WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, February 13

குண்டர்கள் அல்ல ! அணுக்கத்தொண்டர்கள் !!
குப்பைகள் அல்ல ! சங்கம் காக்கும்  கோமேதகங்கள் !!! 


சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்திற்குமிடையே ஒருங்கினைப்பு  அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஜபல்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட  சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில சங்கங்களைச் சார்ந்த புதிய அகில இந்திய சங்க நிர்வாகிகளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழாவினை ஏற்பாடு  செய்து பெருந்தன்மையோடு அதற்கு தமிழ் மாநிலச் செயலர்  பட்டாபிராமனையும் அழைத்தார் தோழர் மதிவாணன். 

ஆனால் பட்டபிராமனின் ரகசிய திட்டமோ ஓற்றுமையே வரக் கூடாது என்பதுதான். அதனால்தான், சேலத்தில் அதைவிட பிரம்மாண்டமான விளக்க  கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி அந்த கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கி நின்றார். 

 தனது நம்பிக்கைகுரிய மூத்த தோழன் சொன்ன அறிவுரையை புறந்தள்ளினார். ஒற்றுமை வராமல் இருக்க,    சென்னை  தொலைபேசி  மாநில சங்கத்தை வம்புக்கு இழுத்து, பிரச்னைகளை உருவாக்கி, பிளவை நிரந்தரமாக்குவதற்காகத்தான்  மதுரையில் STR  கூட்டத்தை நடத்தி சென்னை தொலைபேசியைச் சார்ந்த அன்பழகனை மாவட்டச்  செயலராக்கினார்  பட்டாபிராமன்.

பல மாதங்கள் பொறுமை காத்த சென்னை தொலைபேசி மாநிலத் தோழர்கள், தமிழ் மாநில சங்க செயற்குழுவிற்கு நியாயம் கேட்டு வந்தார்கள்.  சங்கத்தை காக்கும் அந்த அணுக்கத் தொண்டர்களை குண்டர்கள் என்று வேலுர் வெப் சைட்டில் எழுதியுள்ளனர். 

குப்பைகள் என்று காரைக்குடியார் பகன்றுள்ளார்.

 அவர்கள் குண்டர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...........

    சிறிது யோசித்துப் பார்ப்போம் ! 

அரங்கத்திலிருந்தவர்கள் அடிவாங்காமல்  இருந்திருப்பார்களா ?

பல மண்டைகள் உடைந்திருக்காதா !!  

காயமின்றி அனைவரும் ஊர் திரும்பி இருக்க முடியுமா !? 

காவல் துறையினரை அழைத்தது யார் ? பட்டாபிராமன்  மற்றும் முரளி தானே !

காவல் துறையினரிடம் முரளி மூக்குடைபட்டது  மறந்து விட்டதா !? 

பிரச்னையை புரிந்து கொண்ட  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் " சென்னை தோழர்கள்  தவறாக எதுவும் செய்யவில்லை ! சென்னைக்காரரை (அன்பழகனை)  நீங்கள் வெளியேற்றினால் அவர்கள் அமைதியாக சென்றுவிடுவார்கள் !! " என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களை  திரும்ப  அழைத்துச் சென்று விட்டார்  !

காரைக் குடி யார் எழுதிய வரிகள்:  

" பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?.."..


குப்பைகளை வெளியேற்றினோம் என்று கூறி உண்மையை உடைத்து விட்டார் காரைக் குடி யார் !

அந்த 70 பேர் உண்மையிலேயே குண்டர்களாக  , இருந்திருந்தால்,

மதுரை தோழர்களாலேயே விரட்டி அடிக்கப்பட்ட இரண்டெழுத்துவில்லன்  ஜாடை காட்டிய பிறகு, காரைக்குடியார், ,நாகர்கோவில்  ஜோசப்,  கடலூர் இளங்கோ போன்ற சிலரால் " அவர்களை  குப்பைகளைப் போல தள்ளினோம்"  என்று காரைக் குடியார் எழுதியுள்ளாரே !! அது  நடந்திருக்குமா! சாத்தியப்பட்டிருக்குமா !!

கெட்டிக்காரன் புழுகு எட்டே நாள் என்பதுபோல, வேலூர்காரரின் 
புழுகை தோலுறித்து காரைக் குடி யாரே, தன்னை அறியாமல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்... 

அவர்கள் குண்டர்கள் அல்ல ! குப்பைகள் என்று !!

நம்மை பொறுத்தவரை அந்த 70 பேர் உண்மையிலேயே குப்பைகள் அல்ல 
                          சங்கம் காக்கும்  கோமேதகங்கள்  !!

No comments:

Post a Comment