WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Monday, January 14

இராணுவ ‌வீர‌ரி‌ன் தலையை மீட்கக்கோரி மனை‌வி உண்ணாவிரதம்!!


இராணு ‌வீர‌ர்களால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையைக் மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது தாயார் மற்றும் மனைவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில், ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஹேம்ராஜின் தலையை துண்டித்து பாகிஸ்தான் படைகள் கொன்றன. தலை இல்லாத அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

ஹேம்ராஜின் தலையை மீட்டுத்தரக்கோரி, அவரது தாயாரும், மனைவியும் காலவரையறற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment