WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, September 30

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரும் குற்றவாளிகள்தான்  என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996ம் ம் ஆண்டு  முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 38 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், சிபிஐ லல்லு பிரசாத் உள்ளிட்ட 45 பேர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும் குற்றம் பற்றிய தண்டனை குறித்த விவரங்களை பின்னர் தனியாக வரும் வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். அதிக பட்ச தண்டனையாக 7 வருட சிறை  தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற புதிய விதிமுறையின் படி அவருடைய அமைச்சுப் பதவிகளும் உடனடியாக பறிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.


 குற்றவழக்கில் சிக்கியுள்ள 1420 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்!!


லல்லு பிரசாத் யாதவ் போல நாடு முழுவதில் 162 எம்.பி.க்கள் 1258 எம்.எல்.ஏ.க்கள் என 1420 பேர் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், நல அபகரிப்பு, லஞ்சம் போன்ற குற்றவழக்குகளில் சிக்கி உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்கு மீதான தீர்ப்புகள் அடுத்தடுத்து வர உள்ளன. லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் 64 சதவீத எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்கில் உள்ளனர்.

லல்லு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

No comments:

Post a Comment