WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, December 25

வருடம் அச்சிடாத ரூபாய் நோட்டுகள்

மாற்றுவதற்கான அவகாசம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு



 
கந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம்  தேதி வரை நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எந்த வருடத்தில் அச்சிடப்பட்டது என்று குறிப்பிடாமல் புழக்கத்திலுள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்  திரும்ப பெறப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கான அவகாசம் ஏப்ரல் 1ம் தேதி முடியும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த கால அவகாசம் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளின் மறு பக்கத்தில், கீழ் பகுதியில் வருடம் அச்சிடப்பட்டு இருக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment