WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, November 15

NFPTE -இன் வைரவிழாவை ஒட்டி தோழர்.மதிவாணன் எழுதி உள்ள கட்டுரை...


நமது தாய் சங்கமாம் NFPTE 24/11/1954. அன்று தொடங்கப்பட்டதுஅதன்வைரவிழாவை கொண்டாடுவதில் நாமெல்லாம் பெருமை கொள்வோம்.
1954 முதல் 2014 வரை NFPTE ல் இந்த 60 ஆண்டுகளில் தபால் – தந்திஎன்பது 1985 ஆண்டில் தபால் துறை தனியாகவும் தொலைதொடர்புஎன்பது தனியாகவும் பிரிக்கப்பட்டது.  2000 ஆண்டில் BSNL அரசின்நிறுவனமாக மாற்றம் பெற்றதுஎது எப்படி என்றாலும் NFTE – BSNLசங்கம் தான் NFPTE சங்கத்தின் நேரடி வாரிசு என்பதில் பெருமைகொள்கிறோம்.
அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின்மூளையில் உதிர்ந்த அபூர்வ குழந்தை தான் NFPTE என்று சொன்னால்அது மிகையல்ல. 1949 போராட்டத்தின் கசப்பான அனுபவத்தின்காரணமாக தபால், RMS, தந்திபொறியியல் பிரிவு மற்றும்நிர்வாகப்பிரிவு இணைக்ப்பட்டும் ஒரு சம்மேளனமாக உருவானது.
இந்திய அளவிலான அனைத்து ஒன்பது சங்கத்திற்கும் கட்டாயமானஆனால் எந்த ஒரு சங்கத்தையும் நீக்கவோ (விலக்கவோ இயலாதசம்மேளனமாக NFPTE விளங்கியதுஇணைந்த ஒன்பது கரங்கள் என்பதுஒன்பது சங்கத்தை குறிப்பதாக அமைந்திருந்ததுஅந்த புனிதமானஇணைந்த ஒன்பது கரங்கள் சின்னத்தை  NFTE –BSNL இன்றைக்கும்தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1954க்கும் 1969 க்கும் இடைப்பட்ட 15 ஆண்டுகளாக NFPTE மட்டுமே P & Tதுறையின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்தது. P & T தொழிற்சங்கவரலாற்றின் இந்த பொற்காலத்தில் தான் சாதனைகள்பலநிறைவேற்றப்பட்டனமூன்றாம் பிரிவு நான்காம் பிரிவு என்றபாரபட்சம் நீக்கப்பட்டது.  அனைத்து சலுகைகளும்வலிமையான போராட்டதின் காரணமாக பெறப்பட்டு அது அனைத்துதொழிலாளிகளுக்குமானதாக மாற்றம் பெற்றது.
குறைந்தபட்ச ஊதியமாம் ரூபாய் 314/- என்பதை வலியுறுத்திதேசியம்தழுவிய  வேலைநிறுத்தம் 19-09-1968ல் அனைத்து மத்திய அரசுஊழியர்களின் சார்பாக நடைபெற்றதுபோராட்டத்திற்கு எதிராகஅன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அதிகார வன்முறையைகட்டவிழ்த்துவிட்டார்தற்காலிக ஊழியர்கள் சுமார் 50,000 பேர் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்NFPTE குறிப்பாக E-3 & E-4 சங்க தோழர்கள்பழிவாங்குதலுக்கு ஆளானார்கள்NFPTE அங்கீகாரம் பறிக்கப்பட்டது.அரசின் ஆதரவுடன் INTUC துவங்கப்பட்டது. 1969 ல்ஆளும் அரசின்ஆசைக்குழந்தையாக FNPTO உதயமானது P&T தொழிற்சங்க வரலாற்றில் அது ஒரு கறுப்புதினம் என்றால் அது மிகையல்ல.
அனைத்தையும் தாண்டி தோழர்.ஞானையா மற்றும் ஓ.பி.குப்தாஇவர்களின் 6 நாள் உண்ணாவிரத போராட்டத்தின் (19-09-1969 TO 25-09-1969)அடிப்படையில் தொழிற்சங்க அங்கீகாரம் மீண்டும் பெறப்பட்டது.
1975 ல் இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலத்தில் பிறதொழிற்சங்கங்கள் அரசின் அடக்குமுறைக்கு பயந்து இருந்தபோதுபஞ்சப்படி மற்றும் பிற சலுகைகளுக்காக NFPTE தொடர்ந்து போராடியது.எரிச்சலுற்ற இந்திராகாந்தி அம்மையார் NFPTE மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார்நமது தொழிற்சங்க பத்திரிக்கையாம்
 “P&T Labour“ அரசின் தொழிலாளர் விரோதகொள்கைகளை விமர்சித்து எழுதியது என்ற காரணத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவகங்களில் வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டது என்பதை பெருமையுடன் இன்றும் நினைத்துப் பார்க்கலாம்.
ஜனதா அரசின் காலத்தில், BPTEF என்ற BMS ஆதரவு தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றதுஅதன் பிறகு வந்த அரசுகள் எல்லாம் அரசியல் அடிப்படையில் தொழிலாளர்களை பிரித்து வைத்த காரணத்தால் ஒட்டுமொத்த கூட்டுபேர சக்தி என்பது பலவீனப்பட்டது.
தோழர்கள் ஞானையா,  குப்தா போன்றவர்களின் தலைமையில் போனஸ் என்பது நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ED மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டதுபதவி உயர்வுஒரு லட்சம் ஊழியர்கள் பணிநிரந்தரம், RTP நிரந்தரம் JCM அமைப்பு போன்ற பல்வேறு சாதனைகள் உண்மையாயினNFPTE -ன் கடைசி கவுன்சில் கூட்டம் கொல்கத்தாவில் 1986 ம் ஆண்டு நடைபற்றது.
நான் அதன் பிரதிநிதியாக அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் கவுன்சிலர் என்ற முறையில் மூன்றாம் பிரிவு ஊழியர் சங்கத்தின் சார்பாக பங்கேற்றேன். என்னுடன் தோழர்.சுப்பராயன் மற்றும் தோழர் ஈரோடு மாலி ஆகியோர் கலந்து கொண்டதை பெருமையுடன் நினைவு கூர்கிறேன்..  

தோழர்.ஓ.பி.குப்தா  (NFPTE-ஐ உருவாக்கிய சிற்பி) அந்த கூட்டத்தில் அதனை பிரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த தலைவர்கள் கே.எல்.மோசா, ஆதி மற்றும் என்.ஜே.ஐயர் ஆகியோரிடம் பிரிக்க கூடாது என இருகரம் கூப்பி மன்றாடியது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஆனால் அந்த துயரநாளும் வந்தது. 1986-இல்  NFPTE சங்கம் NFTE  andNFPE என்ற இரண்டாக உடைந்தது.நான் கடைசி வரை அது உடையாது என்ற அசையாத நம்பிக்கையுடன் இருந்தேன்.

NFPTE என்பது இப்போது வரலாறு ஆகிவிட்ட்து. 60 வருடங்களை நாம் கடந்து விட்டோம்.  NFPTE  இன்று இல்லாவிட்டாலும் அதன் சுவையான நினைவுகளையும் நடத்திய போராட்டங்களையும் இந்த வைரவிழா நடக்கும் நாளில் நினைவு கூர்வோம். அந்த பாரம்பரியங்களோடு தொழிலாளியின் ஒற்றுமைக்கு அது கொடுக்கின்ற செய்தியாக எடுத்துக் கொள்வோம்..  

---சி.கே.மதிவாணன்
மத்திய செயற்குழு உறுப்பினர்
NFTE-BSNL
தமிழாக்கம்:காஞ்சி வலைதளம்        

No comments:

Post a Comment