WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Wednesday, October 2

சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்புகள் விவகாரம்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு!!

சென்னையில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இருவர் மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

குருமூர்த்தி வழக்கு: இது குறித்து சிபிஐக்கு 2007-இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

ஆகஸ்ட் மாதம் சோதனை: இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற வேலுசாமிக்கு சேலம் சூரமங்கலத்தில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு சிபிஐ குழு சோதனை நடத்தியது. அப்போது வேலுசாமி வீட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் வாழும் தனது மகனுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நடைமுறைகளை சிபிஐ மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்புக் குழு தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான புகார்களை விசாரித்து வந்தது. இதன் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன் மீதும், அவர் தொடர்புடைய தனியார் நிறுவனம், பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய சட்டத் துறையின் கருத்தை சிபிஐ கேட்டிருந்தது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் குருமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இம் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நீதிமன்றத்தில் விசாரணை: இந் நிலையில், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment