WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Saturday, August 11

டெசோ மாநாடு...... வைகோ !!


சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மத்திய காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை.
கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத் தமிழரை ஆதரித்து பேசிய நாஞ்சில் சம்பத், சீமான், உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்புப்படி சிறையில் பூட்டப்பட்டனர். என் மீதும் வழக்குகள் போடப்பட்டன. எனவே பேச்சு உரிமை பற்றி குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு இல்லை.

No comments:

Post a Comment