WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, July 28

அப்துல் கலாம் மறைவு .........


புதுச்சேரி இப்டாவின் ஆழ்ந்த அஞ்சலி..............முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 83.


Monday, July 20

NFTCL தமிழ்மாநில செயற்குழு (19-07-2015)ல் M அப்பாதுரை Ex MP, மாநில தலைவர்  தலைமையில் நடைபெற்றது .தோழர்கள் ,C K மதிவாணன் ,  K அசோகராஜன் ,S ஆனந்தன் ,பாபு,அன்பழகன் கடலூர்   உள்பட மேலும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .சில முக்கிய முடிவுகளை தீர்மானமாக வடிவமைத்து முடிவு செய்தனர் .
* 2015 செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்வது ,
*2015 அக்டோபர் 2 வள்ளுவர் கோட்டம் எதிரில்(சென்னை ) தொடர் கோரிக்கை முழக்கம், போராட்டம் நடத்துவது,
*மேலும் சில அமைப்பு முடிவுகள் எடுக்கப்பட்டது .






Wednesday, July 15


இன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள் ........






தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார்.

தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.பெரியாரின் வார்த்தைகள்

1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

காமராஜரின் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலம்.

Tuesday, July 14

அஞ்சலி........

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை காலம் கவர்ந்து சென்றுவிட்டது. இன்றைய நடுத்தர வயதினர் முனுமுனுக்கின்ற பாடல்கள் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்களாக இருக்கும். பட்டுக்கோட்டை பாடல்களை பாசவலையில் அறிமுகம் செய்தவர். அவர் மறைவுக்கு இப்டா புதுச்சேரி அஞ்சலி செலுத்துகிறது.