WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, February 12

   முற்பகல் செய்யின் ......

தோழர் மாலி மாநிலச் செயலராக பொறுப்பேற்ற பிறகு நடந்த  முதல் மாநில செயற்குழு, ஜுன் 2003ல் சென்னையில் நடந்தது.

செயற்குழு  கூட்டம் நடந்த இடம் : சென்னை CGM அலுவலக மனமகிழ் மன்றம்.

 அதுவரை எந்த சங்கமும் அங்கு கூட்டம் நடத்த அனுமதிக்கப் பட்டதில்லை...... 

மிகவும் அமைதியாக கூட்டம் நடக்கும் என்ற உத்திரவாதத்தோடு  
சிறப்பு அனுமதியைப் பெற்றார், அப்போது CGM அலுவலக மாவட்ட செயலராக இருந்த தோழர்.ஸ்ரீராம்.

கூட்டம் துவங்கியவுடன்  point of order என்று பிரச்னையை கிளப்பினார், அப்போது மாநில  உதவிச் செயலராக  இருந்த தோழர் ஆர்.பட்டாபிராமன் .

மாநிலச் செயலர் தோழர் மாலி  கொடுத்த விளக்கத்தை இறுதி விளக்கமாக ஏற்க முடியாது என்று  மைக்கை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு ருத்ர  தாண்டவமாடினார் பட்டாபிராமன்.

மாநிலச் செயலர் கொடுத்த விளக்கத்திற்கு மாறாக, பட்டாபிக்கு ஆதரவாக ரூலிங் கொடுத்தார் மாநிலத் தலைவர் தமிழ்மணி........ 

" மாநிலத் தலைவர் என்ன பாகிஸ்தானின் சர்வாதிகாரி 
முஷாரப்பா ? சங்க விதிகளுக்கு  முரணாக ரூலிங்க் தர முடியாது 
என்று கேள்"  என்று அருகில் இருந்த தோழர் சுப்பராயனுக்கு  
வழி காட்டினார் அப்போது சம்மேளனச்  செயலராகவும் மாநில 
துணைச் செயலராகவும் பொறுப்பு வகித்த தோழர் ஆர்.கே.

  அந்த செயற்குழுவில்,  களேபரத்திற்கு தலைமை ஏற்றவர் 
வேறு யாருமல்ல  ...... 

     சாட்சாத்  பட்டாபிராமன்தான்........

ஒரு சில நிமிடங்களில் CGM அவர்களிடமிருந்து உத்திரவு வந்தது, 

 " பட்டாபி கோஷ்டி ஏற்படுத்திய களேபரம் காரணமாக  மனமகிழ் மன்றத்தில்  சங்க கூட்டம்  நடத்த  கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது...... அனைவரும் உடனடியாக வெளியேற 
வேண்டும் "  என்று..........

   முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது  இதுதானோ !

களேபரங்களுக்கு ( 12-6-2003) அன்றும்  ( 10-2-15) இன்றும் காரணம், 
 தனது மூத்த தோழரின்  ஆலோசனைகளைக் கூட மதிக்காமல்
 " தான்  பிடித்த முயலுக்கு மூணே கால்" எனும் 
பட்டாபிராமனின்   ஆணவப் போக்கே !  

      

No comments:

Post a Comment