WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, January 10


ஊழல்களை அம்பலப்படுத்தும் WhistleBlower 

C K .மதிவாணன் அவர்களுக்கு பாதுகாப்பு

 தரவேண்டும் ! 

இரு நல்ல உள்ளங்கள் நீதி மன்றத்தில் 

வலியுறுத்தல் ! 

NFTE-BSNL சங்க அகில இந்திய துணைச் செயலர்  தோழர் சி.கே. மதிவாணன் அவர்கள் தயாநிதி ,மாறன்  சன் டிவிக்கு கள்ளத்தனமாக 323 ISDN இணைப்புகளை வழங்கியதால் BSNL நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை தைரியமாக வெளிக்கொணர்ந்த காரணத்தால் பழி வாங்குதலுக்கு ஆட்படுத்தப்பட்டார். பென்சன் தொகையை வழங்காமல் பழிவாங்கியது,  அவருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 76 தோழர்களுக்கு FR17A தண்டனை வழங்கி நிர்வாகம் பழிவாங்கியது.     

  அதை கேள்விப்பட்ட இரண்டு டெல்லி வழக்கறிஞர்கள் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் தமிழகத்தை சர்ந்த சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் திரு. என்.ராஜாராம் மற்றும் ட்ராபிக் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதில் ஊழலை வெளிக்கொணர்ந்த தோழர் சி.கே.எம் மற்றும் அவருக்கு துணையாக செயல்படும் அவரது சகாக்களுக்கு, (Whistleblowers Act) ஊழலை உரத்து கூறுவோர்க்கு  பாதுகாப்பு சட்டப்படி  அரசு பாதுக்காப்பு தர வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளனர்.


  சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதில் தருமாறு CBI, தமிழக உள்துறைச் செயலர், DOT, மற்றும் BSNL நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.    

No comments:

Post a Comment