WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, March 3

NFTE-CHENNAI TELEPHONES
BSNL-MTNL  MERGER OUR VIEW POINTS
ஊழியர் சங்கங்களோடு கலந்து பேசாமல் BSNL & MTNL ஆகிய இரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் அரசு தன்னிச்சையாக இணைக்கும்  வழிமுறையை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே வேளையிலே, இத்துறையில் இரண்டு அரசு நிறுவனங்கள் செயல்பட வேண்டியது இல்லை என்பதே நமது ஆழமான கருத்து.

ஆகவே, இது குறித்து நிர்வாகம் சங்கங்களோடு கலந்து பேசும்போது, கவனிக்க வேண்டியகீழ்க்கணட ஆலோசனைகளை முன் வைக்கிறோம் .....

 1. BSNL
மற்றும் MTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டங்களில்  பாரபட்சம் கூடாது. ( No discrimination ) 

MTNL
ல் பணியாற்றுவோர்க்கு BSNLல் பணியாற்றும் erstwhile DOT    ஊழியர்க்கு வழங்குவதுபோல, அரசு பென்சன் வழங்க சமீபத்தில் அமைச்சர்கள் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.ஆனால், 1-10-2000 க்கு பிறகு வந்த ஊழியர்க்கு  அரசு பென்சனும் கிடையாது, GPF  திட்டமும் கிடையாது. இணைப்பு வரும்போது இந்த பாரபட்சம்  நீக்கப்பட  வேண்டும்.

 2.
தற்போது MTNLல் பணியாற்றுவோர், BSNLல் பணியாற்றுவோரைவிட அதிகமான சம்பளம் பெறுகின்றனர். இந்த பாரபட்சம் நீக்கப்படவேண்டும்

3.
பங்கு மார்கெட்டில் விற்கப்பட்ட MTNL  பங்குகளை அரசு திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.   (Buy back th shares of MTNL). புதிய நிறுவனம் 100% அரசு நிறுவனமாக, ஷேர் மார்கெட்டில் லிஸ்ட் செய்யபடாத (unlisted ) நிறுவனமாக இருக்கவேண்டும்.

4. BSNL & MTNL
ஆகிய இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டம் அடைவதால், அரசு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு சிறப்பு பொருளாதார சலுகைகள் வழங்கிட வேண்டும்.  அதன் பிறகே இணைப்பு அமலாக்கப்
பட  வேண்டும் 

5.
இணைப்பை ஏற்றுக் கொள்ளும் முன் மேற்கண்ட பிரச்னைகளைப் 
  பற்றி சங்கங்கள் தீவிரமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண 
வேண்டும்

 
மேற்கண்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்க அரசு முன்வராத பட்சத்தில் 
FORUM தலைமை, MTNL சங்கங்களோடும் கலந்து பேசி வேலைநிறுத்த செய்திட வேண்டும்.

 
சில  விஷயங்களை வெறுமே எதிர்ப்பதால் மட்டுமே பயன் ஏதும் இராது என்பதே நமது ஆழமான கருத்து.நமது கருத்துக்கு ஃபோரம் தலைமை செவிமடுக்கும் என்று நம்புகிறோம் .

No comments:

Post a Comment