum fraud since 2008 when the precious spectrum was distributed fraudulently at 2001 price. However to curry favour with the telecom minister Comraes V.A.N Namboodri(BSNLEU) and K.Vallinayagam gave letter of support to Shri A. Rja, the then teceom minister stating that no irregularities was done in allocation of spectrum and gave a clean certificate to the  minister. Both these unions criticized the opposition of Com C.K. Mathivanan to the telecom minister has politically motivated. Now the cat is out of the bag.


    The judgment of the Supreme court has demolished at one stroke the theory of ‘zero loss’ by Shri Kapil sibal, the present telecom minister and all other congress and DMK ministers assertions that everything was done as per the rules and directions from TRAI. The supreme court severely criticized not only A.Raja and others but also the  TRAI . For several years TRAI was acting only in support of Private telecom operators and that is why it suggested” First come first served” method instead of open auction for the distribution of spectrum.


   Neither the Prime minister nor the then finance minister exercised their authority on the then telecom minister to stop this mega fraud due to political reasons since with the DMK’s crucial support UPA govt  was installed at the center. Hence both Prime minister and  Shri  Chidambaram are in a way responsible for this spectrum scam and answerable to the people of India. 
                                                                    

Friday, February 3


உச்சநீதிமன்றத்தில் 2ஜி ஊழல் வழக்கின் விசாரணை தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது 2ஜி வழக்கில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவித்தது. இத்தீர்ப்பு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபில், அவசர அவசரமாக நேற்று பிரதமரை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,


அன்று இயற்றப்பட்ட அக்கொள்கையில் தான் குறைபாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதே தவிர, தற்போதைய அரசாங்கம் குறித்து தவறாக எதுடும் கூறவில்லை. நிதியமைச்சகம் அளித்த அறிவுரைகள் ஏற்று, அதை அமல்படுத்த அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா தவறிவிட்டார் என்றே உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. எனவே தவறான கொள்கை முடிவை எடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு பாஜக தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.


இதேவேளை 2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்ப்பதா இல்லையா என்பதனை சிபிஐ நீதிமன்றமே தீர்மானித்து கொள்ளட்டும் என உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளதை அடுத்து, ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


'ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பிறந்த தேதி மே 10, 1950 என ராணுவ தலைமை செயலகத்தில் பதிவாகி உள்ளது. 


இந்த தேதியின் அடிப்படையிலேயே அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது.


இதன்படி, மே 31ம் அவர் ஓய்வு பெற வேண்டும். இதற்கிடையே, ராணுவத்தின் மற்றொரு அலுவலகத்தில் அவர் பிறந்த ஆண்டு 1951 ஆக பதிவாகி உள்ளது. 


இதையே தனது பிறந்த ஆண்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகத்தில் சிங் விண்ணப்பித்தார். இதை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. 


விஜயகாந்த் சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்றும், சட்டசபையில் ஜெயலலிதா பேசியது சரிதான் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.


எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த 7 மாதமாக சிறப்பான முறையில் செயல்படவில்லை. சட்டசபைக்கு வெளியிலும் எந்த ஒரு மக்கள் நல பிரச்சினையிலும் அவர் ஈடுபடவில்லை. அந்த கட்சிக்கு என்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை.




Wednesday, February 1

புயல் நிவாரணமாக, !!!


தானே புயல் நிவாரணமாக, ஊழியர்களுக்கு ரூபாய் 10,000/- வட்டியில்லா கடன் வழங்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது!


இது குறித்து, நிர்வாக உத்தரவுகள் வெளியானவுடன், ஊழியர்கள் விண்ணப்பம் கொடுத்து, இந்த நிவாரணத் தொகையினை, கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.


நிர்வாகத்திற்கும், மாநில சங்கத்திற்கும் நமது நன்றி!

 Interest free advance extended to BSNL employees at cuddalore and Pondicherry in Tamilnadu Circle. Thanks to BSNL HQr Management. 
                                                                                                                    chq.....