WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, November 12

தொலைத்தொடர்பு துறையில் மற்றொரு ஊழல்: பிரதமருக்கு யஸ்வந்த் சின்கா எச்சரிக்கை!!


தொலைத்தொடர்பு துறையில் ஸ்பெக்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மற்றொரு ஊழல் மற்றொரு ஊழல் நடைபெற்றுள்ளதாக  பாஜக தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்கா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

 அந்த கடிதத்தில் தற்போது திடீரென குறைக்கப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் விலை குறைப்பு சில நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. டிராய் பரிந்துரைகளின் படி 1800mhz  பேண்டின் விலை ரூ.2376 கோடியிலிருந்து ரூ.1496 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது 37 சதவீத விலைகுறைப்பாகும்.

இதனிடையே மும்பை தில்லி உட்பட பெருநகரங்களில் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலைக்குறைப்பால் ரூ.27,000 கோடி வரை கருவூலத்திற்கு இழப்பு ஏற்படும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment