WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, June 13

சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா !!


நித்யானந்தா இன்று கர்நாடகத்தில் உள்ள ராம்நகரா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில்  இன்று சரண் அடைந்தார். கர்நாடகக் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று சரண் அடைந்துள்ளார். 
07.06.2012 அன்று பெங்களூருவில் உள்ள அவரது ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களுக்கும் நித்யானந்தாவின் சீடர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு, நித்யானந்தா மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற நித்யானந்தாவின் மனுவை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் திரும்பப் பெற மறுத்து விட்டது. 


நான்கு நாட்களாக தலை மறைவாக இருந்த நித்யானந்தா இன்று சரண் அடைந்துள்ளார்.

No comments:

Post a Comment