WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, April 25

இன்று வானில் தெரிகிறது சந்திர கிரகணம் : வெறும் கண்ணால் 27 நிமிடங்களுக்கு பார்க்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

இன்று வானில் தெரியும் சந்திரகிரகணம், 21ம் நூற்றாண்டின், மூன்று சந்திர கிரகணங்களில், மிக நீண்ட நேரம் தெரியும் சந்திர கிரகணம் ஆகும். இதை 27 நிமிடங்களுக்கு வெறுங் கண்ணால் பார்க்க முடியும்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருகிற போது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பின்னர் தெரிவது சந்திர கிரகணம். இந்த ஆண்டு மூன்று சந்திரகிரகணங்கள் மற்றும் இரு வளையம் போன்ற சந்திர கிரகணங்கள் என மொத்தம் 5 கிரகணங்கள் நிகழவுள்ளன. அதன் படி இன்று முதலாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவு இந்திய நேரம் 1 மணி 22 நிமிடங்கள் முதல், 1 மணி 53 நிமிடங்கள்  வரை நிகழ்கிறது. 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் இச்சந்திர கிரகணத்தை அனைவரும் நேரடியாக கண்டு ரசிக்கலாம்.
 

Needless Controversy Over Seat Allocation?


An avoidable confusion and controversy is being created and spread wontedly by some people that a union which did not get even required minimum of 7% in the 6th Membership verification will be allocated one seat in all councils throughout the country. If the management violates its own recognition riles for the sake of pleasing Congress leaders than it will have to face the legal consequences which may ultimately delay the formation of Councils throughout the Country.

    As per the new recognition rules notified on 26/12/2012 to get one seat in the council a union must have at least 7% of total votes. The rounding of fractions there off will  begun only after 7% of votes and not before that. Further one seat means throughout the Country more than 400 seats approximately. Hence it should not be allowed to happen at any cost.

Monday, April 22

Group of Ministers Formed to look in to the affairs of BSNL/MTNL:

The Government of India has appointed a Committee of Group of Ministers( GOM) to look in to the affairs of BSNL/MTNL  in response of to the request of the  Communication Ministry. S/Shree P.Chidambaram, Kabil Sibal, Anand Sharma, Aswini Kumar and Narayana Swamy will be the members of the said Committee. The Committee may submit its report to the Government of India within 3 months. We have apprehension that the reduction of staffs as per the Recommendations of Sam Pitroda Committee, Disinvestment of Share, Merger of BSNL/MTNL and Bailout Package may be finalized by this Committee of Ministers. Hence it is at the most important for the unions to be united and vigilant so that if any anti worker decision is announced we shall fight against such moves immediately.

Sunday, April 21

அருகதை இல்லை !!


பேர் சொல்ல ஆள் இல்லாத போலி(கோலி ) சங்கத்திற்கு ஓடிவிடகூடாது என்பதற்க்காக ஒற்றுமை காத்தவர்களை ,
 உதவாக்கரைகள்  மூலம் அவதுறு செய்வது .எந்தவிதத்திலும் நியாயம் இல்லை ! 


 
கொள்கைக்காக பதவியை விட்டு கொடுத்தவர்களை பார்த்து ,
 பதவிக்காக கொள்கையை விட்டவர்கள்,
 விமர்சனம் செய்ய எந்த அருகதையும்  இல்லை ?



போலிகளுக்கு தகுதி இல்லை ????

புதுவையில் முறைப்படி இரா .தங்கமணி யாகிய நான் மாவட்ட செயலராக இருந்தபோதுதான் புதுவை வலைத்தளம் மாவட்டசங்கம் சார்பில் துவங்கப்பட்டது ,ஆனால் போலியாக பாண்டி வலைத்தளம் போட்டிக்காக தோழர் காமராஜ் நடத்தி வந்தார் ,இதை மாநிலசெயலர் பட்டாபி அவர்களிடம் தெரிவித்தும் .அவர் கண்டு கொள்ளவில்லை .
ஆனால் இவர் நம்மை போலி என்பது ..................போலிகளுக்கு தகுதி இல்லை ????

Saturday, April 20

ஊர் கூடி!!


தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் ஊர் கூடி தேர் இழுப்பார்கள். அது ஒரு கூட்டு முயற்சி. பங்கேற்போர் தங்கள் சக்திக்கேற்ப இழுப்பார்கள். தேர் நிலை வந்து சேரும். இது நடைபெற்று முடிந்த தேர்தலுக்கும் பொருந்தும். 

தமிழகத்தில் நமது உறுப்பினர் எண்ணிக்கையை விட  கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இது ஊழியர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்.
 

கடலூர், காரைக்குடி, கும்பகோணம், சேலம், தஞ்சை, நெல்லை, திருச்சி, வேலூர், மாநில அலுவலக மாவட்டங்கள் வெற்றிக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்று தந்தன.(2126).

கோவை, தருமபுரி, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், நீலகிரி, பாண்டி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றன.
 இவற்றில் BSNLEU சங்கம் கூடுதலாகப் பெற்ற வாக்குகள் 1382. [2126-1382 =744] மொத்தத்தில் அவரவர் சக்திக்கெற்ப பங்களித்துள்ளனர்.

 நாடு முழுவதும் கோலி சங்கத்திற்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அதற்கு தமிழன் தான் காரணம் என்பது சரிதானா? 

 தமிழகத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துரோகிகளை தேடிக் கொண்டிருக்கவில்லை என்பதை கவனிப்பது நல்லது.
 

இது குறித்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம் ஏனெனில் உடனடியான அடுத்த பணி வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர் சேர்க்கும் பணி முன் நிற்கிறது.                                                                    ஈரோடு வலை தளம் ...................

Thursday, April 18

 Final result of 6th Membership Verification.

                   NFTE          =   61,915 (30.28%).
 
                    BSNLEU     =   99,380 (48.60%).

                      FNTO          =  14,088 (6.89%).
 
6th Membership Verification Final Result:
          

            Since no Union has secured more than 51% of total votes (1,04,446) as per the New Recognition Rules only NFTE-BSNL and BSNLEU will be getting recognition  at All India level in BSNL. NFTE-BSNL will not only get full Recognition at all Circles but also get share in National Councils, 35 Circle councils and Local Councils throughout the Country.

We Thank the Employees for giving the opportunity to NFTE-BSNL  for functioning as a Recognized union after a gap of 8 long years.

NFTE-BSNL: 62,100
BSNLEU:       99,546
TAMIL NADU RESULT
 

SSA                       NFTE              BSNLEU
CBT                         586                 1022
CDL                         528                   283
CGM(O)                   225                   184
CON                           47                   176
DPI                             70                   309
ERD                          392                   521
KKD                          274                    77
KMB                         378                     96
MA                            585                   797
NGC                          116                    280
PY                             154                    164
SLM                          696                    584
TNJ                            572                    116
TR                              741                   454
TT                              183                   224
TVL                           369                   315
VGR                          234                    256
VLR                          772                    310
 

TOTAL                      6922                 6168

NFTE WIN BY 754 VOTES
புதுச்சேரி மாவட்ட  தேர்தல் முடிவுகள்

NFTE                           154

FNTO                            28

BSNLEU                     164

NFTBE (KHOLI)             9

ATM                                 3

TEPU                                1


                               -------------
TOTAL                         359
                               -------------

Wednesday, April 17

புதுச்சேரி  மாவட்டம்
    வாக்குப்பதிவு

                       மொத்த வாக்குகள்         =   361

                     பதிவான வாக்குகள்    =  357

                      தபால் வாக்குகள்       =  2
 -----------------------------------------------------------
 மொத்தம் பதிவான வாக்குகள்   =   359
------------------------------------------------------------
               பதிவாகாத வாக்குகள்    = 2


எதிர்காலகடமைக்கு  வாக்களித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!  

Monday, April 15

வெனிசூவேலா அதிபர் தேர்தலில் நிக்கோலாஸ் மதுரோ வெற்றி!!

அதிபர் ஹூகோ சாவேஸின் ஆதரவாளர் நிக்கோலாஸ் மதுரோ வெனிசூவேலாவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்

Tuesday, April 9







  தினம் ஒரு கேள்வி – எட்டு.
போக்கு வரத்து படி உட்பட சில படிகளை 01.04.2013 முதல் நிறுத்திவிட  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்படிபட்ட உத்திரவை 16.04.2013 க்கு முன் வெளியிட வேண்டாம் என பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா?   12.06.2012 உடன்பாட்டின்படி படிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க!

 

 தினம் ஒரு கேள்வி – ஏழு

தேர்வு இல்லாமல் TTA பதவி உயர்வு பெற்று தருவதாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாக்களித்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். அத்தோடு 10+2 கல்வி தகுதி இல்லாத ஊழியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு மூலம் TTA தேர்வு பெறும் வாய்ப்பினை பெற்றுத் தந்த NFTE  சங்கத்தை குறை கூறி வந்தது. பல வாக்குறுதிகளை சாதாரணமாக மறந்து விட்டது போல இந்த வாக்குறுதியையும் மறந்து விட்டது. 10+2 கல்வி தகுதி இல்லாத டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் தேர்வு எழுத முடியாது என பி.எஸ்.என்.எல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இப்படியாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு துரோகம் இழைத்தது. அதே சங்கம் தேர்தல் வருவதால் எந்த திட்டத்தை குறை கூறி வந்ததோ அதே தகுதி தேர்வு முறை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளிக்கிறது வெட்கம் இல்லாமல். அதன் இரட்டை வேடத்தை ஊழியர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

Sunday, April 7

வன்மையாகக் கண்டிக்கின்றோம் !!

2G ஊழல் மற்றும்
ISDN இணைப்பு ஊழல் ஆகியவற்றில்
திமுக மந்திரிகளின் தில்லுமுல்லுவை
ஊரறிய அம்பலப்படுத்தி தொடர்ந்து போராடி வருபவர்
நமது துணைப்பொதுச்செயலர்
அருமைத்தோழர். மதிவாணன் அவர்கள்.
அவர் மீது அவதூறு பரப்பியுள்ளது
தினகரன் பத்திரிகை.
தினகரனின்  திராணியற்ற செயலை
வன்மையாக கண்டிக்கின்றோம்.

கீழ்த்தனமான தந்திரங்களினால்
மகத்தான காரியங்கள்
எதனையும் செய்ய முடியாது
என்ற சுவாமி விவேகாநந்தரின்
பொன்மொழியை
தினகரனுக்கு நினைவூட்டுகின்றோம்.

                           ......காரைக்குடி வலைத்தளம் .....

SEWA BSNL, NFTE-BSNLக்கு ஆதரவு !!

மராட்டியத்திலும் NFTE-BSNL + SEWA BSNL  கூட்டணி!
  SC-ST ஊழியர்க்கு 8 ஆண்டுகளாக துரோகம் இழைப்போருடன் கூட்டணி கூடாது என்று கிளர்ந்தெழுந்து மராட்டிய மாநில SEWA BSNL, NFTE-BSNLக்கு ஆதரவு தர உடன்பாடு கண்டுள்ளது வரவேற்கத்தக்கது.

RUMOUR !!

Rumour mills of BSNLEU on 78.2 merger : BSNLEU is busy propagating that 78.2 IDA merger orders will be issued on 20.04.2013. Apart from conducting a Dharna on 15.2.2013 and passing a resolution demanding 78.2 merger in its CWC held during Feb.2013, BSNLEU has not even written a letter on the subject. The case is with Member (Finance) of DOT. In case of no further objections/ queries by DOT, this has to be cleared by Secretary, DOT who has joined the Department only on 01.04.2013 and then by the MOC.

Similar propaganda is made on Medical allowance and LTC also though only on 02.04.2013 GS BSNLEU has written to BSNL seeking LTC facility for those retiring with in 2 years but after 05.09.2013.

                                                                                           -- NFTE VELLORE


ஏப்ரல் 1 - 2013 முதல் விலைவாசிப்படி
IDA  3.4 சதம்  கூடியுள்ளது.
மொத்தப்புள்ளிகள் 74.9 சதம்.


SENIOR  78.2 IDA  வருவது ஒருபுறம் இருக்கட்டும்.
மற்றுமோர் ..
JUNIOR  78.2 IDA வருவதற்கு இன்னும் 3.3 சதமே  பாக்கியுள்ளது.


மூன்று மாதத்திற்கு ஒரு விலைவாசிப்படி
யாரையும் கேட்காமல் ஊழியர் கரங்களில் முழுதாய் கிடைக்கின்றது
நல்ல வேளை...
அபியின் ஆகாய சாதனைகளில் இன்னும் இது சேரவில்லை. 

                                                 நன்றி -காரைக்குடி 

Saturday, April 6













 10.  The Management after a long delay extended the benefit of encashing 10 days Earn Leave during LTC to our Employees as in the case of Central Government Employees. But Com.Abhimanyu opposed this and written a protest letter against this said order. Immediately the management   withdrawn its order which was beneficial to our Employees. Will any trade union act like this against the interest of Employees?

9. NFTE brought BSNLMRS (Medical Scheme) after CGHS refused to give Medical treatment for our Employees on the plea that we were not Government servants and became BSNL Employees. The finest Medical scheme was gradually dismantled and degraded during the period of BNSLE. Many conditions and restrictions were arbitrarily imposed on Medical treatment under BSNLMRS. It was restricted to two children and Medical allowance was given to our Employees every quarter was suddenly stopped by the Management. Why BSNLEU accepted all these without any murmur. Why it has failed to demand the best medical treatment for our Employees as in the case of Bank, Insurance and other PSU’s?. Why Com Abhimanyu accepted the CGHS rates when we are not Government Employees? Why BSNLEU leaders agreed for partial reimbursement of charges on Employees Medical treatment?.

Friday, April 5

ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை!!

ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.


 

Thursday, April 4

தேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம் !!

05/04/2013 - வெள்ளிக்கிழமை  - மாலை  5 மணி
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்
தலைமை :  தோழர். ந. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர்
சிறப்புரை:   தோழர்கள்
P. செல்லப்பா
மாவட்டச்செயலர்  - SNATTA
S. கேசவன்
 மாநிலப்பொருளர் - SNATTA
T. ஜெபக்குமார்
தலைவர் - NFTE  - விருதுநகர்

சங்க இலக்கியச்செல்வர்   தோழர். கடலூர்
கோ . ஜெயராமன்
 அகில இந்தியச் செயலர் - NFTE

எட்டாண்டு தரித்திரம் துரத்துவோம்..
நூறாண்டு சரித்திரம் திருப்புவோம்..
போராடிப்  பெற்ற உரிமைகளை
காற்றில் பறக்க விட்ட
ஊதாரிகளைப் புறந்தள்ளுவோம் ..
இணைந்த கரங்களுக்கு
வாக்களிப்போம் .
தோழர்களே!  வாரீர்!!
தோழமையுடன்
P. காந்தி                      V . மாரி
 
கிளைச்செயலர்       மாவட்டச்செயலர் 

தினம் ஒரு கேள்வி !!


 7. BSNLEU Promised TTA Promotions Telecom Mechanic cadre officials without any Examinations several years ago and also criticized the scheme of Entrance Examination for Non +2 TM cadre official introduced by NFTE_BSNL. But even after several years it did not bothered about the implementation of any of its promises?. However the management struck to its decision of not permitting Non +2 TM cadre officials even to write Examination for TTA promotion. Thus BSNLEU betrayed TM cadre Employees on TTA promotions. Now the same union demand Entrance Examinations which it criticized during NFTE period why this double standard and double speak.

  8. Is it true the BSNLEU requested the Management to postpone upto 16/04/2013 issuing order for stopping some allowances to our Employees including transport allowance with effect from 01/04/2013 as per its agreement during 2nd Wage revision and on 12/06/2012?

 

Wednesday, April 3

ரூ. 1,200 கோடி தொலை தொடர்பு சேவை ஒப்பந்தம்: அம்பானி சகோதரர்கள் இணைகிறார்கள் !!


கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்திருந்த அம்பானி சகோதரர்களான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைகின்றனர். 4-ஜி தொலைத் தொடர்பு சேவையை அளிப்பதற்காக ரூ. 1,200 கோடி ஒப்பந்தத்தில் இரு சகோதரர்களும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.
 ரிலையன்ஸ் குழுமத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு 2005-ஆம் ஆண்டில் இரு சகோதரர்களும் பிரிந்தனர். இருவரும் தனித்தனியே வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வந்தனர். இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து கூட்டாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 முன்னர் இன்ஃபோடெல் பிராட்பேண்ட் என்ற பெயரிலான இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான இந்நிறுவனத்துக்கு சமீபத்தில்தான் 4-ஜி சேவை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
 நாடு முழுவதும் 22 சேவை பகுதிகளில் 4-ஜி சேவை அளிப்பதற்காக அனில் அம்பானி நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1,20,000 கி.மீ. தூரத்துக்கு போட்டுள்ள கண்ணாடியிழை கேபிள் வசதியை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இதற்காக இந்நிறுவனம் ரூ. 1,200 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸýக்கு அளிக்கும்.
 எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ அளிக்க உள்ள வாய்ஸ் சேவைக்காக அனில் நிறுவனத்தின் 20 ஆயிரம் தொலைத் தொடர்பு டவர்களையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
 மிகுந்த கடன் சுமையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கூடுதல் வருமானம் கிடைக்க வழியேற்படுத்தியுள்ளது. கடந்த 14 காலாண்டுகளில் 13 காலாண்டுகளில் இந்நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 55 வயதான முகேஷ், தந்தையின் மறைவுக்குப் பிறகு பெட்ரோகெமிக்கல்ஸ், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அனில் அம்பானி மின்சாரம், நிதிச் சேவை மற்றும் தொலைத் தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
 

Tuesday, April 2


தினம் ஒரு கேள்வி !!


 5.    BSNLEU always propaganda that it has stopped VRS/CRS in BSNL. But the hard fact is that BSNL board has already approved a retrenchment plan for reducing  one lakh Employees/ Executives as per the recommendations of the Sam Pitroda committee which was appointed by the Prime Minister of the Country. The proposal for retrenchment of Employees is actively being considered at Communication Ministry. As and when the approval of the Ministry is conveyed the retrenchment scheme will be implemented in BSNL. Why the leaders of BSNLEU still bluffing to the Employees that it has stopped the VRS/CRS?



6.   BSNLEU wasted 9 years of recognition without solving any one issue of directly recruited Employees. The retirement benefits are not worked out for these Employees till this date. Further these Employees were denied 30% wage hike as in the case of other Employees. Where as JTO/JAO’s placed in the similar conditions were given wage hike (5 Increments) even though they got appointed directly into BSNL after 01/01/2007. Why this discrimination for Non- Executive Employees also? 

Monday, April 1

தினம் ஒரு கேள்வி – நான்கு
 78.2 சத அகவிலைப்படி இணைப்பை நிர்வாகம் ஏற்றுக் கொண்டாதாக உரக்கக் கூவி ஜூன் 12,2012 வேலை நிறுத்த அறைகூவலை ஒத்தி வைத்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். 10 மாதங்கள் கழிந்து விட்டது. ஆனால் இன்று வரை ஊழியர்களுக்கு 78.2 சத இணைப்பு கிடைக்கவில்லை. ஊழியர்கள் இது வரை இழந்தது மொத்தமாக ரூ.6000 கோடி. ஏற்கனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறாமல் ஓய்வூதிய பலன் இல்லாமல் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். ஆசை வெட்கமறியாது. அதனால் தான் பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் தேர்தல் அறிவிப்புகளில் 78.2 சத இணைப்பு தீர்வு காணப்பட்டுவிட்டது / பெற்றுவிட்டோம் / உறுதி செய்யப்பட்டுவிட்டது என அறிவித்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது. ஒரு தொழிற் சங்கம் இப்படிப்பட்ட பட்டவர்த்தனமான பொய்யான பிரச்சாரத்தை அதுவும் வாக்குகளைப் பெறுவதற்காகச் செய்யலாமா?
                                 நன்றி: சென்னை இணைய தளம்.
4. BSNLEU agreed to defer the proposed 12/06/2012 strike on the spacious plea that the demand for 78.2% IDA merger was accepted by the management. But till this time evenafter the expiry of 10 months we did not get 78.2% IDA merger. Our employees have lost already more than Rs 6000 crores on this account. Already more than 10000 employees retired from the company without getting the 78.2% IDA merger. However BSNLEU shamelessly printed posters for Election propaganda mentioning 78.2% IDA merger issue has settled/ achieved/ ensured. Can a trade union indulge in such blatant false propaganda only to get few votes?
தேர்தல் சிறப்புக் கூட்டம்!!

         02.04.2013 செவ்வாய் கிழமை
      மாலை சரியாக 5 மணி.
      டெலிபோன் பவன், ஈரோடு

தலைமை
தோழர் கே.ராஜமாணிக்கம்


சிறப்புரை

தோழர் C.K.மதிவாணன்
துணைப் பொதுச் செயலர். 



சங்க முழக்கம்
 தேர்தல் சிறப்பிதழ். வெளியீடு
அனைவரும் வருக!

          ஈரோடு மாவட்ட சங்கம்
.....
 We all know that “Bonus is deferred wage” and it has to be paid as a 13th month salary whether the company is in profit or loss. BSNLEU which is supported by Marxist party and guided by CITU signed agreement linking profit for the payment of Bonus. Is it correct for left trade union which boast about its revolutionary credentials?. The same people abused Com.O.P.Gupta for agreeing to the “ Productivity  linked Bonus formula”. But after they got power they signed agreement for linking profit for payment of Bonus. Because of this single blunder our employees were denied even minimum Bonus for the last 3 consecutive years evenwhile the DPE declared the performance of BSNL as “Excellent” the management denied the Bonus to our Employees only due to the profit linking formula. BSNLEU accepted this without any murmur, Is it correct?.
தினம் ஒரு கேள்வி - மூன்று
“போனஸ்  என்பது கொடுபடா ஊதியம்” என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும், நட்டத்தில் இயங்கினாலும் 13 வது மாத ஊதியம் என்ற அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு உண்டு. அது சி.ஐ.டி.யூ சங்கத்தின் வழிகாட்டுதல்படி  செயல்படுகிறது. அப்படிப்பட்ட சங்கம் போனஸ் வழங்கப்படுவதை லாபத்துடன் இணைந்து உடன்பாடு போட்டது. தன்னை இடதுசாரி, புரட்சிகர சங்கம் என பறைசாற்றிக் கொள்ளும் ஒரு சங்கத்தின் செயல்பாடு சரியானது தானா?  தோழர் குப்தா உற்பத்தியோடு இணைந்த போனஸ் உடன்பாடு கண்ட போது அவரை அவதூறு செய்தார்கள். ஆனால் அங்கீகார அதிகாரம் கிடைத்தவுடன் போனஸை லாபத்துடன் இணைத்து உடன்பாடு போட்டார்கள். இந்த ஒரு மாபெரும் தவறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்தபட்ச போனஸ் கூட பி.எஸ்.என்.எல்.ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பொதுத்துறை நிறுவன இலாக்கா பி.எஸ்.என்.எல். நிறுவனம் “மிகச் சிறப்பாக” செயல்படுவதாக சான்றளித்துள்ளது. போனஸை லாபத்துடன் இணைத்த காரணத்தால் நிர்வாகம் போனஸ் தர மறுக்கிறது. இதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இது சரியா?
                    நன்றி: சென்னை இணைய தளம்

ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்!!


முறையான அனுமதி பெறாமல், 312 பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்து உள்ளது.

அனுமதி: @@இதுதொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ள அறிக்கை:பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ., யின் அனுமதி பெற வேண்டும். அப்படி, அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களில், பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாது.இருப்பினும், கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, மகாராஷ்டிராவில், 79; டில்லியில், 63;ஆந்திராவில், 43; தமிழகத்தில், 10 என, நாடு முழுவதும், மொத்தம், 312 பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியின்றி செயல்படுகின்றன.நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில், மேலாண்மை படிப்புகளுக்கான இடங்கள், 2006ல், 94 ஆயிரமாக இருந்தன. 2011ல், இந்த எண்ணிக்கை, 3.52 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கை அளவு, 5.50 லட்சத்திலிருந்து, 14.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

மூடல்:@@மாணவர்கள் சேர்க்கை அளவு, இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்ட போதிலும், அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.அதேநேரத்தில், மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், கடந்த, இரண்டு ஆண்டுகளில், 225 மேலாண்மை கல்லூரிகளும், 52 பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில், 138 தொழில் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு, ஏ.ஐ.சி.டி.இ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அச்சம்:@@இதுதொடர்பாக, கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:முறையான அனுமதி பெறாத பல கல்வி நிறுவனங்கள், பெரிய அளவில் இயங்கி வருவதால், மாணவர்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் மத்தியில், தொழில்நுட்ப கல்வி பயில்வதில், ஆர்வம் குறைய தொடங்கிஉள்ளது. இதேநிலை தொடர்ந்தால், நாட்டின்
முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும்.இவ்வாறு கல்வியாளர் கூறினார்.

தமிழகத்தில், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் கல்வி நிறுவனங்கள்:
1.ஐ.சி.எப்.ஏ.ஐ., நுங்கம்பாக்கம், சென்னை,
2. ஐ.சி.எப்.ஏ.ஐ., அடையாறு, சென்னை,
3. ஐ.சி.எப்.ஏ.ஐ., மேற்கு தாம்பரம், சென்னை,
4.இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பிசினஸ் அன்ட் மேனேஜ்மென்ட் பி.லிட்., எழும்பூர்,சென்னை,
5. எம்.இ.ஆர்.ஐ.டி., சுவிஸ் ஏசியன் ஸ்கூல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஊட்டி,
6. நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட், அடையாறு, சென்னை,
7. நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், சாந்தோம், சென்னை,
8. ஸ்டான்ஸ்பீல்ட் ஸ்கூல் ஆப் பிசினஸ், மவுன்ட் ரோடு, சென்னை,
9. கிரேட் லேக்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், சென்னை,
10. ராய் பிசினஸ் ஸ்கூல், தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புடைய செய்திகள்