WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Thursday, July 5

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் பிரதமர் நரசிம்மராவ்!!!


பாபர் மசூதியை கர சேவகர்கள் இடித்த அன்றைய தினத்தில் அதனை கண்டு கொள்ளாமல் பூஜை செய்துகொண்டிருந்தார் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் தனது சுயசரிதை நூஇல் எழுதியது பரபரப்புக்குள்ளாகியுள்ளது.


அதாவது நரசிம்மராவ் பாபர் மசூதியை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு அளித்தார் என்பதே குல்திப் நய்யாரின் குற்றச்சாட்டு.


குல்திப் நய்யார் "பியாண்ட் த லைன்ஸ்" என்ற சுயசரிதை நூலில் இதனை தெரிவித்துள்ளார். இது விரைவில் வெளிவரவுள்ளது.


"நரசிம்மராவ் பாபர் மசூதி இடிப்பில் மறைமுக ஆதரவளராக இருந்தார். இடிப்பின் போடு பூஜையில் உட்கார்ந்த நரசிம்மராவ் பாபர் மசூதியின் கடைசி கல் வீழ்த்து முடிந்தவுடந்தான் பூஜையை முடித்தார்" என்று குல்தீப் நய்யார் அந்த நூலில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment