WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, October 25

போனஸ் போராட்டம்!!!

BSNL  ஊழியர்களுக்கு
போனஸ் வழங்கக்கோரி

30/10/2013 திங்கள் கிழமை 

அகில இந்திய , மாநில
மாவட்டத்தலைநகர்களில்
உண்ணாவிரதம், போராட்டம் !!!

Bonus: Hunger strike on 30th October. A delegation consisting of President, GS and Secretaries (Comrades Rajmouli and Rajpal) held meeting with CMD, BSNL on 22nd Oct. and urged for Bonus payment. The CMD who has returned from Tamilnadu, Madurai etc, was very much impressed with the performance and presentation of the employees. The CMD showed helplessness due to financial condition of BSNL. He sought cooperation from the employees. The delegation pressed but he has not agreed to the demand. With profound anguish we call upon the workers to organize hunger strike on 30-10-213 and demonstrate same day during lunch hour. President and Secretaries only will sit on hunger strike at CHQ, Circle and District levels. Make the programme successful.                                                                                                                                   chq...........  
       One Day Fast for Bonus by Leaders at SSA, Circle and CHQ Level on Oct 30th- A  Kind of Repentance Day for the environment of No Bonus- President and Secretaries are requested to sit Fast..                                                                                            TNcircle........
மறப்பது மனித இயல்பு !
            நினைவு படுத்துவது நமது மரபு !!
2003ல் போனஸ் ,மறுக்கப்பட்ட போது NFTE-BSNL ஒரே அங்கீகாரச் சங்கம் ! ஆனாலும் BSNLEU உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடி உடனடியாக 75 % போனஸ், வருவாய் உயர்ந்தவுடன் மீதி போனஸ்  என்று உடன்பாடு போட்டது.

2013,  BSNLEU, NFTE-BSNL ஆகிய இரண்டு சங்கங்களுக்கு அங்கீகாரம் ! ஆனால் NFTE-BSNLஐ தீண்டமாட்டேன் என்று ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து போராட்ட அறைகூவல் விடுத்து போனஸ் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு உடன்பாடு போட்டு அதற்கு மகத்தான உடன்பாடு என்று  நாமகரணம் சூட்டுகிறது  BSNLEU

Tuesday, October 22

சொன்னது நீதானா?? சொல்,,,,,,சொல்…


தோழர்களே, நாம் சில நிகழ்வுகளை பின்னோக்கி பார்க்கிறோம்..
அங்கீகாரத் தேர்தல் முடிந்த கையோடு எம்ப்ளாயீஸ் யூனியன் தனது வலைதளத்தில் 19-04-2013 இவ்வாறு எழுதியது” இந்த அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற NFTE-BSNL சங்கத்தை மனதாரப் பாராட்டுகிறோம். இனி வரும் காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் NFTE-BSNL சங்கத்தோடு தோளோடு தோள் நின்று தொழிலாளிக்காக போராடுவோம்”..ஆனால் நடந்தது என்ன? கல்கத்தாவில் நடந்த அவர்களது மத்திய சங்க செயற்குழுவில் 4-9-2013 NFTE-BSNL கலந்து ஆலோசனை செய்யாமலே போராட்ட அறிவிப்பினை தன்னிச்சையாக வெளியிட்டது.

நமது அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணன் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுவில் BSNLEU சங்கத்தின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். BSNLEU சங்கம் சேர்ந்து போராடி தொழிலாளி பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டால் அந்த வெற்றி NFTE-BSNL சேர்ந்ததால்தான் கிடைத்தது என்று ஆகிவிடும் என்று BSNLEU நினைக்கிறது அதனாலேயே நம்மோடு குறிப்பாக NEPP BONUS போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒன்றுபட்ட போராட்டத்தை தவிர்க்கிறது.  இதனை பட்டவர்த்தனமாக தோழர் மதிவாணன் கூட்டத்தில் வெளியிட்டபோது அதனை அனைவரும் ஆமோதித்தனர். அதேபோல அச்சங்கம் நம்மோடு சேர்ந்து ஒரு வெளிப்படையான உடன்பாட்டை போடவும் பயப்படுகிறது.

டெல்லியில் புதிய அகில இந்திய கவுன்சில் அமைக்கப்பட்ட உடனேயே நம் சங்கத்தின் சார்பாக போனஸ், பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகள், நான்காம்பிரிவு ஊழியர் பிரச்சனைகள் இவைகளை பட்டியலிட்டு நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது..  ஆனால் அவைகளை அப்படியே துளீயும் மாறாமல் தங்களது போராட்ட கோரிக்கைகளாக BSNLEU அறிவித்தது. நாம் நிர்வாகத்தை உடனடி கவுன்சில கூட்ட வற்புறுத்திய போது நிர்வாகம் ஊழியர் தரப்பு செயலர் (BSNLEU) இதுவரை எந்த பிரச்சனைகளையும் கவுன்சிலுக்கு சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தது.

18-10-2013 BSNLEU சங்கம் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையை முடிவுகளை பார்க்கும்போது அது எல்லா கோரிக்கைகளையும் சரண்டர் செய்து விட்டதுஎன்பதை அனைவரும் அறிவர்.

போனஸ் இல்லை, நான்காம் பிரிவு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பாதிப்புகள் களையப்படவில்லை, NEPP-ல் உள்ள CR AverageEntry களையப்படவில்லை, SC/ST ரிசர்வேசன் பதவி உயர்வில் மறுப்பு, LTC, MEDICAL ALLOWANCE  கோவிந்தா…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டது போல தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்து ஊழியர்களின் காதில் பூ வைக்க முயல்கிறது BSNLEU சங்கம்…
ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே தொழிலாளி பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்று எப்போது BSNLEU சங்கம் நினைக்கிறதோ அன்றுதான் பிரச்சனைகள் தீரும். தனது பெரியண்ணன் போக்கை BSNLEU சங்கம் என்றுதான் கைவிடப்போகிறதோ..அது அவர்களுக்கே வெளிச்சம்..

ஒன்றுபட்ட போராட்டம்
ஒன்றே நமது துயரோட்டும

Sunday, October 20

பண மெத்தையில் படுத்துப் புரண்ட மார்க்சிஸ்ட் தலைவர் நீக்கம்!


திரிபுரா மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்க்ளில் ஒருவரான சமர் ஆச்சார்ஜி பண மெத்தையில் படுத்து புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இவரது செயல் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சமர் ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழுந்தன. மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரும் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் உண்மை முகம் வெளிவந்துள்ளது எனக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனால், கட்சியின் உயர்மட்டக் குழு உடனடியாகக் கூடி இது குறித்து விவாதித்தது. இது தொடர்பாக சமர் ஆச்சார்ஜியை விசாரணை செய்த போது, பண மெத்தையில் படுத்திருப்பதை இவரே கைபேசியில் பதிவு செய்து உள்ளூர் தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பருக்கு அனுப்பிக் கொடுத்தது தெரிந்தது. 

எனவே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், சமர் ஆச்சார்ஜி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Saturday, October 19

BSNL டைரக்டர் (மனித வளம்) திரு. A.N.ராய்,
சீனியர் அதிகாரிகளுடன் CHQ தலைவர்கள் சந்திப்பு !

18.10.2013 அன்று முற்பகலில் டெல்லியில் நமது அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர்,இஸ்லாம் அகமது, அகில இந்திய சங்க துனை பொதுச் செயலர் தோழர் C.K. மதிவாணன் ஆகியோர்
திரு.A.N. ராய், டைரக்டர் (HR),மற்றும் திரு அகர்வால்.சீனியர் GM (Per), திரு.R.K.கோயல் Sr.GM (Estt), திரு சதீஷ் வாதா, DGM (SR)ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கீழ்க்கண்ட ஊழியர்களின் பிரச்னைகளை விவாதித்தனர்.

1. தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்ச போனஸ் வழங்கவேண்டும்
என்று வலியுறுத்தினர்.

2. தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் :

புதியதாக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.

3. கருணைப் பணி : இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட சில விளக்கங்கள்
இறந்த ஊழியர் குடும்பத்திற்கு பாதகமாக உள்ளது. ஆகவே அவை
மாற்றப்பட வேண்டும்.

4. சென்னை TSM, கேசுவல் ஊழியர்களின் பிரச்னை சென்னை CAT
மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கப்பட
வேண்டும்

5. கவுன்சில்கள் புதிய BSNL அங்கீகார விதிகளின்படி அமைக்கப்பட
வேண்டும் .

6. ஊழியர் நல குழுக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வெல்பேர் போர்டுகள் :
இரண்டு அங்கீகாரச் சங்ககளுக்கும் நியமன உறுப்பினர்கள் 1:1 விகிதாசாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

கூட்டம் முடியும் போது மீண்டும் தீபாவளித் திருநாளுக்கு முன்பாக போனஸ் வாங்கிட வலியுறுத்தப்பட்டது.

Meeting With Director (HRD) and other Senior Officers:

Today Our CHQ leaders Com.Islam Ahmed, President and Com.C.K.Mathivanan, Dy.GS met Sri..A.N.Rai, Director(HR), BSNL, Sri.Aggarwal, Sr.GM (Per),Sri. R.K.Goyal, Sr.GM
( Estt) Sri.Sathish Wadhwa DGM (SR) separately and discussed the following staff issues.

1.Payment Of Minimum Bonus before Diwali :

Our leaders urged the Management to ensure payment of minimum bonus before Deepawali.

2. Immediate Convening of National Council :

The newly constituted National Council may be convened at the earliest to discuss the pending staff matters.

3. Compassionate appointments: Some clarifications issued by the Management are against the interests of the family of the deceased employees. Hence modifications may be issued.

4. Reinstatement of 27 Casual Mazdoors in Chennai Circle as per the Judgement of the Chennai CAT and Madras High Court.

5. Nominations to Welfare Boards/Sports Councils : The number of nominees from both the Recognised Unions may be increased in the 1:1 ratio.

6.Strict implementation of the BSNL Recognition Rules .
Nominations to the Councils may be accepted strictly as per the new BSNL Recognition Rules

In conclusion our leaders once again pressed for the payment of Bonus before Diwali.

பணக்கட்டிலில் படுத்துப் புரண்ட சிபிஎம் தலைவர் : வீடியோவால் பரபரப்பு !!





 திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சமர் ஆச்சார்ஜி என்பவர் வழங்கிய இச்செவ்வியில், தான்  ரூ.20 இலட்சத்தை வங்கியிலிருந்து எடுத்து வந்து அதனைக் கட்டிலில் கொட்டி அதன் மேல் படுத்து உருண்டேன். இதன் மூலம் பண மெத்தை மேல் படுத்து உறங்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக்கொண்டேன். மற்றவர்களை போல் வெளியில் ஏழ்மையானவர்களாக போலியாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அகர்தலாவில் மாநகராட்சியின் 3 வார்டுகளிலும் கழிவறை அமைக்கும் ஒப்பந்தம் எடுத்ததில், எனக்கு ரூபாய் இரண்டரை கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது என அவரே தனது திருவாய் மலர்ந்து கூறுகிறார்.  இவ்வீடியோவைப் பார்த்த பலரும், சிபிஎம் கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Wednesday, October 16

IDA 6.6 %  உயர்வு. மொத்தம் 85.5 %. 
BSNL   உத்திரவு வெளியிட்டது. 

Sunday, October 13

அமெரிக்காவி்ற்கு நெருக்கடி:உலக வங்கி எச்சரிக்கை!!

செலவின மசோதா அமெரிக்க பார்லி.,யில் நிறைவேறாததால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு, ஷட்டவுன் அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வாரத்தை நிதி நெருக்கடி எட்டியுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யங் கிம் கூறுகையில், அமெரிக்க நிதி நிலை ஆபத்தான கட்டத்தை எட்ட இன்னும் ஐந்து தினங்களே உள்ளன, என்றார்.

Thursday, October 10

அப்போ, நம்பூதிரி BSNLEU தலைவர் இல்லையா !


              தயாநிதி மாறனின் மீது CBI வழக்கு !!

ஒரு தனி நபரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இல்லை !

    ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !!!

          சென்னை கோவிந்த ராஜனின் உளறல்....... 

    தயாநிதி மாறனின் 323 ISDN முறைகேடு பற்றி CBI வழக்கு பதிவு செய்தவுடன் சென்னை BSNLEU மாநிலச் செயலர்  கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து தனக்கு மட்டுமல்ல, அனைத்து சங்கங்களுக்கும்   அந்த ஊழல் வெளியானதில் பங்கு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது கண்டு குபீர் என்று சிரிப்புதான் வந்தது.

        முறையற்ற வகையில் கூட்டணி அமைத்து அங்கீகாரம் பெற,
2004ல் நமக்கு வரவேண்டிய, நிர்வாகம் தர ஒப்புக்கொண்ட அலவன்ஸ்களை தடுத்து நிறுத்திட,  தயாநிதி மாறன் காலில் விழத்  துவங்கியதிலிருந்து இன்று வரை BSNLEU சங்கத்தார்,  ஒரு வார்த்தை யாவது மாறனை எதிர்த்து எழுதியோ பேசியோ நாம் கண்டதில்லை கேட்டதில்லை.

   சென்னையில் நடந்த முறைகேட்டை எதிர்த்து போராடினார்களாம் ! 

இது பற்றி எந்த தகவலும் எந்த பத்திரிக்கையிலோ ஏன் அவர்கள் வெப்சைட்டிலோ கூட  வரவில்லையே !!

 ரகசியமாக இருட்டறையில் போராடினார்களோ என்னவோ !!

  போகிற போக்கில் 2G ஊழலை வேறு எதிர்த்து இவர்கள் கடுமையாக போராடினார்களாம் !

"தோழர் மதிவாணன் தவறாக பிரச்சாரம் செய்கிறார்..... 2G பிரச்னையில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல....... 3G ஸ்பெக்ட்ரத்தை மிக உயர்ந்த அநியாய விலையில் BSNL தலையில் கட்டிய அமைச்சர் ராசாவின் செயல் பாராட்டுதலுக்குரியது " என்று கடிதம் கொடுத்து அதை முன்னாள்  முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டதை அவ்வளவு
எளிதில் மறக்க முடியாமா ! 

நம்பூதிரி BSNLEU தலைவர் அல்ல என்று கோவிந்த ராஜன் கழுவுகிறாரா !
       
 வேலைக்கு ஒருவர்,  மாலைக்கு ஒருவர் என்பது போல

சொஸைட்டி ஊழலை எதிர்த்ததிலும், நிலத்தை உறுப்பினர்களுக்கு பிரித்து தருவதிலும் தங்களுக்கு பங்கு இருப்பதாக சென்ற வாரம் புருடா விட்டார் சென்னை கோவிந்த ராஜன்.....

இந்த வாரம் தயாநிதி மாறன் ஊழலை வெளிக்கொணர்ந்ததில் தனக்கும் பங்கு உள்ளதாக அறிக்கை வெளியிடுகிறார்.....

 இனி கொஞ்ச நாட்கள் கழித்து அடுக்குமாடி கட்டி கொடுக்க
கேட்டதே நாங்கள்தான் என்று அறிக்கை வெளியிட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை......

BSNL டைரக்டர் (மனித வளம்) அவர்களுடன் சந்திப்பு !!!!!


 ஏற்கனவே  திட்டமிட்டபடி BSNL Director ( HR) அவர்களுடன் 8-10-13 அன்று
ஊழியர்கள்  பிரச்னைகள் பற்றி விவாதம் நடைபெற்றது.
SR GM (SR), SR GM (Estt), DGM (SR) ஆகியோரும் பங்கேற்றனர்.
நமது சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் இஸ்லாம், பொதுச் செயலர்
தோழர்  சந்தேஷ்வர் சிங், செயலர் தோழர் ராஜ்மௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க் கண்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன :
போனஸ் :
டைரக்டர் நமது நிறுவனத்தின் நிதி நிலையை விளக்கினார். சங்கத் தலைவர்கள், போனஸ் தொழிலாளர்களின்  அடிப்படை உரிமை என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்து போனஸை லாபத்தோடு இணைப்பது தவறு என்று வாதிட்டனர்.
போனஸ் தொகை பற்றி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம்
என்றும் வருங்காலத்திற்கான  போனஸ் திட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டி அமைக்கலாம் என்றும் கருத்து  தெரிவித்தனர்.
நமது சங்கத்தின் உணர்வுகளை  BSNL CMD அவர்களிடம் தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டது.      
Average Entries :
NEPP திட்டத்தில் சராசரி என்ற CR entry காரணமாக பல ஊழியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ளனர். ஆகவே அந்த கண்டிஷனை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதற்கான முன்மொழிவு  மேனேஜ்மென்ட் கமிட்டியின் பரிசீலனைக்கும்
முடிவுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
RM / Group D ஊழியரின் stagnation பிரச்னை :Sr.GM (SR), SR GM (SR),SR GM (EF) ஆகிய மூத்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட ஒரு  குழு இப்பிரச்னையை விவாதித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ளது.
( BSNLEU போட்ட)  NEPP, ஊதிய உடன்பாடுகள் காரணமாக சில தடங்கல்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிமட்ட ஊழியர்கள் 78.2 சத ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டும், ஒரு பைசா கூட பயன்பெற முடியாமல் அவதிப்படுகின்றனர், ஆகவே ஒரு நியாயமான தீர்வு காணப் படவேண்டும் என்று தெரிவிக்கபட்டது.
1-1-2007 க்கு பிறகு பணிக்கு வந்த ஊழியர்களின் ஊதிய இழப்புப் பிரச்னை :
இளம் JAO / JTO ஊழியர்க்கு இது போன்ற பிரச்னை தீர்க்கப்பட்டது எடுத்துக் காட்டப்பட்டது. ஒரு வாரத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு கானப்படும் என்று உறுதி அளிக்கபட்டது.
BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வுக்கால பலன்கள் பிரச்னை :
  SR GM (Estt) விரைந்து பிரச்னையை தீர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
 TTA Recruitment Rules மாற்றம் :
தேவையான மாற்றங்கள் விரைவில் செய்யப்படும். சங்கங்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்
Regularaisation of Offg JTOs.: அதற்கான பணி நடந்து கொண்டுள்ளது.
JTO தேர்வு முடிவுகள் :
விரைந்து வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
   மற்ற பிரச்னைகள் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.   

   

Friday, October 4

நம் நக்கீரன்
குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே! இப்படி சொல்வது எளிது. ஆனால் தனது துறையில் அமைச்சராக இருந்தவர் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தி அதன் விளைவாக தனது ஓய்வூதிய பலன்களை இழந்து நிற்கும் தோழர் மதி இந்திய மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துக்கள்.

From Today's Times of India
    (timesofindia.indiatimes.com)

BSNL man loses pension for exposing Dayanidhi Maran's illegal telephone exchange
Jayaraj Sivan, TNN | Oct 3, 2013, 01.15 AM IST


CHENNAI: The whistleblower, who exposed the secret telephone exchange set up by former Union telecom minister Dayanidhi Maran at his Boat Club residence in Chennai, was a BSNL subdivisional engineer, whose pension has now been stopped on disciplinary grounds.

CK Mathivanan carried out a campaign within BSNL against Maran for three years for alleged misuse of infrastructure to facilitate free transmission of data and visuals for a television channel owned by Dayanidhi's elder brotherKalanithi Maran.

After retiring in June 2013, Mathivanan found that he was among the staffers who were penalized for an agitation against superiors, including those under whose names Maran was allotted 323 ISDN lines. Mathivanan is yet to receive his pension, but the fact that his actions helped expose a Rs 440-crore revenue loss to the PSU is a matter of his satisfaction.

'Feud in DMK exposed scam'

Today, the National Federation for Telecom Employees deputy general secretary says he was relieved when he heard the news that the CBI had filed an FIR in the case. His modesty does not permit him to take credit for it, though. "In fact, it was not I who exposed the scam. It got exposed because of the feud in the DMK," he told TOI.

According to him, Maran's exchange was secretly set up by the BSNL Chennai circle office in 2007. "I happened to see a file in which then general manager (operations) G Selvam had written that other than himself, chief general manager (CGM) and deputy general manager (operations), no one else should come to know about the 323 lines being provided at Maran's house. It was a state-of-the-art exchange, which was connected by just one pair of optical fibre cables. It could carry huge amount of data and visuals at very high speed," said Mathivanan.
After a preliminary probe, a CBI team had filed a report recommending action against Maran and senior BSNL officials. But the departmental nod remained elusive. The issue came back into focus after a PIL was filed in Supreme Court in 2012 seeking action against the former Union minister.

Trouble had started for the trade unionist in September 2011, when he, along with 100 colleagues, protested against former BSNL CGM MP Velusamy (in whose name the 323 lines were allotted) visiting BSNL Chennai circle headquarters after his retirement.

"We had information that he had visited CGM's office several times to destroy files pertaining to the secret exchange. The new CGM, A Subramaniam, acted with a vengeance against us. Seventy-eight people faced a break in their service. I was given the maximum penalty, which would have led to my dismissal or compulsory retirement. The next CGM allowed me to retire, but recommended a cut in my pension. BSNL CMD, however, did not accept the recommendation. The CMD referred the case back to the CGM for review and it is pending there," said Mathivanan.

His prayer to the CBI is that it should expand the scope of its investigation to find out whether such secret exchanges were set up in other parts of the country as well. "What BSNL has lost is huge money. It (Rs 440 crore) is adequate to pay minimum bonus to 2.89 lakh employees of BSNL for four years in a row. It should be recovered from Maran," Mathivanan said.

Wednesday, October 2

அவசர சட்டம் வாபஸ்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!


    எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வகை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவும் வாபஸ் பெறப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ. க்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

     இந்த உத்தரவின்படி தனது பதவியை இழந்த முதல் காங்கிரஸ் எம்.பி.  ரஷீத் மசூத் ஆவார். திரிபுரா மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் தகுதி இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பதவியிழந்த முதல் எம்.பி. இவர்தான்.

    அடுத்து பதவி இழக்கப் போகிறவர் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இவர் குற்றவாளி என2 தினங்களுக்கு முன் ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட் தீர்ப்பளித்தது. இவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே இவரும் தனது எம்.பி. பதவியை இழக்கிறார்.

     சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதாவது குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் வகையில் மத்திய அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்து அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஜனாதிபதி அதில் கையெழுத்திடாமல் 3 மத்திய அமைச்சர்களை அழைத்து அது பற்றி விளக்கம் கேட்டார். மேலும் சட்ட நிபுணர்களையும் அவர் கலந்து ஆலோசித்தார்.

 இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி மன்மோகன்சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றி ஒரு பரபரப்பான கருத்தை சொன்னார். அதாவது இந்த அவசர சட்டம் ஒரு முட்டாள்தனமான சட்டம். இதை மத்திய அரசு கொண்டு வந்தது தவறு. இந்த சட்டத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ராகுல் காந்தி ஒரு கருத்தை சொல்ல அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 அது மட்டுமல்ல, மன்மோகன்சிங் அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.  நேற்று காலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் பிரதமர் சந்தித்து பேசினார்.

 இதனிடையே நேற்று மாலை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது சர்ச்சைக்குரிய அவசர சட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற வகை செய்யும் இந்த அவசர சட்டத்தை வாபஸ் பெறுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 மேலும் இது தொடர்பான மசோதாவையும் திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டதால் இனிமேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழப்பது உறுதி.  முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடிய அக்கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்புகள் விவகாரம்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு!!

சென்னையில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இருவர் மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

குருமூர்த்தி வழக்கு: இது குறித்து சிபிஐக்கு 2007-இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

ஆகஸ்ட் மாதம் சோதனை: இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற வேலுசாமிக்கு சேலம் சூரமங்கலத்தில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு சிபிஐ குழு சோதனை நடத்தியது. அப்போது வேலுசாமி வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் வாழும் தனது மகனுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடைமுறைகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்புக் குழு தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான புகார்களை விசாரித்து வந்தது. இதன் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன் மீதும், அவர் தொடர்புடைய தனியார் நிறுவனம், பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய சட்டத் துறையின் கருத்தை சிபிஐ கேட்டிருந்தது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் குருமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இம் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நீதிமன்றத்தில் விசாரணை: இந் நிலையில், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, October 1

காங்., எம்.பி., மசூத்துக்கு 4 ஆண்டு சிறை; பதவியை இழக்கும் முதல் எம்.பி!!
மருத்துவ கல்லூரியில் தகுதி இல்லாத மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் காங்., எம்.பி. ரசீஷ் மசூத்துக்கு இன்று4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தண்டனை பெற்றால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது உள்ளிட்ட சட்ட நெருக்கடியை சுப்ரீம் கோர்ட் அறிவித்த பின்னர் முதன் முறையாக தகுதி இழக்கும் நபர் மசூத் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஊழல் வழக்கில் முதன் முதலாக பதவி இழக்கிறார்.

கடந்த 1990 - 91 ல் மத்திய சுகாதார துறை இணை அமைச்சராக இருந்த மசூத் , இந்நேரத்தில் திரிபுரா மருத்துவ கல்லூரியில் மத்திய அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தி சட்ட மீறல் கையாண்டு தகுதி இல்லாதவர்களுக்கு சேர்க்கைக்கு ஏற்பாடு செய்தார். இதன் மூலம் ஆதாயம் பெற்றார் . இதனையடுத்து இவர் மீது லஞ்சம், ஊழல், சதி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து போதிய ஆதாரங்கள் திரட்டி இவர் குற்றவாளி என நிரூபித்தது.



The IDA increase with effect from 1st October 2013 will be 6.6%, i.e., a total IDA of 85.5%.
இனிமையான சொஸைட்டி செய்திகள் !
இன்று சொஸைட்டி தலைவர் திரு எஸ்.வீ ரராகவன் தலைமையில் நடைபெற்ற RGB கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 சாதாரண  கடன் Rs. 4 லட்சத்திலிருந்து  Rs.5 லட்சமாக உயர்த்தப்படும்.
இது ஜனவரி 2014 இறுதியில் அமலாகும்.

வட்டி விகிதம் 16.5 % லிருந்து  15.5 % ஆக குறைக்கப்படும். இது அக்டோபர்  2013 முதல் அமலாகும்.

2012-13 ஆண்டிற்கான  டிவிடென்ட்  12 %.இது அக்டோபர் 2013 சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்யப்படும். லோன் இல்லாதவர்களுக்கு செக் மூலம் வழங்கப்படும்.

சொஸைட்டி உறுப்பினர்களின் குடும்ப நல இன்சூரன்ஸ் (FWS) தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அதே சமயம் மாத சந்தா தொகை ரூ 600/- லிருந்து ரூ.800/- ஆக உயர்த்தப்படும்.

     NFTE-BSNL, FNTO, TEPU, SEVABSNL  உள்ளிட்ட சங்கங்களின்   கோரிக்கைகளை ஏற்று நல்ல சாதகமான முடிவுகளை எடுக்க வழிவகுத்த தலைவர் திரு.S.வீரராகவன் மற்றும் இயக்குனர் குழுவிற்கு நமது பாராட்டும் நன்றியும் !   

        தகவல் :தோழர் அன்பழகன், மாநில அமைப்புச் செயலர்,NFTE(BSNL)
                            RGB உறுப்பினர் கடலூர்
.