WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Sunday, December 28

கவனிக்க வேண்டிய புத்தகங்கள்.......

T+  


சகாயம் செய்த சகாயம், பள்ளிப் பருவம், மோடி அரசாங்கம், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும் ஆகிய புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்.

Thursday, December 25


வருடம் அச்சிடாத ரூபாய் நோட்டுகள்

மாற்றுவதற்கான அவகாசம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு



 
கந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம்  தேதி வரை நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எந்த வருடத்தில் அச்சிடப்பட்டது என்று குறிப்பிடாமல் புழக்கத்திலுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்  திரும்ப பெறப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான அவகாசம் ஏப்ரல் 1ம் தேதி முடியும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த கால அவகாசம் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளின் மறு பக்கத்தில், கீழ் பகுதியில் வருடம் அச்சிடப்பட்டு இருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது

Monday, December 22

இன்னும் 10 நாள் தான் இருக்குது!பழைய நோட்டை மாத்திக்குங்க!

:ரூபாய் நோட்டுகளில், 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகளை, செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள, இன்னும், பத்து நாள் அவகாசமே உள்ளது. அதற்குள், பொதுமக்கள் வசம் உள்ள, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த ஆண்டு ஜன., 22ல், ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்தது. 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்டு, பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள ரூபாய் கரன்சி நோட்டுகள், ஏப்., 1 முதல் செல்லாததாகி விடும். எனவே, அதற்குள் தங்கள் வசம் உள்ள பணத்தை, வங்கிகளில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளுங்கள் என, உத்தரவிட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை, ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டித்தது. காலக்கெடு முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்கள் தான் உள்ளன.இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.

Sunday, December 21

ERP செயலாக்கம் 
ERP GO - LIVE 

தமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP  திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE  குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம். 
எனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல் 
தொடர்ந்து  தமிழகத்தில்  நடைபெறும். 

ERP செயலாக்கத்தை தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் மறந்த 
நமது அதிகாரிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். 

ஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,
ஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,
ஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்
 ஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள் 
தூக்கம் இழக்க ஆரம்பித்துள்ளனர்.

 ERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.
அதே நேரம்  LIFE - GOING  ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில் 
GO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
                                                                                                    செய்தி ...காரைக்குடி வலைத்தளம் ....

நபிகளின் மாண்புகளைத் தூக்கியெறியும் ஐ.எஸ்......

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம்
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள்: கோப்புப் படம்
தலையங்கத்தில் (19.12.2014) ஐ.எஸ். அமைப்பைத் தடை செய்ததாகச் செய்தி வெளியானது. இது முற்றிலும் இந்திய முஸ்லிம்களால் வரவேற்கத்தக்க ஒன்று. ஜனநாயக விரோதப் போக்கைக் கையாளுகின்ற, இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த அமைப்புக்கும், இஸ்லாத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ். விவகாரத்தில் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் விரோதம் பாராட்ட வேண்டுமென ஜிஹாதிக்குத் தவறான கருத்தியலைப் பரப்புரை செய்கின்ற ஐ.எஸ். கொள்கையினால், உணர்ச்சிவேகமிக்க இளைஞர்கள் பலிகடா ஆவதைத் தடுக்க வேண்டும். நபிகள் நாயகத்தின் நேரடி ஆட்சி நடைபெற்றபோது, மதினாவில் வாழ்ந்த யூதர்களுக்கான முழுப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
‘இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் பிற சமயத்தவர்களுக்கு யாரேனும் தீங்கிழைத்தால், அது எனக்கு நிகழ்ந்தது போலாகும். ஓர் இஸ்லாமியர், பிற சமயத்தைச் சார்ந்த நபரை அநியாயமாகத் தீண்டினால், சமயச் சகோதரருக்கு ஆதரவாக இறைவனிடம் வழக்காடுவேன்’ என்ற நபிகள் நாயகம் போதித்த ஜனநாயக மாண்புகளைத் தூக்கியெறிகின்ற இஸ்லாமியப் பெயர் தாங்கிய அமைப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே தடை செய்யப்பட வேண்டியவையே.
- சாதாத், சென்னை.

Saturday, December 20

கிரானைட் குவாரிகளுக்காக புராதன சின்னம், கண்மாய்கள் சிதைப்பு: நேரில் ஆய்வு செய்த சகாயம் அதிர்ச்சி

  • திருவாதவூர் கிரானைட் குவாரியில் வெட்டப்பட்ட கற்களின் அளவை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
    திருவாதவூர் கிரானைட் குவாரியில் வெட்டப்பட்ட கற்களின் அளவை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
  • திருவாதவூர் ஓவாமலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான சமணர் படுகையை ஆய்வு செய்யும் சகாயம் குழுவினர்.
    திருவாதவூர் ஓவாமலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான சமணர் படுகையை ஆய்வு செய்யும் சகாயம் குழுவினர்.
முறைகேடு நடந்த கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடத்திய ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், சட்ட விதிகளை மீறி அதிகாரிகள் துணையோடு புராதன சின்னங்கள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஏகத்துக்கு அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்துவரும் சகாயம் நேற்று கிரானைட் குவாரி களில் நேரில் ஆய்வு மேற் கொண்டார். திருவாதவூரில் உள்ள குவாரிகளுக்கு அவர் தனது குழுவினருடன் சென்றார். கனிம வளம், வேளாண்மை, வருவாய், பொதுப்பணி, தொல்லியல் துறை அதிகாரிகள் பலர் உடன் வந்தனர். டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் 50 போலீஸார் சகாயத்துடன் வந்தனர்.
சிதைக்கப்பட்ட புராதன சின்னம்
திருவாதவூர் மேலச்சுனைகுளம் அருகே அமைந்துள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை யான ஓவாமலை என்றழைக்கப் படும் சமணர் படுகையை அவர் பார்வையிட்டார். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தொல்லியல் ஆர்வலர் கபிலன் உட்பட பலர் பாதிப்புகள் குறித்து சகாயத்திடம் தெரிவித்தனர். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதி, படித்ததை இங்குள்ள கல்வெட்டுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மலைக்கு மேல் உள்ள சிவன் கோயிலுக்கு மாணிக்கவாசகர் வந்துசென்றுள்ளார். மலை குகையில் 10 சமணர் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் குவாரி நடத்தியவர்களால் கடுமையாக சேதமாக்கப்பட்டுவிட்டன. மலையை ஆங்காங்கே வெட்டி சிதைத்திருந்தனர். இங்கு யாரும் நுழைந்துவிடாதபடி பாதையையே அடைத்துவிட்டனர் என்றனர்.
புராதன சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்கிறது சட்டம். ஆனால் இந்த மலையில் 125 முதல் 242 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை சகாயம் பதிவு செய்தார்.
அழிக்கப்பட்ட கண்மாய்கள்
கீழச்சுனைகுளம், இரணிய ஊருணி முழுமையாக அழிக்கப் பட்டு கிரானைட் குவாரியாக காட்சி யளித்தன. கல்கட்டு ஊருணி, மாங்குளம் கண்மாய், மேலச்சுனை குளத்தின் பெரும் பகுதியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கண்மாய், கரைகளை தேடி சகாயம் அலைந்தார். அதிகாரிகளாலும் அடையாளம் காட்ட முடியவில்லை. அளந்து காட்டும்படி கூறியும் வருவாய்த் துறையினரால் முடியவில்லை. இறுதியாக சிறிய மேட்டுப்பகுதியை காட்டி இதுதான் கண்மாய் எனக்கூறியதை கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார். கண்மாய்கள் மூலம் விவசாயம் நடைபெற்ற நிலங்கள் முழுவதும் கிரானைட் கல் குவியல், 200 அடி பள்ளங்களாகக் காட்சியளித்தன.
காணாமல்போன 1000 ஏக்கர்
குவாரி அருகே பெட்ரோல் பங்க், சொகுசு அறைகளுடன் பல ஏக்கர் வளைக்கப்பட்டிருந்தது. இது யாருடைய இடம் என விசாரித்தபோது ‘கால்நடைகளுக் கான மேய்ச்சல் நிலம் அது. குவாரி அதிபர் பி.கே.செல்வராஜ் இப்பகுதியை ஆக்கிரமித்து குவாரி அலுவலகமாக பயன்படுத்திய தாகவும், தற்போது சீல் வைத்துள் ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். பின்னர் சீலை உடைத்து உள்ளே சென்று சகாயம் ஆய்வு செய்தார். இப்பகுதி யில் திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட் கற்கள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. இதைப் பார்த்த சகாயம் இக்கிராமத்தில் மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என கேட்டார். 1800 ஏக்கர் இருப்பதாகவும், இதில் 1000 ஏக்கர் தரிசு, கண்மாய் புறம்போக்காக இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலம் எங்கே என கேட்டபோது, பெரும்பகுதி கிரானைட் குவாரி களால் ஆக்கிரமித்தும், அழிக்கப் பட்டும் விட்டன என அதிகாரிகள் கூறியதைக் கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு
திருவாதவூரில் பிஆர்பி, சிந்து உள்ளிட்ட 6 குவாரிகளை சகாயம் ஆய்வு செய்தார். பாசன வாய்க்கால் கரை முழுவதிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. யாதவர் சமுதாய மயானத்துக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் என்பவர் கண்ணீர்விட்டபடி புகார் கூறினார். இப்பகுதிலிருந்த பலநூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பலரும் புகாராக தெரிவித்தனர்.
சகாயம் ஆதரவு குழுத் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சகாயத்துக்கு விளக்கினர். இவர்களிடம் சகாயம் கூறுகையில், குவாரிகளால் நீரா தாரம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாதிப்புகள் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து நீதிமன்றத்தில் முறையீடு
மதுரை கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராம கிருஷ்ணன், மேலூர் தாசில்தார் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் பூமாயி, கிராம நிர்வாக அலுவலர் அனுராதா, அளவையாளர் வேல்முருகன், கிராம உதவியாளர்கள் ஆண்டி, அய்யாவு உட்பட பலர் வந்தனர். இவர்களிடம் கண்மாய், அரசு நிலம், அழிக்கப்பட்ட நிலங்களின் அளவு, அமைவிடம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சகாயம் கேட்டார். இதில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அலுவலர்கள் தயாராக வரவில்லை. கிராம கணக்குகளில் உள்ள நிலம் பற்றிய புள்ளிவிவரங்களைக்கூட முறையாக தெரிவிக்கவில்லை. கேட்டும், பார்த்தும் சொல்வதாக தெரிவித்தனர். ஆவணங்களை தேடிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு விதிமீறல் நடந்த பின்னரும் கண்மாயின் அமைவிடத் தைக்கூட காட்ட முடியாமல் அலுவ லர்கள் திணறினர்.
இதில் அதிருப்தியடைந்த சகாயம், விசாரணையில் உரிய விவரங்களை தெரிவிக்காவிடில் அதை நீதிமன்றத்தில் அப்படியே பதிவு செய்துவிடுவேன். இதற்கு உரிய அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.


Friday, December 19



கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு........!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடிப்படை ஊதியத்தில் 25 விழுக்காடு சிறப்பு ஊதியமாக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 930 முதல் 2 ஆயிரத்து 397 ரூபாய் வரை ஊதிய உயர்வை பல்வேறு நிலையில் உள்ள தொழிலாளர்கள் பெறுவர் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நல்லெண்ணத் தொகையாக ஆலைக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஆலை குடியிருப்பில் வசிக்காதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு நல்லெண்ணத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை ஏற்க முடியாது என்றும், தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்
.

Wednesday, December 17

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை....////


ரூ.3,500 கோடி மதிப்பிலான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு விதிகளை மீறி அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது குறித்து, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது சிதம்பரம் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய நிதியமைச்சர் என்ற முறையில், ரூ.600 கோடிக்கும் குறைவான மதிப்புடைய ஒப்பந்தத்துக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரத்திடம் அண்மையில் விசாரிக்கப்பட்டது.
ரூ.600 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தத்துக்கு பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களைக் கையாளும் அமைச்சரவைக் குழுவால் மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும்.
அதனை மீறி, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணை இன்னமும் முடிவடையவில்லை' என்று சிபிஐ வழக்குரைஞர் கே.கே. கோயல் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பள்ளியில் பயங்கரவாத தாக்குதலுக்கு 132 குழந்தைகள் பலி: 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.......


  • தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பதட்டத்துடன் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள். | படம்: ஏ.பி.
    தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் பதட்டத்துடன் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள். | படம்: ஏ.பி.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்தை குறிவைத்து தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் பத்திரிக்கை 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்தது. பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பள்ளி வளாகத்தில் குண்டுகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையும் நடைபெற்று வருவதோடு, ரத்தக்கறை படிந்த இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அரசு நடத்தும் மீட்பு அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த 6 தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் மொத்தம் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக ராணுவ பள்ளியில் 6 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பிறகு மாணவர்கள் மீது அந்தக் கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. பள்ளிக்குள் 15 முறை குண்டுகள் வெடித்த சத்தமும் கேட்டதாகக் கூறப்பட்டது 

சம்பவ இடத்தில் இருந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் காலையில் கூறும்போது, "தாலிபன் தீவிரவாதிகள் பள்ளி வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திலிருந்து துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. காயமடைந்த மாணவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே சென்றன” என்றார்.

சம்பவ பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நவாஸ் ஷெரிப் பெஷாவர் விரைந்தார்.

பெஷாவர் கிளம்பும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக காண்பதற்குச் செல்கிறேன். அங்கே சிக்கியுள்ள குழந்தைகள் என் குழந்தைகளைப் போன்றவர்கள்" என்றார்.

பாகிஸ்தானில் நிறைய ராணுவப் பள்ளிக் கூடங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட பள்ளியில் சுமார் 500 பேர் படித்து வந்தனர். ராணுவ வீரர்களின் குழந்தைகள் என்றல்ல மற்ற குழந்தைகளும் இத்தகைய பள்ளிகூடங்களில் படித்து வருகின்றனர். கொல்லப்பட்ட மாணவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்கள். மாணவர்கள் தப்பிக்கவே பல வழிமுறைகளைச் சாதுரியமாகக் கையாண்டனர். ஒருவர் இறந்தவர் போல் நடித்து தப்பியுள்ளார்.

பலர் வகுப்பறைகளில் உள்ள டெஸ்கின் அடியில் ஒளிந்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். காப்பற்றப்பட்ட மாணவர்கள் பயத்தில் உறைந்திருந்தனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பலருக்கு தலையில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. 

பாகிஸ்தானில் பெண் சிறுமிகளின் கல்விக்காக போராடி வரும் நோபல் வென்ற மலாலா கூறும்போது, “இந்த மூர்க்கமான தாக்குதல்களினால் என் இருதயம் சுக்கு நூறாக உடைந்துள்ளது. உலகில் உள்ள லட்சக்கணக்கானோருடன் நானும் உயிரிழந்த, காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக கண்ணீர் விடுகிறேன். நாம் தோற்கடிக்கப்படவில்லை” என்றார். 

தெஹ்ரிக் இ தாலிபான் பொறுப்பேற்பு:

தாக்குதல் சம்பவத்துக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. "பெஷாவர் ராணுவப் பள்ளியில் எங்கள் தற்கொலைப் படையினரே தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை குறிவைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறோம். எங்கள் இலக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் மட்டுமே" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது உமர் கொரஸானி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

ராணுவ பள்ளியை குறிவைத்தது ஏன்?

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலுக்கு காரணம் கற்பித்துள்ளது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு.

"வடக்கு வாசாரிஸ்தானில் ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்திருக்கிறோம்.

வேதனையை ராணுவத்தினர் உணரவே இதைச் செய்துள்ளோம்" என தீவிரவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ராணுவ உடையில் தீவிரவாதிகள் ஊடுருவல்:
தீவிரவாதிகள் ராணுவ உடையில் ஊடுருவினர் என்றும், பள்ளியின் அருகே இருந்த மயானத்தின் வழியாகவே அவர்கள் ஊடுருவி இருக்க வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sunday, December 14

புதையும் அமெரிக்கப் பொருளாதாரம்....!


வட்டி வீதம் உயர்த்தப்படவில்லை எனில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தனது செயல்களால் அடிஆழத்துக்கே சென்றது. 

Friday, December 12

எச்.எஸ்.பி.சி. வங்கிக் கணக்குகளில் இந்தியர்களின் ரூ.4479 கோடி கருப்புப் பணம்....


இந்தியாவுக்குள் பதுக்கப்பட்டுள்ள ரூ.14,958 கோடி கருப்பு பணம் குறித்து தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. | கோப்புப் படம்.
எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்கள் தரப்பில் ரூ.4479 கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய மிகப்பெரிய வெளிப்பாடாக எச்.எஸ்.பி.சி. பட்டியலில் ரூ.4,479 கோடிக்கு பணம் இருக்கும் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வருமான வரித்துறை இந்த கணக்கு வைத்திருப்பவர்களில் 79 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தவிர, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகம் இந்தியாவுக்குள் கணக்கில் வராத ரூ.14,957.95 கோடி கருப்புப் பணம் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tuesday, December 9

உடம்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்........

இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பல ஆச்சரியங்கள் பொதிந்துள்ளன. அதிலும் மனித உடலோ அதிசயங்கள் நிரம்பிய ஒன்று. கடுமையாக உழைக்கும் இதயம் முதல், நம்பவே முடியாத மூளை வரை நமது உடலைப் பற்றி வியக்க வைக்கும் தகவல்கள்
உலகிலேயே, ஏன் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களிலேயே மனித மூளைதான் மிகவும் புத்திக்கூர்மை கொண்டது. மனிதர்களின் வாழ்க்கையில் 2 வயதில்தான் மூளை செல்கள் அதிகபட்சமாக இருக்கின்றன. அதேநேரம், மனித மூளை முதிர்ச்சி அடைய 20 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

Sunday, December 7



சென்னையில் நடந்த அம்பேத்கர் நினைவு நாள் 

கூட்டத்தில் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் 

பங்கேற்று NFTCL சங்கத்தின் 

350-க்கும் மேற்பட்ட உருபினர்களுக்கு 

அடையாள அட்டை வழுங்கி, அம்பேத்கர் 

நினைவுகளை சிறப்பித்தார்.

சமூக உணர்வுடன் செயல்படும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்

+  

ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மீதான தவறான படிமம் ஓரளவுக்கு அகலுமாறு சில ஆட்டோ ஓட்டுநர்கள் சமுதாய நல்லுணர்வுடன் செயல்படுகின்றனர்.

ஆட்டோராஜா அமைப்பைச் சேர்ந்த பி.ஜெயக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படும் ஆபத்தை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

காரணம், அவரது மகன், விபத்துக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கியுள்ளார்.. தன் மகனுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அவர் கூறும்போது, “பணியிலிருந்து என் மகன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று மோத, முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டது. அன்று என் மகனின் வண்டி மீது மோதிய அந்த நபர் குடித்திருக்காவிட்டால் இன்று என் மகன் சக்கர நாற்காலியில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.” என்றார்.

இவர் தனது பயணிகளிடத்திலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதலின் ஆபத்தை விளக்குவதோடு, விபத்தில் முடங்கியவர்களுக்கும் ஆறுதல் அளித்துப் பேசி வருவதாக தெரிவித்தார்.

Saturday, December 6

State Bank of India Recruitment 2014 - 6425 Clerical Cadre Vacancies......!

State Bank of India Recruitment 2014 - 6425 Clerical Cadre Vacancies
Click Here to More Details: http://www.tamilanguide.in/
Qualification: B.E/B.Tech, M.E/M.Tech, BCA, MBA, B.Sc, Any Degree, Any Graduation `
Last Date For Apply Online: 09.12.2014




நெல்சன் மண்டேலா உலகை விட்டு மறைந்ததன் நினைவு நாள்...........!

தென் ஆப்ரிக்க மக்களுக்காகப் போராடி பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா இந்த உலகை விட்டு மறைந்ததன் முதலாம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மடிபா என்று தென் ஆப்ரிக்க மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மண்டேலாவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவரது மனைவி கிரேசா மிக்கேல், மறைந்தது அவரது உடல்தான். அவரது ஆத்மா என்றும் நிலையானது. அது என்றுமே இந்நாட்டு மக்களோடு நிலைத்திருக்கும் என்றார்.
நாடு முழுவதும் அவரது நினைவு தினத்தை ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்தனர்.