WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, October 4

ஊழல் சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி, பார்லி., குழுவில் இடம்!!


ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறை சென்று, ஜாமினில் வெளியில் வந்துள்ள, சுரேஷ் கல்மாடி, ராஜா, கனிமொழி ஆகியோர், பார்லிமென்ட் நிலைக் குழுக்களின் உறுப்பினர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழலில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டவர், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் இவர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதேபோல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழலில் சிக்கிய, தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோரும், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே, தற்போது ஜாமினில் வந்துள்ளனர்.இந்நிலையில், இவர்கள் மூவரும், பார்லிமென்ட்டில் உள்ள, பல்வேறு நிலைக் குழுக்களின் உறுப்பினர்களாக, நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment