WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, November 13

2010ஆம் ஆண்டு மசில் போலி என்கவுண்டர் : 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை; சலுகைகள் பறிப்பு.....


2010ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் மசில் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 3 இளைஞர்களை சுட்டுக் கொன்ற வழக்கை விசாரித்து வந்த ராணுவ நீதிமன்றம், 2 மூத்த அதிகாரிகள் உட்பட 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாதிகள் என்று கூறி அப்பாவி இளைஞர்கள் 3 பேரை என்கவுண்டர் செய்த ராணுவ வீரர்களின் இந்த மோசமான செயலால் காஷ்மீர் எல்லையில் சுமார் 2 மாதங்களுக்கும் மேல் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இது குறித்து விசாரித்த ராணுவ நீதிமன்றம், சம்பவத்தில் ஈடுபட்ட 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், அவர்களது அரசு சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment