WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, December 4

யாழ் பல்கலை மாணவர்களை விடுதலை செய்ய தா. பாண்டியன் வலியுறுத்தல்!!


இலங்கையில், கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து  தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையிலுள்ள யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். நான்கு மாணவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், மனித உரிமை மீறல்கள் மிகவும் கூடுதலாகியுள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மிகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் இன்றைய சூழலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இந்த செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

No comments:

Post a Comment