WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, October 1

காங்., எம்.பி., மசூத்துக்கு 4 ஆண்டு சிறை; பதவியை இழக்கும் முதல் எம்.பி!!
மருத்துவ கல்லூரியில் தகுதி இல்லாத மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் காங்., எம்.பி. ரசீஷ் மசூத்துக்கு இன்று4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தண்டனை பெற்றால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது உள்ளிட்ட சட்ட நெருக்கடியை சுப்ரீம் கோர்ட் அறிவித்த பின்னர் முதன் முறையாக தகுதி இழக்கும் நபர் மசூத் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஊழல் வழக்கில் முதன் முதலாக பதவி இழக்கிறார்.

கடந்த 1990 - 91 ல் மத்திய சுகாதார துறை இணை அமைச்சராக இருந்த மசூத் , இந்நேரத்தில் திரிபுரா மருத்துவ கல்லூரியில் மத்திய அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தி சட்ட மீறல் கையாண்டு தகுதி இல்லாதவர்களுக்கு சேர்க்கைக்கு ஏற்பாடு செய்தார். இதன் மூலம் ஆதாயம் பெற்றார் . இதனையடுத்து இவர் மீது லஞ்சம், ஊழல், சதி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரித்து போதிய ஆதாரங்கள் திரட்டி இவர் குற்றவாளி என நிரூபித்தது.

No comments:

Post a Comment