WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, June 28


JAC of non-executive unions meeting with management:- In respect of 
memorandum submitted by the joint Action Committee of union and Association of  nonexecutive, A meeting was held under the Chairmanship of the Director (HR) on 27-06-
2014. The Sr. GM(SR), Sr. GM(Est), GM(Pers), GM(Admn), GM (EF), GM(Restg) and 
DGM(SR) were present from official side. Com. Islam Ahmad President and C. Singh, 
GS represented the NFTE along with other JAC leaders.  A brief note of discussions 
upon issues are as follows. 
(a) Stagnation of Group ‘D’ employees:- Director decided that the various 
alternatives and suggestions will be looked into for settlement of the problem. 
(b) Wage erosion of Post 2007 employees:- Staff side forcefully demanded for the 
settlement. Now presentation will be given to BSNL Management. 
(c) 30% superannuation benefits to D/R employees:- Director (HR) indicated to 
extend 2% contribution. The unions pressed for increase in superannuation 
benefits to which there had been favourable indication. Even Higher Level 
Committee has recommended only 2% contribution. 
(d) PLI (Bonus):- The Director(HR) decided that it should be linked with the 
productivity and not with profit/performance. Now the committee will meet on 23
rd
July. 
(e) HPC for CGA:- The Director (HR) decided that the HPC will take place in July, 
2014 and he will remove all the impediments.   
(f) Hardships in NEPP:- Already discussed in the standing committee on 26
th
instant. 
(g) JTO/JAO results:- Staff side has pointed out that nothing has been mentioned 
for JAO examination results. The questions answered in Hindi have not been 
evaluated in Rajasthan. The Chairman assured for appropriate action. 
(h) Revision of Pay Scales of Sr. TOA, TM, Driver etc:- It will be discussed in the 
committee. 
(i) PO in respect of employees whose training started in DOT period but 
appointed after formation of BSNL:- Matter is pending in DOT. 
(j) Option to the non-executives for fixation of pay on the date of next 
increment which felt after 01-10-2000:- Matter to be decided including 
stoppage of recoveries. 
(k) Settlement of anomalies due to 1
st
 wage revision:- Pending in DOT.  
(l) Eligibility conditions for appearing TM, Raj Bhasha Aadhikari, TTA, JTO 
and JAO examinations:- R/Rs are being revised. 
(m) Rs. 200/- SIM to all the non-executives:- Orders expected very soon. 
(n)  Revival of Telecom factories:- Space given to a company for manufacture of 
OFC. Matter is receiving attention. (o) Restoration of LTC,  Leave Encashment etc and Medical Allowance:- Staff 
side pressed for restoration of atleast LTC which was not agreed to by the 
Chairman. It will be perused further. 
(p) Wage revision in year 2017:– A fervent appeal from Chairman (Director HR):- 
The Chairman (Director (HR) while concluding the meeting with the unions on 
27-06-2014 made fervent appeal to all the unions to ensure that the wage 
revision takes place in year 2017. He told for wage revision it is necessary that 
the BSNL should be in profit for two years i.e. in years 2014-15 and 2015-16. The 
Staff side urges upon all to exert to the maximum to improve the revenue of the 
company although heavy odds are before us. 
(q) Revision of pension,  based on 78.2% IDA merger:- The issue is pending in 
DOT. 
(r) Relaxing the eligibility conditions to appear JTO, JAO, TTA, TM, etc:-
Revision of R/Rs in respect of TTA, JTO are pending in BSNL board for approval. 
(s) Revision of Allowances:- The financial position of company is not satisfactory 
so the demand is not accepted.  
(t) Manning of Call Centre by BSNL employees:- BSNL management agreed to 
review the matter to maintain call centers by BSNL employees, which are being 
maintain by outsourcing basis at present. 
(u) Fresh Recruitment of staff:- Consultant is engaged to study the issue. 
(v) Regularization of left out casual labourers:- In view of Supreme Court 
decision management not accepted the demand of JAC for regularization of left 
our causal labourers.   
(w) Promotion based on personal upgradation of the officials who had 
completed Telecom Mechanic Training:- The management not accepted the 
demand of JAC. 
(x) Filling up of SC/ST backlog vacancies:- This issue was already discussed in 
the last meeting of the National Council on 23
rd
 April, 2014 in which management 
had assured to take appropriate action in the matter. 
(y) Permitting the Non-Executives to appear Management Trainee Exam:- This 
item was discussed in the National Council held on 23-04-2014, that the RR of 
MT will be reviewed after the first exam. 
(z) Change of Designations:- The issue will be discussed on 23 -07-2014 with joint 
committee for change of designations and all efforts would be taken to finalize 
the designations of non-executive employees .
         news; vellore webside......

Friday, June 20


இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!:முக்கிய புள்ளி விபரங்கள்

இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட படி ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் அனுட்டிக்கப் படுகின்றது.
உலகளாவிய ரீதியில் பெருகி வரும் அகதிகளின் பிரச்சினைகள் குறித்து உலக மக்களிடையே கவனத்தை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். எனவே நிகழ்கால உலகில் அகதிகள் பிரச்சினை குறித்த முக்கிய புள்ளி விபரங்கள் கீழே,
உலகம் முழுதும் தற்போது அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனைத் (5 கோடி) தாண்டி விட்டது. இந்த எண்ணிக்கை 2 உலகப் போருக்குப் பின்னர் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை என்பதுடன் மொத்த உலக சனத்தொகையில் 0.7% வீதமும் ஆகும். இன்றைய உலகில் அகதிகள் பிரச்சினை தலைவிரித்தாடும் முக்கிய நாடுகளாக சிரியா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை விளங்குகின்றன.
உலகம் முழுதும் 33 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலும் 17 மில்லியன் மக்கள் வரை வெளிநாடுகளுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் அகதிகள் எண்ணிக்கை 6 மில்லியனால் அதிகரித்துள்ளது.
முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஆனால் தொடர்ந்து நீடித்து வரும் போர்களாலும் அகதிகளை ஏற்றுக் கொள்ள செல்வந்த நாடுகளின் அர்ப்பணிப்பு போதுமானதாக இல்லாததுமே உலகில் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வரக் காரணம் என ஐ.நா தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போர் மட்டுமன்றி அகதிகள் உருவாக இன்ன பிற காரணங்களாக வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பஞ்சம் போன்றவையும் விளங்குகின்றன. மேலும் உலகில் தற்போது உள்நாட்டுப் போர் காரணமாக உருவாகி வரும் அகதிகளில் 55% வீதம் சிரிய யுத்தத்தால் உருவானவர்கள் என்பதுடன் தற்போதுள்ள உலகில் உள்ள அகதிகளில் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் உலகில் அதிகளவான அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் நாடுகளாகப் பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகியவை விளங்குகின்றன.

இந்தி மொழித் திணிப்பு முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு!

மோடி பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சமூக வலைதளங்களில் அதிகாரிகள் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தைத் தெரிவித்ததோடு உத்த உத்தரவை மீளப் பெறவேண்டும் என மத்திய அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் "ட்விட்டர்", "பேஸ்புக்" போன்ற தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது. அதிலும், முதலில் இந்தியில் பதிவிட்ட பின்னர் ஆங்கிலத்தில் பதிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஆங்கிலத்தை விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. சட்டப்படி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்பு மொழி ஆங்கிலமாகும். 1976-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி குறித்த சட்டப்படி, மத்திய அரசு அலுவலகலங்களில் இருந்து சி- பிராந்தியத்தில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அச்சட்டப்பிரிவில், இந்தி பேசாத மக்கள், இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சி- பிராந்தியத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் அனைத்து தொடர்பையும் ஆங்கிலத்தில் மேற்கொள்வது அவசியமாக இருக்கும் நிலையில், ஆங்கிலத்தில் தகவலை தெரிவிக்காவிட்டால் அது அவர்களுக்குச் சென்றடையாது. அவ்வாறு இருக்கும்போது, உள்துறை அமைச்சகம் தொடர்பு மொழியாக இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியிருப்பது 1963-ல் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத்திற்கே எதிரானதாகும். எனவே, அரசின் சார்பில் சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சக உத்தரவில் தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொண்டு ஆங்கிலத்தை பயன்படுத்த பிரதமர் வழிவகை செய்ய வேண்டும்.

தமிழை ஆட்சி மொழியாக்குக இதேபோல், கடந்த 3-ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் தொண்மை வாய்ந்த தமிழ் மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தேன். மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் அத்தனையையும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 8-ல் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். இந்த கோரிக்கைளை நிறைவேற்றினாலே, சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். என முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் விளக்கியுள்ளார்.


   மத்திய அமைச்சரின்  நேரடி பார்வையில்

                 பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்!!


                                   
டெல்லி: இந்திய தொலைதொடர்பு துறையில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் செயல்பாடுகளை உக்குவிக்க மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேரடியாகவே கவனிக்க உள்ளார். இதற்காக, அந்த நிறுவனங்களின் டவர்கள் அனைத்தையும் இணைத்து ஒரு நெட்வொர்க் அமைப்பு அவருடைய அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே இந்தியாவில் குறைந்த விலையில் சிறப்பான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு நிறுவனங்களும், இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படை வசதிகளுக்கு அரசு உதவி "இந்த இரு சேவை நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது. அவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கித் தருவது மத்திய அரசின் கடமை. அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

Friday, June 13



                      வருந்துகிறோம்.........

 நமது சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அவர்களின் மனைவி 
திருமதி.ரஷிதா பேகம் (12-6-14) அன்று அதிகாலை காலமானார் அவரது மறைவுக்கு நமது 
ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.  

Wednesday, June 11

தொலைபேசி இணைப்பில் முறைகேடு: அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராகிறது சி .பி.ஐ........


பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. அடுத்தக் கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தில்லிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த விவரம்: கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், தனது வீடு இருக்கும் ராஜாஅண்ணாமலைபுரம் போட்கிளப் வீட்டுக்கு வழங்கப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக சன் டி.வி. நிறுவனத்துக்கு வழங்கியதாக புகார் கூறப்பட்டது. இதற்காக தயாநிதிமாறன் தனது வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்துக்கு (சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்) பைபர் கேபிள் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு மூலம் ரூ. 400 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, புது தில்லியில் சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக தயாநிதிமாறன் வீடு உள்பட பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர், இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வாரமாக சென்னை தியாகராய நகர் கிரி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தில்லியைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை செய்தனர்.
குறிப்பாக, சன் டி.வி. நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் சன் டி.வி.யின் தலைமை நிர்வாகியாக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை செய்யப்பட்டது.
தில்லிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்: இந்நிலையில் சென்னையில் முகாமிட்டிருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள், விசாரணையில் பங்கேற்றவர்கள் அளித்த வாக்குமூலத்தையும் எடுத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கவே தில்லிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதிமாறன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை செய்ய உள்ளனர்.

Wednesday, June 4


IDA  உயரும் !
 
ஏப்ரல் மாத விலைவாசி புள்ளி- 239 எனவும் மே மாத விலைவாசி புள்ளி 242 எனவும் உயர்ந்துள்ளதால் ஜூன் மாதம் எந்த உயர்வும் இல்லாவிட்டாலும் கூட நமது IDA, 2.4சதம் கூடுதல் ஆக வாய்ப்புள்ளது.