WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, February 13

இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது!!

இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்ய ஒப்பந்தம் பெறுவதற்காக ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஃபின்மெக்கனிக்கா நிறுவனத்தின் தலைவர் கியூசெப் ஒர்சி இத்தாலி போலீஸôரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.




பின்மெக்கானிகாவின் விமானம்

இத்தாலியின் விமானத் தயாரிப்பு மற்றும் ஆயுதத் தளவாட நிறுவனமான பின்மெகானிகாவின் தலைமை அதிகாரி இந்தியாவுடன் தொடர்புடைய ஒரு பரிவர்த்தனையில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற தலைமை அதிகாரி கியுசேபி ஒர்சி லஞ்சம் கொடுத்துள்ளார் என்ற புகார் தொடர்பில் பல மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வி.ஐ.பி.களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர்கள் வாங்கியதில்
இந்தியர்களுக்கு ரூ.400 கோடி லஞ்சம்!!


 இந்திய ராணுவத்துக்கு ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர்களை விற்பதற்காக இந்தியர்கள் சிலருக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக இத்தாலியின் மிகப்பெரிய ராணுவ தளவாட நிறுவனத்தின் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் உள்ள பின்மெக்கானிகா என்ற நிறுவனம், ராணுவ தளவாடங்கள் மற்றும் விமானங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனமாகும்.

No comments:

Post a Comment